செவ்வாய், 6 நவம்பர், 2012

பாதாள அஞ்சனம்


                                        குப்பைமேனி வேர், வெள்ளைச்சாரணைவேர்

                                      வெள்ளெருக்கன்வேர், வெள்ளைக்காக்கணம் வேர்

                                                            வெள்ளைவிஷ்ணுகாந்திவேர்


      இவை ஐந்தையும் முறைப்படி காப்பு கட்டி சாபம் போக்கி ஆணிவேர் அறாமல் பிடுங்கி உலர்த்தி தீயில் கறுக்கி எடுத்து வைத்துக்கொண்டு ஒரு கோட்டானை பிடித்து உரோமம், குடல் போக்கி குழித்தைலம் எடுத்து மேற்கண்ட வேரை கல்வத்திலிட்டு இரண்டு சாமம் கோட்டான் தைலம் விட்டு அரைக்க வேண்டும். அதன்பின் புனுகு, கோரோசனை, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, குங்குமப்பூ இவைகளை வகைக்கு குன்றிமணி அளவு சேர்த்து ஒரு சாமம் அரைத்தால் மை பக்குவம் அடையும். மை பக்குவம் ஆனதின் அடையாளம் தெரிய கல்வத்தின் அடியில் ஒரு ரூபாயை போட்டு அரைத்தால் அது மையில் தெரியும்.
                                                             
                                               
இதற்கு பூஜை மந்திரம்
 
ஓம் ஹ்ரிம் ஐம் மதன மேகலே மமகார்யம் ஸாதய ஸாதய ஸ்வாஹா.

இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் பனிரெண்டு நாள் செபித்தால் மை உயிர் பெறும்.அதன் பின் தான் உபயோகத்திற்கு ஆகும்.

நிவேதனம் செவ்வலரி புஷ்பம், சந்தனம், பன்னீர், பால், பழம், இளநீர், தேங்காய், பத்தி, சூடம், தயிர், பொங்கல் ஆகியவைகளை வைத்து தூபதீபம் காட்டி மையை பத்திரம் செய்யவும்.

                                                                     இதன் பிரயோகம்

இந்த மையை கொஞ்சம் எடுத்து வெற்றிலை ஒன்றில் தடவி விளக்கின் ஒளியில் பார்த்தால் பூமிக்குள் இருக்கும் பொருள்கள் யாவும் தெரியும். நவரத்தினம், தங்கம், வெள்ளி முதலிய உலோகங்கள் இருப்பதைக் காணலாம்.தண்ணீர், ஊற்று, தண்ணீருக்குள் இருக்கும் பொருள், மண்ணில் புதைந்துள்ள புதையல் முதலியனயாவும் தெரியும்.இது பாதாள அஞ்சனம் என்பதால் வேறு உபயோகத்திற்கு பயன்படாது என்று மலையாள மாந்திரீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

                      பகிர்வில் S.கலைச்செல்வன் B.Litt,M.A

16 கருத்துகள்:

  1. நண்பரே இப்படிபட்ட பதிவுகள் தீயவர்களுக்கு பலணளிக்க கூடும் !அல்லது இந்த முயற்சியில் நல்லவர்களும் தீயவர்கள் ஆகக்கூடும் ஆண்மீக அனுபூதி விசயங்களில் மட்டும் உங்கள் கவணத்தை செலுத்துங்களேன்

    பதிலளிநீக்கு
  2. இப்படியே ஒவ்வொரும் நினைத்தால் பல அரிய குறிப்புகள் பலருக்கும் பயன்படாமலே அழிந்து போய்விடும். பல அரிய நூல்கள் சில சுயநலக்காரர்களின் கையில் கிட்டியதாலும், அவற்றின் பெருமையை அவர்கள் அறியாததாலும், தனக்கு மட்டும் பயன்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு சிலர் செயல்பட்டதாலும் நாம் பல அரிய நூல்களையும் , அவற்றின் குறிப்புகளையும் இழந்துவிட்டோம்.
    என்னை பொருத்த வரை எனக்கு தெரிந்த அரிய குறிப்புகளை உலகளவில் நம்மை போன்ற ஆர்வலர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது எண்ணம்.

    யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்து சரி.

      நீக்கு
    2. மன்னிக்கவேண்டு அப்படி என்றால் உடல்சபநிவர்தியை கூறலாமே. எல்லோரும் பயன் படட்டும் குருவே. தவறு இருந்தால் மன்னிக்கவும்

      நீக்கு
    3. வணக்கம் குருநாதா நீங்கள் பெற்ற செல்வத்தை இவ்வையகமும் பெற வேண்டும் என்று நினைக்கும் உங்கள் மனதிற்கு வாழ்த்துக்கள்

      நீக்கு
  3. sir i want discuss with this article so please send me your email address

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. கலை சாருக்கு ஒரு வேண்டுகோள், இந்த மந்திரங்களை ஆரம்பிக்கும்போது, முதல் ஸ்டெப், 2வது ஸ்டெப், எனக் கூறிக்கொண்டே வந்தால், ஆர்வலர்கள் அதன்படி சரியாகச் செய்வார்கள். முதலில் செய்யக்கூடியவனவற்றை இடையில் சொருகியிருப்பதால், அவர்களுக்கு குழப்பம். நாங்க முதல்ல என்ன செய்யணும்,என்ற கேள்வி எழும்புகிறது. அதுதான் மந்திரம் என திரும்ப எனக்கு கூறிவிடாதீர்கள். எல்லோரும் பயனடைய வேண்டும் என நீங்கள் விரும்புவதால், இவ்வாறு கூறியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  6. அனைவராலும் செய்யமுடியாது

    பதிலளிநீக்கு
  7. குழித்தைலம இறங்குவது ஒரு பெரிய process மற்றும் கோட்டான , மூலிகை , இதை எல்லாரலும் செய்ய இயலாது

    பதிலளிநீக்கு