சனி, 24 நவம்பர், 2012

ஆதி நாராயணி மந்திரம்



ஆதி நாராயணி
 
"ஓம் கிலிம் சவ்வும் ஸ்ரீம் ஹரீம் சர்வ சௌபாக்கியம் தேவி அருள் ஆனந்த ரூபி நாராயணி மமவசம் குருகுரு சுவாஹா".
இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 -உரு வீதம் ஐந்து நாட்கள் செபம் செய்ய மந்திரம் சித்தியாகும்.
                                                                           

                                                                  பூஜை முறை

கற்கண்டு, வடை,பாயசம்,தேன்,தேங்காய்,புஷ்பம்,சந்தனம் முதலியன வைத்து தீபதூபம் காட்டி செபம் செய்ய  வேண்டும்.                                                                            
                                                                இதன் நன்மை

இம்மந்திரத்தை சித்தி செய்தவர்கள் மஞ்சளை கையில் வைத்துக்கொண்டு மேற்குரிய மந்திரத்தை மனதால் 9 உருவேற்றி அம்மஞ்சள் மந்திரித்து கொடுத்து பூசிவர சொல்லவும். இம்மஞ்சளை குழந்தைகளுக்கு பூசினால் குழந்தைகளுக்கு வரும் எல்லாவித தோசமும் (பாலகிரக தோசம்) நீங்கும். குழந்தை இல்லாதவர்கள் இம்மஞ்சளை பூசிவர குழந்தை பாக்கியம் உண்டகும். திருமணம் ஆகாத கன்னி பெண்கள் இம்மஞ்சளை பூசிவர உடனே வரன் கிட்டும், திருமணம் முடியும். மங்கலமான காரியம் எல்லாம் நடக்கும். என்று மலையாள மாந்திரீகம் என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.

பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt,M.A

2 கருத்துகள்:

  1. வணக்கம் சார்,
    என்னுடைய பெயர் ரவீந்திரன் , நான் தொடர்ந்து உங்கள் இணை தளத்தை படித்து வருகிறேன் . அதில் ஒரு பகுதி (ஆதி நாராயணி மந்திரம்) பற்றி படித்தேன். அதில் நீங்கள் குறிப்பிட்டு உள்ளிர்கள் ("ஓம் கிலிம் சவ்வும் ஸ்ரீம் ஹரீம் சர்வ சௌபாக்கியம் தேவி அருள் ஆனந்த ரூபி நாராயணி மமவசம் குருகுரு சுவாஹா".)
    இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 -உரு வீதம் ஐந்து நாட்கள் செபம் செய்ய மந்திரம் சித்தியாகும் என்று குறிப்பிட்டு உள்ளிர்கள் .
    உண்மையாகவே வெறும் நாளொன்றுக்கு 1008 -உரு வீதம் ஐந்து நாட்கள் செபம் செய்ய மந்திரம் சித்தியாகுமா ?. மந்திரம் சித்தி அடைந்து விட்டது என்று எப்படி தெரிந்தது கொள்வது . அதற்கான மார்க்கம் ஏதேனும் உண்டா , இருந்தால் அது என்ன என்று தயவுகூர்ந்து கூறமுடியுமா ? மந்திரம் சித்தி ஆனால் ஐந்து நாட்கள் பிறகு அந்த தேவி தரிசனம் கிட்டுமா ? தயவுகூர்ந்து நல் வழி காட்டவும். My E-MAIL ID (arjoon@hotmail.fr).
    நற்றி
    வணக்கம் சார்

    பதிலளிநீக்கு
  2. நம்பிக்கை இருந்தால்தான் எதிலும் வெற்றி கிடைக்கும்.
    உங்கள் கேள்வியிலே உங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லை என்று தெரிகிறது.
    1008 உருவீதம் 5 நாட்கள் மனஓர்நிலையோடும் முழுநம்பிக்கையோடும் தீட்டு இல்லாத
    ஒரு தூய்மையான தனி இடத்தில் அத்தேவிக்கு பூசை வைத்து செபித்தால் 5வது நாள்
    முடிவில் தேவி தரிசனம் தருவாள்.அச்சமயம் தாயை என வணங்கி இன்றுமுதல் உன்னை
    கொண்டு நான் செய்யும் சகல மங்கலகரமான காரியங்களும் சித்தியாக அருள்தர வேண்டினால்
    அன்று முதல் நீ தேவியை நினைத்து கொடுக்கும் மஞ்சளால் சகல மங்கலகரமான காரியங்களும்
    தடையின்றி நடக்கும்.பாவிகளுக்கும், மன அமைதி இல்லாதவனுக்கும்,பேராசை கொண்டவனுக்கும்,
    நம்பிக்கை இல்லாதவனுக்கும் முறையான பூசையை செய்யதவனுக்கும்,
    மந்திரத்தை முறையாக செபிக்காதவனுக்கும் மந்திரம் சித்தியாகாது.

    நன்றி
    சு.கலைச்செல்வன்

    பதிலளிநீக்கு