புதன், 31 அக்டோபர், 2012

வால்மீகி இராமாயணம் உருவானது எப்படி...?


தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதே குழப்பத்திற்கு காரணம். திருடனாக இருந்த வால்மீகியை முனிவர் அந்தஸ்திற்கு கொண்டு வந்தவர் நாரதர் தான். அவரிடமே தன் கேள்விக்குரிய பதிலைத் தெரிந்து கொள்வோமே எனக் கருதி அவரை மனதால் துதித்தார்.நாரதர் அவர் முன்பு தோன்றினார். வியாசமுனிவரே! என்னை அழைக்க காரணம் என்னவோ?. முனிவர்பிரானே! என் மனதில் ஒரு கேள்வி பிறந்துள்ளது. கேட்கட்டுமா?.கேள்விகளில் இருந்து பதில்கள் பிறக்கின்றன. பிறப்பு தான் உலகின் ஜீவநாடி. கேளுங்கள், இப்போது இந்த உலகிலேயே நல்ல குணமுள்ளவர் யார்? யார் மிகுந்த தைரியசாலி? தர்மம் செய்வதில் யார் உயர்ந்தவர்? நன்றி மறக்காதவர் யார்? சத்தியம் தவறாத உத்தமர் யார்? மன உறுதியோடு திகழ்பவர் யார்? ஒழுக்கத்தை எக்காலமும் நழுவவிடாத உயர்ந்தவர் யார்? எதிரிகளுக்கும் நன்மை செய்பவர் யார்? எல்லா கலைகளையும் கற்றவர் யார்? அதீத சக்தி பெற்றவர் யார்? பார்த்த உடனேயே மனதிற்கு இனிமை தரும் இனியவர் யார்? உள்ளத்தில் பொறாமையே இல்லாதவர் யார்? யாருடைய கோபத்தைக் கண்டு தேவர்கள்கூட அஞ்சுகிறார்கள்? இப்படி பல கல்யாண குணங்களைக்கொண்ட உத்தமர் யாராவது இவ்வுலகத்தில் வாழ்கிறார்களா? என கேட்டார்.

அவரது கேள்வியை நன்றாக அசை போட்ட நாரதர், நீங்கள் கூறும் கல்யாண குணங்களைக்கொண்ட ஒரே மாமனிதர் ராமபிரான் மட்டுமே. அவர் அயோத்தி மன்னர். இக்ஷ்வாகு வம்சத்தில் அவதரித்தவர். புலனடக்கம் மிக்கவர். அவரைவிட அறிவில் சிறந்தவர்கள் இவ்வுலகில் வேறு யாருமில்லை. எப்பேர்ப்பட்ட எதிரியையும் அவர் அழித்துவிடுவார். பலம் பொருந்திய கைகள் அவரிடம் உண்டு. அகன்ற மார்பைக் கொண்டவர். எப்போதும் வில்லுடன் திரிவார். அவர் நடந்தால் உலகிலுள்ள அத்தனைபேரும் ரசிப்பார்கள். நடுத்தர உயரமுள்ளவர். அவரது மேனி கார்வண்ணம் உடையது. ஆனாலும், அம்மேனி ஒளிவீசும் தன்மை கொண்டது. அமைதியே வடிவாக இருப்பார். இந்த உலகத்தையே தாங்கும் சக்தி அவரிடம் உள்ளது. தர்மத்தை எக்காலத்திலும் கைவிடாதவர். புத்தி சாதுர்யம் அவரைப்போல வேறு யாருக்கும் இல்லை. துன்பக்கடல் சூழ்ந்து வந்தாலும் இமயமலையைப் போல அசையமாட்டார். அதேநேரம், கோபம் வந்துவிட்டால் அவர் அருகே யாரும் நிற்கமுடியாது. அவரைப் பணிந்துவிட்டால் பூமாதேவியைப்போல பொறுமையின் சின்னமாகி விடுவார். செல்வத்தில் குபேரனையும் மிஞ்சுபவர். சத்தியவான். தர்மம் அவரிடம் மட்டுமே இருக்கிறது என்றார். அது மட்டுமின்றி ராமபிரானின் கதை முழுவதையும் சொன்னார்.

ராமனின் கதை கேட்ட வால்மீகி முனிவரின் கண்களில் நீர் கோர்த்தது. இப்பேர்ப்பட்ட மகான் ஒருவர் பூமியில் வாழ்கிறாரா? என் கைகள் அவரை எழுத வேண்டும். அந்த உத்தமனின் வரலாறு இப்பூமி உள்ளளவும் நிலைக்க வேண்டும், என உணர்ச்சி பொங்கக் கூறினார்.  அன்று முதல் ராமனின் நினைவைத் தவிர அவர் மனதில் வேறு எதுவுமே இல்லை. அவரை மனதில் எண்ணிக்கொண்டே தன் சீடருடன் தமசா என்ற நதிக்கரைக்கு சென்றார். நதிக்கரையில் இருந்த ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அங்கு வந்த வேடன் ஒருவன் அம்பெய்தான். ஆண்பறவை அடிபட்டு இறந்தது. பெண் பறவை கதறியது. இதைக்கண்ட வால்மீகி முனிவர் வேடன்மீது கடும் கோபமடைந்தார்.
வேடனே! இந்த ஜோடிப் பறவைகளைப் பிரித்த நீ மனதில் நிம்மதி இல்லாமல் பல ஆண்டுகள் அலைவாய், என சாபமிட்டார். உலகத்தில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தைப் பார்த்து, ராம நாமத்தை ஒரு நிமிடம் மறந்த அவர் கோபத்திற்கு ஆட்பட்டார். முனிவராக இருந்தும் அவசரத்தில் கோபப்பட்டுவிட்டோமே என வருந்தினார். அவர் சாபமிடும்போது பிரம்மதேவன் அங்கு வந்து சேர்ந்தார். வால்மீகியின் சாப சொற்கள் கூட இலக்கியத்தரத்துடன் அமைந்திருந்ததை கேட்டு ஆனந்தம் கொண்டார். இப்படிப்பட்ட இலக்கியவாதியால்தான் ராமனின் சரிதத்தை நன்றாக எழுதமுடியும் என கருதினார். வால்மீகியின் முன்பு பிரதட்சண்யமான அவர், முனிவரே! தாங்கள் இப்போது வேடனுக்கு சாபம் கொடுத்தபோதுகூட எதுகை மோனையுடன் நாதமும் சந்தமும் கலந்து சாபம் கொடுத்தீர்கள். இப்படிப்பட்ட திறமைவாய்ந்த நீங்கள்தான் புண்ணியமூர்த்தியான ராமனின் திரு வரலாற்றை மகாகாவியமாக வடிக்க வேண்டும்,என்றார்.அதன் அடிப்படையில் உருவானதே வால்மீகி இராமாயணமாகும்.

பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt.M.A
அறிவுமையம்

வெள்ளி, 26 அக்டோபர், 2012

கூந்தல் வளர்ச்சி குறிப்புகள்-10


1)முடி வளர்வதற்கு:கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

*காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

2)முடி உதிர்வதை தடுக்க:வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

*கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

*வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

3)வழுக்கையில் முடி வளர:கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

4)இளநரை கருப்பாக:நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

5)முடி கருப்பாக:ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

*காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

6)தலை முடி கருமை மினுமினுப்பு பெற:அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

7)செம்பட்டை முடி நிறம் மாற:மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

8)நரை போக்க:தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
*முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

 
9)சொட்டையான இடத்தில் முடி வளர:நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

10)புழுவெட்டு மறைய:நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.                                           

                                             பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt,M.A

செவ்வாய், 23 அக்டோபர், 2012

சகல வித்யா சரஸ்வதி மந்திரம்

                                         

                                       சகல வித்யா சரஸ்வதி மந்திரம்

  ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் வாக்கு வாகினி வாகிஸ்பரி ஐம் கிலிம் சவ்வும்  மமவாக் சித்தம் குருகுரு சுவாகா.

இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 21-நாட்கள் செபம் செய்ய வேண்டும்.

பூசை முறை: 

பால்,தேன்,மல்லிகை,புஷ்பம்,சந்தனம்,பத்தி,சூடம்,தேங்காய்,வடை,
சுண்டல் முதலியன வைத்து தீபதூபம் காட்டி செபம் செய்தால் மந்திரம் சித்தியாகும்.இதனால் தேவி தரிசனம் உண்டாகும்.அத்தேவி நம் நாக்கில் அட்சரம் எழுதும் இதனால் தானே பாடும் சக்தியும், சகல வியாகரணமும் உண்டாகும்,வேதாந்த இரகசியமும், சகல கலைஞானமும் வெளிப்படும், கவிதா சத்தியும்,வாக்கு சித்தியும் உண்டாகும் என்கிறது மலையாள மாந்திரீகம்.

             பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt,M.A                                அறிவுமையம்

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

பதினென் சித்தர்களுண்ட கற்பம் - கோரக்கர்

கோரக்கர் தனது சந்திரரேகை என்னும் நூலில் பதினெட்டு சித்தர்கள் உண்ட கற்பத்தை பற்றியும் அக்கற்பத்தைக் கொண்டு இரசவாதம்(தங்கம்) செய்யும் முறையினையும் தம் பாடலில் கூறியுள்ளார். 

 

கானென்ற காயகற்ப வாத சூட்சம்
கழறிடுவேன் பதினென் பேருண்டதாமே
உண்டதொரு கற்பமிதை யுரைப்பேனிங்கு
வண்மையுறத் திருநீற்றுச் சாறுதன்னால்
வலுவாகத் திரிநாளும் ஆட்டிப்பின்னர்
பண்டுபோல் வட்டுச் செய்து ரவியுலர்த்திப்
பாங்காகக் குக்குடமாம் புடமும் ஐந்து
செண்டு போல் இட்டெடுக்கச் சுண்ணமாகும்
சித்தர்களும் கண்டுவிட்டால் கொண்டே போவார்,
(145)

 

கொண்டவர்கள் போகாமல் இருப்பதற்கு
ஓம் அம் உம் லம் மென செபிக்கக்
கண்டுனைச் சித்தர்களும் வரங்கள் ஈவார்
உண்டிடுவாய் மண்டலமே ஆவின் நெய்யில்
உலையாது கற்றூண் போல் திரேகங்காந்தி
சண்டனில்லை வாதமெண் பதுவும் போகும்
சார்ந்திடவே புளிபோகம் அகற்றிக்காரே,
( 146 )      

 

கார்த்திடவே குண்டலிதான் வாசிதானும்
களங்கமற்று வலுவாகிச் சோதி தங்கும்
பூர்த்தியுற்றுப் பூரண்மே லமுதம் பொங்கிப்
புகழ்பெரிய ஞானசித்தன் நீயே யாவாய்
கீர்த்தியுற்றுப் பதினெண்பேர் கொண்ட கற்பம்
கூறினேன் வாதிகளே விளம்பக் கேண்மின்
நேர்த்தியுடன் சுத்தித்த வெள்ளி செம்பில்
ஈந்திடவே சிங்கிச் சுண்ணம் மாற்றெட்டாமே (148)                                           

                                                    - கோரக்கர் சந்திரரேகை
                                                            

பொருள்:

 பதினெட்டு சித்தர்களும் உண்ட காயகற்பத்தை பற்றியும் அதைக்கொண்டு இரசவாதம் செய்யும் சூட்சமத்தையும் உரைக்கிறேன் கேள்,


மிருதார் சிங்கி - 1 பலம்(35-கிராம்) எடுத்து அதில் திருநீற்றுப்பச்சிலையின் சாறு விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும், மறுநாளும் புதிய திருநீற்றுப்பச்சிலையின் சாறு விட்டு அரைக்கவும் இப்படியாக மூன்று நாட்களும் புதிய இலைச்சாறு விட்டு நன்றாக அரைத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி சூரிய ஓளியில் காயவைத்து எடுக்கவும்.

 

பின்னர் இதனை ஐந்து முறை குக்கிட புடமிடவும்(10-எருவில் எரிப்பது) பின்பு எடுத்துப்பார்த்தால் அது சுண்ணமாகி இருக்கும் இதுவே சிங்கிசுண்ணமாகும். இதை சித்தர்கள் கண்டால் எடுத்துப்போய்விடுவார்கள் , அப்படி அவர்கள் எடுத்துப் போகாமல் இருப்பதற்கு '' ஓம் அம் உம் லம் " என்று 100 உரு செபிக்க வேண்டும். இப்படி செபித்தால் உன்னை காணும் சித்தர்கள் உனக்கு வரங்கள் கொடுப்பார்கள்.
இச்சிங்கி சுண்ணத்தை காலை - மாலை என இருவேளையும் பசு நெய்யில் குழப்பி ஒரு மண்டலம்(48-நாட்கள்) உண்டால் தேகம் கல்தூண் போல் இறுகும், உடலில் தேஜஸ் கூடும், எண்பது வகை வாதநோய்ளும் விலகிப்போகும். இம்மருந்தை உண்ணும் வேளையில் புளி, பெண்போகம் நீக்க வேண்டும்.


 இம்முறையில் ஒரு மண்டலம் உண்டவர்களுக்கு குண்டலினி மேல் எழும்பும்,வாசி வலுப்பெறும், உடல் சோதி மயமாய் பிரகாசிக்கும். சகஸ்காரத்திலிருந்து அமுதம் பொங்கும். இதனால் நீ பெரிய ஞானசித்தன் ஆவாய், புகழ்பெற்ற பதினெட்டு சித்தர்களும் உட்கொண்ட கற்பம் இதுவாகும்.

 

மேலும் இரசவாதிகளே உங்களுக்கு இக்கற்பம் பயன்படும் வகையினை தெளிவாக சொல்கிறேன்,கேளுங்கள். சுத்தி செய்த வெள்ளி, செம்பு இவைகளுடன் இச்சுண்ணத்தை சேர்த்து உருக்கினால் எட்டு மாற்று தங்கம் கிடைக்கும் என்கிறார் கோரக்கர்.

                        

 பகிர்வில் S.கலைச்செல்வன்.B.Litt, M.A
                                       அறிவுமையம்

வெள்ளி, 19 அக்டோபர், 2012

போகமணி இரகசியம்

ஒரு முள்ளெலி ஒன்றைப் பிடித்து வந்து அதன் வாயினுள் ஒரு பலம் (35-கிராம்) பாதரசத்தை விட்டு வாயை தைத்து சீலைமண் செய்து புதைத்து வைத்து 40-நாட்கள் சென்று பின் எடுத்துப் பிரித்தால் ரசம் கட்டி மணியாகி இருக்கும். அதை எடுத்து பூ நாகம்(மண்புழு)- 5 பலம்(175-கிராம்) அரைத்து மணிக்குக் கவசம் செய்து 10 எருவில் புடமிட்டு எடுத்தால் பிரகாசமுள்ள மணியாகும். இவ்விதம் 10 புடம் போட்டு எடுத்து பத்திரப்படுத்தவும்.இதை வாயில் அடக்கி வைத்துக்கொண்டு போகித்தால் விந்து விழாது. எத்தனை பெண்களை அணைத்தாலும் விந்து விழாது. இதனால் ஈடுகொடுக்க முடியாமல் பெண்கள் நடுங்குவார்கள். உன்னை விட்டு அரை கணமும் பிரியமாட்டார்கள் என்கிறது இந்திர ஜாலம்.

