வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

நாய் வாய்க்கட்டு மந்திரம்


"ஓம் பைரவ ஆகாச பைரவா அண்டாண்ட பைரவா இந்திர
பைரவா அமரரும் தியங்குகின்றார் அடியேன் மனதும்
தியங்குகிறது எதுக்குக்குலைக்குராய் குலைக்காதே குலைத்தால்
அரன்மீது ஆணை ஓம் உம் படு சுவாகா".- என்று 1008 உரு
செபிக்க மந்திரம் சித்தியாகும்.

பின்னர் ஒரு சிட்டிகை மண்ணை எடுத்து மேற்படி மந்திரத்தை
செபித்து கடிக்க வரும் நாய் மீதிற்போட அது கடிக்காது,
குலைக்காது இறை எடுக்காது ஓரு வாரத்திற்குள் நாய்
குன்றிப்போகும்.

வாய் கட்டவிழ்க்கும் மந்திரம்

"நானிட்ட ஆணையும் உன்னைக் கட்டிய கட்டும் வாய்க்கட்டும்
அறுக்க வட்டமிட்ட பகவானே கட்டுபட்ட மிருகமெல்லாம் கட்டி
விட்டேன் ஓம் நமசிவய" - என்று 1008-உரு செபிக்க மந்திரம்
சித்தியாகும்.

பின்னர் நாயின் வாய்க்கட்டை அவிழ்க்க வேண்டுமானால்
மேற்படி மந்திரத்தை செபித்தவாறு மஞ்சள் நீரை அந்நாயின் 



முகத்தில் தெளித்து கையினால் தடவ குணமாகி விடும் முன்
போலவே குலைக்கும். இறை எடுக்கும்.

                                             பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

4 கருத்துகள்: