செவ்வாய், 16 ஏப்ரல், 2013

மோகனம் எட்டுக்கும் மந்திரம் -அகத்தியர்


அஷ்ட கர்மங்களில் இரண்டாவதாக கூறப்படும் மோகனம்
எட்டு உட்பிரிவுகளைகொண்டது, அது
மோகனத்தின் அதிதேவதை அக்கினிபகவான்
1)சர்வ மோகனம்
2)இராஜ மோகனம்
3)புருஷ மோகனம்
4)ஸ்திரி மோகனம்
5)மிருக மோகனம்
6)சொர்ண மோகனம்
7)சத்துரு மோகனம்
8)லோக மோகனம்
என்பனவாகும்.
இம்மோகனம் எட்டும் சித்திசெய்யும் முறையை இன்றைய
பதிவில் காண்போம்.

மோகனம் எட்டுக்கும் மந்திரம் -அகத்தியர்

பாரப்பா வசியமென்ற யெட்டுஞ்சொன்னேன் 
பத்திகொண்டு மோகனத்தைப் பகரக்கேளு
நேரப்பா மோகனந்தானெட்டும் நன்றாய்
 நேர்மையுடன் நின்றாட மந்திரங்கேளு
காரப்பா ஓம்கிலி சங்அங் றீங்ஸ்ரீ சிவ சுவாகாவென்று
 கண்ணார செபிக்கிறதோர் வகையைக்கேளு
சாரப்பா நாற்கோணம் நடுவில்விந்து
 தானெழுதி றீங்கென்று சாத்திட்டாயே.

சாத்தியதோர் சக்கரத்தை முன்னேவைத்து
 தன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
போத்தியிந்த மந்திரத்தை தினம்நூறப்பா
 புத்தியுடன் தான்செபித்து நின்றாயானால்
பார்த்திபனே மோகனந்தானெட்டும் நன்றாய்
 பத்தியுடனுன் வசமாய்ப் பதிவதாகும்
கார்த்துநன்றாய்க் கருணைபெறச்சித்தி பெற்றால்
 கண்கண்ட தெல்லாமோகனமாம் பாரே.

பாரடா மோகனத்திற் பதிவாய்நின்று
 பத்தியுடன் தான்செபித்து சுத்தமானால்
நேரடா சகலசெந்து மிருகமெல்லாம்
 நேர்மையுடனுன் முகங்கண்டபோது
வீரடா தானொடுங்கி மோகமாகும்
 வேதாந்த பூரணமே தான்தானானால்
ஆரடா உனக்கு நிகரொருவருண்டோ
 அப்பனே மோகனத்தை யறிந்துதேரே.
                -அகத்தியர் பரிபூரணம் 1200

பொருள்:
வசியம் எட்டும் சொன்னேன், அதுக்கடுத்ததாக மோகனத்தை
சொல்கிறேன் கேள்,
ஒரு திங்கள்கிழமை நாளில் ஒரு வங்கத்தகட்டில்
நாற்கோணம் போட்டு அதன் நடுவில் ஒரு வட்டம் போடவும்,
அவ்வட்டத்தினுள் 'றீங்" என்று எழுதவும்.


பின்னர் இச்சக்கரத்தை பூசையில் வைத்து முல்லை பூக்களை
சக்கரத்தை சுற்றி வைத்து எதிரில் நல்லெண்ணை தீபமேற்றி
உடல் மனசுத்தியுடன்மஞ்சள் நிற ஆடை உடுத்தி மாம்பலகையில்

தெற்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு மனஓர்நிலையுடன்
"ஓம்கிலி சங்அங் றீங்ஸ்ரீ சிவ சுவாகா" என்ற மந்திரந்தை
நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் செபித்தால்
இம்மோகனம் எட்டும் சித்தியாகும்.

மோகனம் சித்தியானால் உன்னைகாணும் சகல ஜீவஜந்துகளும்,
மிருங்களும், மனிதர்களும் உன்னை கண்டமாத்திரத்தில் தனது
நிலைமறந்து ஒடுங்கி உன்மீது மோகம் கொள்ளுவர்.
மோகனத்தை சித்தி செய்தவர்களை சகலத்தையும் அவர்கள்
வசமாக்கி விடுவார்கள் அவர்களுக்கு நிகர் யாரும் இல்லை
எனலாம் என்கிறார் அகத்தியர்.