இலங்கையை ஆண்ட இராவனேஸ்வரன் கூட போகமணியை பயன்படுத்தியே பல உயர்ஜாதி பெண்களை புணர்ந்ததாக வரலாற்று குறிப்புகள் சொல்லுகின்றன.



 













பகிர்வில் S.கலைச்செல்வன்.B.litt,M.A               அறிவுமையம்

வியாழன், 18 அக்டோபர், 2012

சத்துரு வசிய மை


வெள்ளைசாரணை வேரை அவுரிச்சாற்றினால் அரைத்து புருவ மத்தியில் திலர்தமிட்டுச்செல்ல பகைவர்கள் வசியமாவார்கள்.


                                                                    பகிர்வில் சு.கலைச்செல்வன்.B.Litt,M.A

வெள்ளி, 5 அக்டோபர், 2012

ஜல தம்பனம்

 தூக்கனாங்குருவியின் கூடை கண்டுபிடித்து அது குஞ்சு பொரிக்கும் சமயம் பார்த்து குஞ்சு பொரித்தவுடன் அதன் கூடை எடுத்து வந்து நெருப்பில் போட்டு எரிக்கவும். எல்லாம் வெந்து போகும் ஆனால் ஒரு வேர் மட்டும் வேகாது.அது பார்ப்பதற்க்கு வெள்ளிக்கம்பியைப் போல் இருக்கும்.அதை எடுத்து வந்து தங்கம், வெள்ளி, செம்பு இம்மூன்றையும் சேர்த்து தாயத்து செய்து அதனுள் இவ்வேரை வைத்து அடைத்து இடுப்பில் போட்டுக்கொண்டால் தண்ணீரில் நடக்கலாம் தண்ணீர் அழுந்தாமல் தரையில் நடப்பது போல் இருக்கும்.

 

பகிர்வில் S.கலைச்செல்வன் B.litt, M.A          அறிவுமையம்

செவ்வாய், 2 அக்டோபர், 2012

காலகண்டி எட்சிணி மந்திரம்

காலகண்டி எட்சிணி மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஓம் நமோ பகவதி காலகண்டி காலரூபி சத்துருநாசினி மமகார்யம் ஸாதயஸாதய சுவாஹா.
   இந்த மந்திரத்தை அமாவாசையில் ஆரம்பித்து அமாவாசையில் முடிக்க வேண்டும். நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 30-நாட்கள் செபம் செய்ய சித்தியாகும். நிவேதனம், அடை, கோழிமுட்டை, அப்பம், பால், தேன், தேங்காய், பழம் இவைகளை வைத்து செவ்வலரி புஷ்பத்தால் செபம் செய்ய வேண்டும்.


இப்படி செய்ய 30-ஆம் நாள் தேவி தோன்றுவாள். நாம் சொல்வதை முடித்து வைப்பாள், நமது எதிரிகளை ஆட்டி வைக்கலாம். அவர்களின் குடும்பத்தை இரவு தோறும் தூங்காமல் பேய் ஆடுவதைப் போல் ஆடும்படி செய்யலாம். ஆனால் அவர்களுக்கு இரவில் நடந்த எதுவும் பகலில் நினைவில் இருக்காது.நம் எண்ணபடி எப்படிபட்ட செயலும் இத்தேவதை செய்யும். இன்னும் பல அற்புதமான செயல்கள் இதனால் சித்தியாகும் என்கிறது மலையாள மாந்திரீகம். 
                                                             
      பகிர்வில் S.கலைச்செல்வன்.B.litt,M.A                                          அறிவுமையம்

திங்கள், 1 அக்டோபர், 2012

ஞான சரநூல்


     உலக மக்கள் உய்யும் பொருட்டு சங்கரனார் திருவுளம் மகிழ்ந்து அன்னை உமா மகேசுவரிக்கு அருளிய ஞான சர நூல் இதுவாகும். இதில் வாசியினைப் பற்றி மிகத் தெளிவாக சங்கரனார் அருளியுள்ளார். எந்த வேளையில் என்ன சரம் ஓட வேண்டும். மாறி ஓடினால் என்ன செய்ய வேண்டும். காரியத் தடைகள் நீங்க எப்படி சரம் பார்த்து நாம் நடக்க வேண்டும் என்பன போன்றவை கூறியுள்ளார். எமக்கு தெரிந்த முறையில் விளக்கம் கூறியிருக்கிறோம். இதனைப் படிக்கும் அன்பர்கள் சரியான முறையில் கருத்தினைத் தெரிந்து இதனை அனுபவத்திற்கு கொண்டு வரவும். அல்லது சரியான குருவின் உதவியினைப் பெற்று அனுபவத்திற்கு கொண்டு வரவும்.


 




நூற் பயன்.
சந்திரபானிலக்கணமுங் கோளுநாளுர்
தயங்கியபக்கங்கரண மியோகவாரம்
வந்துசொல்லுஞ்சோதிடத்தை யறியாதார்கண்
மனநினைவாயறியும்வகை யுளதோவென்ன
விந்தவுடலுயிர்நிலையை யறியாதார்க்
கியாமறியவியம்புவதை யாதோவென்னிற்
பைந்தொடியேயான் சொலுஞ் (“) சரநூறன்னைப்
பரிந்துநீபாரென்று பரமன்சொல்வார்.  -- 1

 

சந்திரன்-சூரியன்-இலக்கிணம்-கோள்-நாள்-பட்சம்-கரணம்-யோகம்-வாரம் இவை முதலாக சொல்லப்பட்ட சோதிட சாத்திரத்தை அறியாதவர்கள் தங்கள் மன நினைவினால் அறியும் வழி உள்ளதோ என உமையவள் கேட்க, பைங்கொடியாளே இந்த உடல்-உயிர் நிலையை அறியோதார்க்கு நான் சொல்வது நான் சொல்லும் இந்த சர நூலை பரிவுடன் பார்க்க என்று பரமன் கூறினார்.
(“) சரம் என்பது காற்று-சுவாசம்-மூச்சு-மனம்-சீவன்-பிராணன்-ஆவி-உயிர் இவை முதலாக சொல்லப்பட்டது என அறியவும்.

 

சொல்லருநெடுங்கயிற்றின் வருணமான
சூரத்தினார் துவக்கெனுமா சீர்மந்தன்னி
னல்லாருமூக்கணாங் கயிறுகோத்து
கலந்தீங்காய்வருகின்ற நஞ்சுட்கொண்டு
பொல்லாதகாலப்பாம் புண்டுமிழ்ந்து
பூதலத்திற்பிறந்திறந்து போவரேனு
மெல்லாருமியாஞ்சொல்லுஞ் சரநூற்றன்னை
யிகழா தார்சுரர்மூங்க ரிகழ்வோர் தாமே
.  -- 2


சொல்லற்கரிய மூக்கணாங் கயிற்றின் மூலம் எருதினை கட்டுப்படுத்துவது போல சரமானது நன்மை தீமை எனும் பூர்வ ஜென்ம கர்மாவிற்கேற்ப மனிதரைக் கட்டுப்படுத்தும். அதனடிப்படையில் காலப்பாம்பானது நஞ்சினை உண்டு உமிழ்வது போல மனிதர்கள் பிறந்து இறந்து போவார்கள். நான் சொல்லும் இந்த சர நூலை இகழாமல் முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் தேவராவர். இகழ்பவர்கள் நரகத்தை அடைவர்.


ஆசன விதி
மூங்கிற்பாய்மிடிகல்லு நோய்மண்டுக்க
முறுபலகைநன்மையிலை முடைந்தபுல்லு
நீங்கிவிடும்கீர்த்திதழை மனநடுக்க
நிகரில்லைத்தொல்ஞான நிறைபுலித்தோ
லோங்கியசெல்வம்வீடு முன்குகைப்பு
லொளிர்தூசுநன்மையுயர் படந்தானென்று
தூங்கியதூக்கம்போக்கு நன்மையாகத்
துலங்கியவாதனத்திருந்து தொகைசொல்வாம்.  -- 3

மூங்கிற் பாய்--வறுமை, கல்--நோய், வெறும்மண்--நடுக்கம்--துக்கம், உடைந்த அல்லது அறுபட்ட பலகை—நன்மையில்லை, கோரை போன்ற புற்பாய்கள்--கீர்த்தி நாசம், பச்சை இலை தழை—மனநடுக்கம், மான்தோல்---ஞானம், புலித்தோல்---செல்வம், தர்ப்பை---மோட்சம், வெள்ளை துணி---தீமையில்லை இப்படியாக தீiமில்லாத நன்மையான ஆதனத்திலிருந்து சரம் பார்க்கவும். மேலும் சொல்வேன் மயில் போன்ற அழகிய பெண்ணே.

சரம் பார்க்கும் மார்க்கம்.சொல்லியவாதனங்கள்பல வவற்றுணன்றிற்
றுய்யபங்கயாதனமா யிருந்துதோன்று
மல்லறுத்தேகமன மாக்கியொட்டி
யானபந்தபிரணாயா மங்கள்பண்ணி
மெல்லையினுந்தீயின்கீழா மெழுத்தைப்பற்றி
எழுபத்தீராயிரநா டியிலீரைந்து
நல்லனவாயதின்மூன்று நாடியோடு
நலந்தரும்பேரவ்வெழுத்தை நவிலப்பாரே.  -- 4

மேலே சொல்லப்பட்ட ஆதணங்களில் தீமையில்லா ஆதனம் ஒனறை தெரிவு செய்து அதில் பத்ம ஆசனத்தில் அமர்ந்து சிந்தனையாய் இரு. அப்பொழுது மனதில் பலவித அல்லல் தரும் நினைவுகள் வரும். அவற்றை விலக்கி ஒரே மனதாக பிரணாயாமம், ஒட்டியாண பந்தம் செய்ய உந்தியில் மூலத்தீ பற்றும். அதன் எழுத்து தோன்றும். எழுபத்தீராயிரம் நாடிகளில் முக்கியமானவை பத்து. அதில் மிக முக்கியமானது மூன்று இந்த மூன்று நாடிகள் வழியாக பெரிய நன்மைகள் தரும் அந்த எழுத்தை பார்.

