புதன், 5 செப்டம்பர், 2012

உடல் வலி தீர

1) வில்வ இலையும், அருகம் புல்லும் இடித்து சாறு எடுத்து காலை-மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.

2) மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம்,நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டு வர உடல்வலி, அலுப்பு நீங்கும்.

3) முருங்கை ஈர்க்கு கஷாயம் சாப்பிட உடல்வலி, அசதி தீரும்.

4) வேலிப்பருத்தி இலைச்சாறு எடுத்து அதில் கால்படி சுண்ணாம்பு நீற்றினது 12 கிராம் போட்டு நன்றாய் கறைத்து ஒருமணி நேரம் வெயிலில் வைத்துக் குடைசல், வலி உள்ள பாகங்களில் நன்றாய்த் தேய்க்க வேண்டும் ஓருமணி நேரத்தில் வலி, குடைச்சல், மூட்டுகளில் வரும் வீக்கம், வலி நீங்கும்.

5) வேலிப்பருத்தி இலையை அறைத்துச் சிறு அடையாக செய்து நல்லெண்ணெயில் போட்டு அடை பொரிந்து மிதக்கும் வரை காய்ச்ச வேண்டும். பிறகு ஆறினதும் தலையில் தேய்த்து விட வேண்டும்.இதனால் மண்டை வலி, கபால குத்தல், மண்டை இடி இவைகள் ஒருமணி நேரத்தில் குணமாகும்.  

 6)துளசி இலை, மிளகுப் பொடி, சுக்குப் பொடி-இவைகளைத் தண்ணிரில் போட்டு காஷயமாக்கி பாலும் சர்க்கரையும் சேர்த்து பருக உடல் வலி உடனே நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக