சனி, 30 மார்ச், 2013

உடல் கட்டு மந்திரம்

உடல் கட்டு மந்திரம்

விபூதியை கையில் வைத்துக்கொண்டு வடக்கு முகமாய்
 இருந்து கொண்டு 

"ஓம் பகவதி என் தேகத்தில் அடி முதல் முடிவரை
திருகாளி,உத்திரகாளி,மோடிக்காளி,ரீங்காளி,பிரகாசகாளி,

வஜீரக்காளி ஆகாசகாளி,பூமிக்காளி, ஹரிகாளி,சிவகாளி
ஓம் ஸ்ரீம் ரீம் காத்து ரட்சிக்க சுவாகா.

என்று 21 உரு செபித்து இவ்விபூதியை தன்னைச்சுற்றிலும்
போட்டு கொண்டால் எந்த மந்திரவாதி என்னவிதம் செய்தாலும்
நம்மிடம் ஏறாது. எந்த தீய சக்தியும் நம்மை ஒன்றும்
செய்ய முடியாது.

வியாழன், 28 மார்ச், 2013

பேய் பூத வசிய அஞ்சனம்(மை)


பேய்மிரட்டி வேர்,     பேய்தேத்தான் வேர்
பேயத்தி வேர்,             பேய் தும்பைவேர்
பேய்பீர்க்கு வேர்,       பேய்முருங்கை வேர்
பேய்பீர்க்கு வேர்,       பேய் துமட்டி வேர்

                     பேய்புடலம் வேர்.
 

இவைகளை முறைப்படி காப்புகட்டி சாப நிவர்த்தி
செய்து ஆணிவேர் அறாமல் தோண்டி எடுத்து உலர்த்தி
தீயில் கறுக்கி கல்வத்திலிட்டு ஓரளிஞ்சி தைலம்
விட்டு இரண்டு சாமம்(6- மணி) நேரம் அரைத்து புனுகு,
கோரோசனம், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கஸ்தூரி
இவைகளை ஒரு குன்றிமணி எடைவீதம் சேர்த்து ஒரு
சாமம்(3-மணி நேரம்) அரைத்து எடுத்து கொம்பு டப்பியில்
பத்திரம் செய்யவும்.



                   இதற்கு பூசை மந்திரம்


ஓம் மகா மாரி பகவதி உத்தண்ட காளி
ஐம் கிலிம் சவ்வும் ஸ்ரீம் சர்வ சங்கார ரூபி
பூத வேதாள ரூபினி மமவசம் குருகுரு சுவாகா.

இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் நான்கு
நாட்கள் செபம் செய்ய வேண்டும். நிவேதனம் பால், பழம்,
பாயாசம், அதிரசம், தேங்காய், சூடம், பத்தி இவைகளை
வைத்து தீபதூபம் காட்டி வணங்கி செபம் செய்ய
சித்தியாகும். இதனால் சகல பேய் பூத, வேதாளங்களும்
இவைகள் வசியம் ஆகும்.
நல்ல வேடிக்கை காட்டி விளையாடலாம்.
எல்லா வேலையும் செய்யும்.
              

 பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

செவ்வாய், 26 மார்ச், 2013

ஒற்றைத்தலைவலி நீங்க மந்திரம்



இடது கையில் விபூதியை பரப்பி அதில் ஸ்ரீம் என்று எழுதி
அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து மூடிக்கொண்டு

"ஓம் காளி அம் அம் கிலியும்
கிலியும் பத்திரகாளி சிவ நசி"


என்று 108 உரு செபித்து பின்பு மேற்படி விபூதியும் வெற்றிலையும்
கசக்கி வலிக்கிற இடத்தில் போட வலி உடனே தீரும்.

செவ்வாய், 12 மார்ச், 2013

அஷ்டகர்ம சித்தி - தேரையர்


தேரையர் தனது சிவபூசாவிதியில் அஷ்டகர்மம் சித்தியாக
அதற்குரிய மந்திரங்களை அருளியுள்ளார்.

தன்மையுடன் நமசிவய தம்பனந்தான்
 தானான யவசிமந வசியமாகும்
மின்னின்ற சிவயநம உச்சாடந்தான்
 முயங்கி நீ வசியநம அழைப்பதாகும்
ஒன்றான நயவசிம மோகனந்தான்
 உருவுவய நமசியும் வித்துவேடமாமே

வேடமெனும் மநயவசி பேதனந்தான்
 வினையமுடன் மசிவயந மாரணந்தான்
நாடவே அட்டகர்மம் ஆடுதற்கு
 நலமாக இவ்வெழுத்தைத் தியானஞ்செய்யத்
தேடவே மூன்றெழுத்தைக்கூட்டி ஓதத்
 திடமாக எட்டெட்டும் சித்தியாகும்
சூடவே கருமம் ஓன்றுக் கொருலட்சந்தான்
 தீரமுடன் செய்திடவே சித்தியுண்டே.
                  

                             தேரையர் சிவபூசாவிதி
பொருள்:
நமசிவய -  தம்பனம்
யவசிமந -  வசியம்
சிவயநம -  உச்சாடணம்
வசியநம -  ஆக்ருஷ்ணம்
நயவசிம -  மோகனம்
வயநமசி -  வித்துவேஷ்ணம்
மநயவசி -  பேதனம்
மசிவயந -  மாரணம்


அஷ்ட கர்மங்கள் சித்தியாக வேண்டுமென்றால் ஒவ்வொரு
கர்மத்திற்கும் கூறிய மந்திரத்தையும் ஐயும் கிலியும் சவ்வும்
என்ற மந்திரத்தோடு சேர்த்து ஒரு கர்மத்திற்கு ஒரு லட்சம்
 உரு வீதம் தியானிக்க அக்கர்மங்கள் சித்தியாகும் என்கிறார்
தேரையர்.
                            பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

செவ்வாய், 5 மார்ச், 2013

நீரழிவை போக்கும் புங்கமலர் சூரணம்


புங்கம் மலர்களை சேகரித்து பசு நெய் விட்டு வறுத்து
பொடியாக்கி கொள்ளவும். இதில் அரைக்கரண்டி வீதம்
காலை மாலை பசும்பாலில் சாப்பிடவும்.21-நாட்கள் சாப்பிட கடுமையான நீரழிவு அகலும்.
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A