நவ்விவிழியாயிதய கமலந்தன்னி
நன்றாகவசவையுயிர் நடக்கும்போது
செவ்வையுடன்மீளும்போ திருபத்தோரா
யிரத்தறுநூற் றச்செபிக்குநாளாகு
மவ்வியமூலாதாரஞ் சுவாதிட்டான
மணிபூரகம்நாகதம் விசுத்தியாக்ஞை
பவ்வமறயாஞ்சொல்லும் சரநூறன்னைப்
பார்ப்பவரேபராபரத்தின் பயன்பார்ப்பாரே.  -- 5

மான் விழிப்பெண்ணே! இதயக் கமலதன்னில் இந்த அசபை உயிர் நடக்கும் போது செம்மையாக திரும்பும் போது இருபத்தோராயிரத்து அறுநூறு தரம் நடக்கும். இந்த அளவு சுவாசம் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்களிலும் மாறி மாறி நடக்கும். இந்த சர நூல் தன்னை தெளிவாக பார்ப்பவர் இதன் பயனை தெளிவாக புரிந்து கொள்வர்.


பார்க்கிலிடையிடமதுவே திங்களாகும்
பகலவனாம்பின்கலையே வலமதாகும்
மேற்கவுரைசுழுமுனைதா யடுவாமங்கி
யிடையானசந்திரனே யமுதமாகுந்
தீர்க்கமுடன்பொருள்விளைக்குங் கரியவண்ணந்
திரராசியாமவனே செப்புங்காலை
வேற்றடங்கண்மடமாதே விரும்பிக்கேளாய்
விரிவாகவிவையனைத்தும் விளங்கச்சொல்வாம்.  -- 6

இடது பக்க நாசியில் வரும் சுவாசம் இடகலையாகும். இது சந்திரனாகும். வலது பக்க நாசியில் வரும் சுவாசம் பின்கலை ஆகும். இது சூரியனாகும். இவை இரண்டும் சேர்ந்து நடுவில் நிற்பது சுழுமுனை எனப்படும். இது அக்னி ஆகும். சந்திரனே அமுதமாகும். பொருள்கள் உண்டாக்கும். கரிய வண்ணத் திரராசியுமாம். வேல் போன்ற கூரிய கண்களையுடைய பெண்ணே விரிவாகவும், விளக்கமாகவும் சொல்வோம் விருப்பமுடன் கேட்பாயாக.

 

சொல்லுங்காற்கதிரவனுஞ் சுகவியாபி
சுத்தநிறம்வெண்மைசர ராசியாகும்
கொல்லுமேலாக்கருமங்கள்கொடியவன்னி
கூறுங்கா னிறஞ்சிகப்பா முபயராசி
நல்லவிடைதெரி;ந்துணர்கிற் றிங்கள்பெண்ணாம்
நலம்பயில்பின் கலைகதிரோன் புருசனாகுஞ்
சொல்லுமிரு பதின்காத வழிக்கப்பாலாந்
திசைக்கிடமாய்ச் செவ்வலமூர் சேரக்கேள்.  -- 7


 

கதிரவன் பற்றி சொல்லுவதானால் சுகமாக எல்லா இடமும் வியாபித்திருப்பவன். சுத்தமான வெண்மை நிறத்தினன். சரராசியாகும். கொடிய அக்னி ஆகிய சுழுமுனையோ எல்லா கருமங்களையும் கொல்லும். சிப்பு நிறத்துடன் உபய ராசியாகும். சந்திரன் பெண். சூரியன் ஆண். இருபது காத தூரத்திற்கப்பால் உள்ள இடத்திற்கு பிரயாணம் மேற் கொள்ளும் போது சந்திர கலை ஓடும் போது பிரயாணத்தை ஆரம்பித்து, சூரிய கலை ஓடும் போது அங்கு போய்ச் சேருமாறு இருக்க வேண்டும். மேலும் சொல்வேன் கேள்.

 


கேட்கிலிடந்தூதாடை யணிபொன்பூணற்
கிளக்குணமடிமைகொளற் கீழ்நீர்கண்டால்
வாழ்க்கைமனையெடுத்தல்குடி புகுதல்விற்றன்
மன்னவரைக்காணலுண்மை மருவல்சாந்தி
வேட்கைதெய்வப்பதிட்டைசுரம் வெறுப்புத்தீர்த்தல்
வித்தைபெறற்றனம்புதைதன் மிகவுமீத
னாட்கமலர்முகத்தாய் நரகந்தீர்த்த
னன்றேயாமிவையெல்லா நயந்துபாரே.  -- 8


 

