புதன், 26 டிசம்பர், 2012

உச்சிஷ்ட சாமுண்டி மந்திரம்


உச்சிஷ்ட சாமுண்டி
                                                           உச்சிஷ்ட சாமுண்டி மந்திரம்

"ஓம் ஹரீம் பகவதி உச்சிஷ்ட சாமுண்டி வீரமாகாளி பைரவி
ரம் ரம் டம் டம் நம் நம் மராய் மராய் உச்சாட உச்சாட
ஹரீம் ஹீம்பட் சுவாஹா"

இந்த மகாமந்திரத்தை நல்ல தைரியம் உள்ளவர்கள் மட்டும்
செபம் செய்ய வேண்டும். இதை நாளொன்றுக்கு 1008-உரு வீதம்
எட்டு நாட்களுக்கு செபம் செய்ய வேண்டும்.

இதை செய்யும் போது ஓரு மண்டை ஓட்டை எடுத்து சுத்தம்
செய்து மஞ்சள், குங்குமம் வைத்து இடது கையில்
வைத்துக்கொண்டு தன்னை சிவவடிவமாக பாவித்து செபம்
செய்து சேவல் பலி தர வேண்டும். மந்திரம் செபித்துவரும்
எட்டாவது நாள் இரவில் தேவி அகோர வடிவத்துடன் கையில்
மலைகளை கையில் தூக்கி எறிந்து பந்து ஆடுவது போல்
விளையாடி வருவாள். வாயில்  நெருப்புப்பொறி பறக்கும்,
சூரியனை போல் ஒளியுண்டாகும், இடி மின்னலுடன் பூமி அதிரும். 
 பயப்படாமல் தாயே என்று வணங்கி விழுந்து கண்ணீரால்
பாதத்தை கழுவி நின்றால் புன்முறுவலுடன் என்ன
வேண்டுமென்று பரிவுடன் கேட்கும், நாம் கேட்டவரத்தை கொடுக்கும்.


இதை சித்தி செய்தவர்களுக்கு சத்துருக்கள்(எதிரிகள்) மூன்று
உலகத்திலும் கிடையாது என்று மலையாள
மாந்திரீகத்தில் சொல்லப்பபடுள்ளது.

                                                      பகிர்வில் S.கலைச்செல்வன் M.A