வியாழன், 20 செப்டம்பர், 2012

மருந்து கொடுக்கத்தகாதவர்கள் -யூகி முனிவர்

 வெறி பிடித்தவன், மது குடிப்பவன்,விசுவாசம் இல்லாத பாவி, கெட்ட எண்ணம் உள்ளவன், மானம் இல்லாதவன்,பிறர் மனைவியுடன் உறவு கொள்பவன்,மூடன், செவிடன், ஊமையன்,மூக்கு அறுந்தவன்,பிறர் குடியைக் கெடுப்பவன்,கஞ்சன் - இப்படிப்பட்டவர்களுக்கு மருந்து கொடுக்கவோ, அவர்களை தீண்டவோ கூடாது என யூகிமுனிவரின் சிகிச்சா சாரத்தில் கூறப்பட்டுள்ளது.

மருந்து செய்ய உண்ண நாளறிதல்- யூகி முனிவர்




சனி, புதன், திங்கள், வெள்ளி - ஆகிய நாட்களில் மருந்துண்டால் நோய் தீராது தீமையாகும்.

செவ்வாய், வியாழன் - ஆகிய நாட்களில் மருந்துண்டால் பிணி தீரும்.

ஞாயிற்றுக்கிழமையில் மருந்து செய்து நோயாளிக்கு கொடுக்க வேண்டும் என்கிறார் யூகிமுனி.