இடகலையான சந்திர கலையில் சுவாசம் நடக்கும்போது என்னென்ன காரியங்கள் செய்யலாம் எனக் கேட்டால் தூது அனுப்புதல் அல்லது தூது போதல். புத்தாடை அணிதல். பொன் ஆபரணங்கள் பூணுதல். ஒருவனை அடிமையாக பெற்றுக் கொள்வது அதாவது வேலை ஆள் வைப்பது. கிணறு, குளம், ஏரி போன்ற நீர் நிலைகள் வெட்டுதல். வாழ்க்கை அமைத்தல் அதாவது திருமணம் தாலி கட்டுவது, வீடு கட்டுவது. வீடு வாங்குவது. வீட்டிற்கு குடி புகுவது. பொருள் விற்பது. அரசரைக் காண்பது. இன்றைய காலகட்டத்தில் அரசாங்கம் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை சந்திப்பது. உண்மையை சாருதல் அதாவது தெய்வ வழிபாடு. சாந்திகள் செய்வது. தெய்வ பிரதிட்டை செய்தல். சுரம், வெறுப்பு(சமாதானம் செய்தல்) தீர்த்தல். வித்தை கற்றல். தனம் சேர்த்தல். பாவ விமோசனம் கொடுத்தல். தாமரை மலரைப் போன்ற முகத்தினை உடைய பெண்ணே இவை எல்லாம் நன்மை தரும்.

 

 

பார்க்கில்வலதுபதேம் வித்தைசேவை

படையோட்டல் பயிர்செட்டுக்களவுசூது
பேர்க்கவொணாவழக்குரைத்தல் கரியரிதேரூர்தல்
யிறங்குமெழுத்திடுதல்சங் கீதம்பாடல்
வார்த்தைபகைபங்கள்கோள் பசாசுதீர்த்தன்
மந்திரஞ்சாதித்தன்மருந் துணலுறங்கற்
கோர்த்தபுனலாடல் கொல்லிடங்கடீர்தல்
கொடும்பிணித்தம்பனயோகங் குறிக்குங்காலே. – 9

வலது நாசியில் (பின்கலை -- சூரியகலை) சரம் ஓடும் போது என்னென்ன காரியங்கள் செய்யலாம் என்றால் குருவினடம் உபதேசம் பெறல். பிறரிற்கு உபதேசம் செய்தல். வித்தை சொல்லிக் கொடுத்தல். படையை துரத்துதல். பயிர் விளைவித்தல். வியாபாரம். திருடுதல். சூதாடுதல். கடினமான வழக்காடுதல். யானை-குதிரை தேரோட்டுதல். உபதேசக் கருத்தெழுதுதல். சங்கீதம். சொற்பொழிவு ஆற்றல். பகை உண்டாக்கல். கோள் சொல்லுதல். பங்கம் ஏற்படுத்துதல். பேயோட்டுதல். மந்திர செப சாதனைகள். மருந்து சாப்பிடுதல். உறங்குதல். குளித்தல். கொல்லுதற்குரிய ஏவல் நிவர்த்தி செய்தல். கொடிய நோய் தீர்த்தல். தம்பனம் சம்பந்தமான யோகங்கள் செய்தல்.  

 

காலிரண்டுமொத்தக் காற்சமாதிநன்றாங்
கருதியதொன்றாகாது காணுமெனிற்காணா
சீலமிகுநததவமுடையாய் நன்மையில்லை
தீயனவாங்கருமஞ் சேரக்கூடுஞ்
சாலநிறைபூரணத்தில் வழக்குவாது
தர்க்கம்போரங்கமன்னர் தம்மைகாண்டன்
மூலமறுஞ்சூரியத்தி னிறுத்திவெல்வர்
முயலவதெல்லாங்கயல்விழியால் முயலலாமே. – 10

இரண்டு சரமும் சேர்ந்த சுழுமுனையில் சரம் ஓடுகையில் சமாதி யோகம் செய்தல் நன்மை தரும். நினைத்த காரியங்கள் ஒன்றும் நடக்காது. இப்படிப்பட்ட நேரத்தில் நடக்கும் என நினைத்தால் நடக்காது. சீலம் பொருந்திய தவமுடைய பெண்ணே! தீய காரியங்கள் கை கூடும். சரம் ஓடும் பக்கம் பூரணம் என்றும் ஓடாத பக்கம் சூனியமும் ஈகும்.நிறைவான பூரணத்தில் நின்று வழக்கு பேசுபவரகளை, தரக்கம் செய்பவர்களை சரமோடாத சூனியத்தின் பக்கம் நிறுத்தி வெல்லலாம். இப்படி முயன்று காரயங்களை வெல்லலாம் கயல் போன்ற விழிகளை உடைய பெண்ணே.