நன்றி
பகிர்வில் S.கலைசெல்வன் MA

6 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா.
    நான் இதில் பத்து கருத்துக்கள் கூறி இருந்தேன் அந்த கருத்தை யாரோ நீக்கி இருக்குறாங்க.

    01.எல்லாம் யந்திரத்திலும் வட்டம் போடசொல்லி இருக்கீங்க காரணம் என்ன?

    02.யந்திரத்தின் படம் சேர்த்து இணைத்தால் நால்லது
    03.யந்திர , மந்திர சபநிவர்த்தி செய்யவேண்டும் என்கிறார்கள். இதில் கூறவில்லையே?
    04.ஏரண்டைதைலம் இடவேண்டு என்று சொல்லுறாங்க?
    05.முறையான பூஜை எப்படி செய்வது?
    06.இவைகளுக்கு பல விதி முறைகள் உண்டாம்?

    இப்படி பல கேள்விகள் உள்ளன.

    ஏதேனும் பிழை இருந்தால் மன்னியுங்கள் தாங்கள் பதம்பிடித்து மன்னிப்பு கேக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட்டமாய் இருப்பதன் காரணம் இருவகைப்படும்.
      முதல்வகை ஒரு அம்பு நம்மை நோக்கி வருவதால் அது குறியீடு கூறவும் வட்டமாக இருக்கும்.குறிப்பாக சொன்னால் இது ஒரு சக்கரத்தை குறிக்கும் அல்லது மகாமேருவின் வடிவமைப்பை காட்டும் ஆகையால் ஒரு அம்பு அதன் கூர்முனையில் இருந்து சிறிதளவு கீழே இறங்கினால் ஒரு பிரமிடு ஒரு குறுக்களவு சரியாக இருக்கப்படும் பிரமிடு.ஏனெனில் கூரான பகுதியில் ஈர்ப்பு சக்தியும் அதை எதிர்த்து போகும் சக்தி அதிகமாகும்.
      இரண்டாவதாக switch board எனப்படும் வகையில் அல்லது சக்தி வட்டம் ஆங்கிலத்தில் எனர்ஜி சர்க்கல் வகையாலும் இதை குவிக்கப்பட்ட சக்தி நிலையம் என்று கருதப்படுகிறது.அதற்காக வட்டத்தின் நடுவில் இந்த சக்தி குறிக்கப்பட்டிருக்கிறது.அந்த குவிக்கப்பட்ட சக்தியில் நமது எண்ணங்களான வார்த்தைகளாக பதிக்கப்படுகின்றது.இது புருவ மத்தியில் உள்ள ஈர்ப்பை தன் வசம் ஈர்க்க கூடியது அதுவே பிரபஞ்சத்துடன் இணைக்கப்படுகின்றது. இது மின் வேகத்தை விட அதிகப்படியான வேகத்தில் நமது உடம்பில் இருக்கும் குறிப்பான சக்கரத்தில் ஈர்க்கப்படும் மேலும் குறிப்பிட்ட ஒலி மூலமாக இது டிரான்ஸ்மிட் செய்யப்படுகிறது.மின்மின் சக்தியுடன் நமது உடலில் நரம்புகள் மண்டலத்தில் குறிக்கப்பட்ட இடத்தில் அதாவது சக்கர இதன் மூலமாக நமது மந்திரங்கள் சபிக்கப்பட்டு இதுபிரபஞ்சத்துடன் இணைக்கப்பட்டு குறிப்பிட்ட ஸ்லோகம் நம் எண்ணங்கள் வழியாக நமது விரும்பும் மந்திரங்களால்நிறைவேற்றப்படுகிறது.

      நீக்கு
  2. Vanakkam ayya,

    வங்கத்தகட்டில் enral enna...

    பதிலளிநீக்கு
  3. ஓம்கிலிசிங் மந்திரம் படித்து உள்ளேன் சங் என்றால் தயவு காட்டுங்கள்

    பதிலளிநீக்கு