 

முயலுங்கரமற்பூரணத்தி லிடத்திலிரண்டடியோ
முன்வலமென்மூன்றடி போமொழியாம்யாத்திரைக்கு
கயலடருங்கண்மடவாய் கருமமதுமுற்றுங்
கருதுவடக்குங்கிழக்கு மிடத்தேபோகி
லியலுமொருபகையுண்டா மீளமாட்டா
ரிசைந்தவலந் தெற்குமேற் கேகவென்னிற்
புயலடரும்புனல்புகுந்து மரணமாவர்
புணர்முலைக்கச்சிறுமிடையாய் போற்றிக்காணே. – 11

தெற்கும் மேற்கும் சந்திரனின் திசைகளாகும். இந்த திசைகளில் பயணம் போக வேண்டும் ஆயின் இடகலையில் சரம் ஓடும் போது செல்ல வேண்டும். அப்படியல்லாமல் மாறி பின்கலையில் சரம் ஓடினால் சூரிய கலையிலேயே சுவாசத்தை நன்றாக இழுத்து கும்பகம் செய்த படி வலது காலை மூன்று அடி வைத்து பின் சாதாரணமாக சிறிது தொலைவு நிற்காமல் செல்ல வேண்டும். இதுவே பரிகாரமாகும். வடக்கும், கிழக்கும் சூரியனின் திசைகளாகும். இந்த திசைகளில் பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பின் சூரிய கலையில் சுவாசம் நடக்கும் போது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். அப்படியல்லாமல் மாறி இடகலையில் சுவாசம் நடக்குமாயின் சந்திர கலையிலேயே சுவாசத்தை நன்றாக உள்ளிழுத்து கும்பகம் செய்து இடது காலை இரண்டடி எடுத்து வைத்து பின் சாதாரணமாக சிறிது தூரம் நடக்க பரிகாரமாகும். கயல் போன்ற கண்ணுடைய பெண்ணே இப்படிச் செய்யின் போகின்ற காரியம் இனிதே நிறைவேறும். அப்படியல்லாமல் இடகலையில் சரம் ஓடும் போது வடக்கு கிழக்கு திசைகளிற்கு பிரயாணம் செல்லின் போகின்ற இடத்தில் தேவையற்ற வீண் பகை வரும். திரும்பி வரமாட்டார். பின்கலையில் சரம் நடக்கும் போது தெற்கு, மேற்கு பிரயாணம் மேற்கொள்ளின் புயலினாலும், நீரினாலும் மரணமேற்படும். சிறிய இடையினைக் கொண்ட பெண்ணே இதனை போற்றி அதாவது நம்பிக்கையுடன் காண்பாயாக.

 

 

காணவொருகருமத்தைக் குறித்துவந்தேன் கருதியமுன்னுமிடமு மேலுமிந்து
பேணுவலமுங்கீழும் பின்னும்வெய்யோன்
பேசியசொல்லெழுத்திரட்டை சோமனாகு
மாணுமெழுத்தோற்றையோர் கதிரோனாகு
மதிக்குமவன்பூரணத்தில் விந்துகேட்கிற் பூணவுரைத்தனவெல்ல நன்றேயாகு
பொல்லாதுசூனியத்திற் புகலுவோர்க்கே. – 12

 

ஏதாவது ஒரு விடயமாக குறி கேட்க வரும் போது குறி சொல்பவரிற்கு சூரிய கலை நடக்கின் கேட்க வந்த காரியம் செயமாகும். குறி சொல்பவரிற்கு சந்திர கலை ஓடும் போது குறி கேட்பவர் அந்த பக்கம் இருந்து கோட்டால் காரியம் செயமாகும். மற்றும் சரம் பார்ப்பவரிற்கு மேலிருந்து கேட்டாலும் அல்லது நேரிற்கு நேராக கேட்டாலும் காரியம் பலிதமாகாது. கேட்ட கேள்வியின் முதல் வார்த்தையின் எழுத்துக்களை எண்ணி ஒற்றை இலக்கமாயின் நல்ல பலனும், இரட்டை இலக்கமாயின் தீய பலனும் என்றாகும்.

 

 

கேடொன்றோன்பறிகொடுத்தோனஞ்சுதின்றோன்
கிடையினாற்சாவவன்றோ கிளர்நோய்கொண்டோன்
பாடொன்றுமில்லைசூ னியத்தேயாகிற்
பலித்துவிடும்பூரணத்திற் பகர்;ந்தவெல்லாம்
ஆடும்பையரவென்ன வல்குலாளே
யடுத்தொருவன் வந்ததிசைசோமனாகி
நீடுஞ்சொல்லிரவியாய் நிற்குமாகில்
நினைத்தமொழியாகாது நின்றுபாரே. – 13

குறி கேட்பவன் நான் கெட்டு போய் கொண்டிருக்கிறேன் என்றாலும், பொருள் களவு போனது என்றாலும், நஞ்சு சாப்பிட்டேன் என்றாலும், நான் சாகப் போகிறேன் என்றாலும், எனக்கு கடுமையான நோய் என்றாலும் சூனியத்தின் பக்கம் நின்றால் பெரிய பாதகமில்லை சரியாகிவிடும். பூரணத்தின் பக்கம் நின்றால் அது அப்படியே பலிக்கும். அதாவது படமெடுத்து ஆடும் அரவு தெளிவாக கண்ணுக்கு தெரிவது போல தெளிவானதாகும் வலிய கூந்தலையுடைய பெண்ணே. முதற் கவியில் சொல்லிவற்றையும் பார்த்து சந்திரனின் திசை, ரவியின் திசை இவற்றையும் பார்த்து காரியத்தின் வீரியம் அறிய வேண்டும். அதாவது உத்தம பலன், மத்திம பலன் போன்றன.

                                                                                                                                        பகிர்வில் S.கலைச்செல்வன்
                                                                                                                                                     -அறிவுமையம்-