செவ்வாய், 25 ஜூன், 2013

பேதனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்


அஷ்டகர்மங்களில் ஏழாவதாக சொல்லப்படுவது பேதனமாகும்.
பேதனத்தின் அதிதேவதை குபேரன் ஆவார். பேதனம் என்பது
ஒருவரை தான் என்னசெய்கிறோம் என்ற சிந்தனையே இல்லாமல்
அவரின் புத்தியை பேதலிக்கச்செய்வதாகும். உதாரணமாக
ஏழாம்அறிவு என்ற படத்தில் டாங்லி என்பவர் தனக்கு முன்னால்
நிற்பவரின் புத்தியை பேதலிக்கச்செய்து விடுவார். இதனால் எதிரில்
நிற்பவர் தன்னுடன் இருப்பவர்களையே கொன்று விடுவார்.
இதற்கு காரணம் நாம் அவரின் புத்தியை வேறு நிலைக்கு
மாற்றியதுதான் இதுவும் நோக்குவர்மத்தைப்போல் ஒருவகை
தாக்குதல்தான். ஒருவரை பார்த்து இவண் பேதலிக்க வேண்டுமென
எண்ணினால் அவன் பேதலித்துப்போய் விடுவான்.
இப்பேதனம் எட்டு வகைப்படும்.
அவை

1)சர்வ பேதனம்
2)இராஜ பேதனம்
3)புருஷ பேதனம்
4)ஸ்திரி பேதனம்
5)மிருக பேதனம்
6)தேவ பேதனம்
7)அக்கினி பேதனம்
8)லோக பேதனம் என்பனவாகும்.


பேதனத்தின் அதிதேவதை குபேரன்

பேதனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

பாரப்பா வித்துவே ஷணத்தைச் சொன்னேன்
  பத்தியுடன் பேதனத்தைப் பகரக்கேளு
மாரப்பா பேதனந்தானதீத வித்தை
 மக்களே ஓம்றீயுஞ்சவ்வும் ஸ்ரீயும் கிலியு
அங்அங் நசி நசி சுவாகாவென்று
 நிசமான யெண்கோணம் நன்றாய்க்கீறி
காரப்பா கோணம்நடு விந்துபோட்டு
 கமலநடு டங்கெனவே கனிவாய்ப்போடே.

போட்டெடுத்துச் சக்கரத்தை முன்னேவைத்து
 புத்தியுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
நாட்டமுடன் மந்திரத்தைத் தினம்நூறப்பா
 நன்மையுடனுருச் செபித்து நயனங்கண்டு
வாட்டமில்லா வாசியிலே நின்றாயானால்
 மகத்தான பேதனந்தான் மார்க்கமாக
காட்டும்முன்னே பேதலிக்குமந்திரசித்து
 கைகண்டவித்தையடா கனிந்துபாரே.

                      -அகத்தியர் பரிபூரணம்1200
பொருள்:

பேதனத்தைப் பற்றி செல்கிறேன் கேள், வித்தைகளில் பேதனம்தான்
அதிக வித்தைகளை உள்ளடக்கியது. பேதனத்தை சித்தி செய்யும்
முறை யாதெனில் ஒரு இரும்புத்தகட்டில் தாமரை இதழைப்போல
எண்கோணம் வரைந்துஅதன் நடுவில் ஒரு வட்டம் போட்டு
அவ்வட்டத்தினுல் "டங்" என்று எழுதவும்.


பின்னர் இச்சக்கரத்தை பன்னீரால் கழுவி இதன் நான்கு மூலையிலும்
சந்தனம் குங்குமம் தொட்டு வைக்கவும்.பின்னர் இதை பூசை
அறையில் வைத்து ஒரு வியாழக்கிழமை நாளில் உடல்மன சுத்தியுடன்
வெள்ளை நிற வஸ்திரம் அணிந்து வடக்கு நோக்கி மரத்தோலாடையில்
அமர்ந்து கொண்டு ஊமத்தம் பூவால் இச்சக்கரத்தை அலங்கரித்து
அதன் எதிரில் புன்னை எண்னெண்யை உற்றி விளக்கேற்றி வைத்து
மன ஓர் நிலையோடு
 'ஓம் றீயும் சவ்வும் ஸ்ரீயும் கிலியும் அங்அங் நசிநசி சுவாகா' என்று
நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் செபிக்க பேதனம்
சித்தியாகும்.

பேதனம் சித்தியான பின்பு உனக்கு தேவைப்படும் சமயத்தில் இதை
பிரயோகிக்க எண்ணினால் உன் மூச்சை நன்கு இழுத்தடக்கிக்கொண்டு இப்பேதனமந்திரத்தை 3 முறை மனதால் நினைத்தவாறு உன் எதிரில்
இருப்பவர்களைப் பார்க்க அவர்கள் உன்னை கண்ட மாத்திரத்தில்
பேதலித்து மிரண்டு ஓடிவிடுவார்கள் அல்லது அவர்களை நம்
எண்ணப்படி செயல்படச்செய்யலாம் என்கிறார் அகத்தியர்.

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

செவ்வாய், 4 ஜூன், 2013

வித்துவேஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்


அஷ்ட கர்மங்களில் ஆறாவது கர்மமாக சொல்லப்படுவது
வித்துவேஷணமாகும். வித்துவேஷணம் என்பது ஒருவருக்கொருவர்
பகையை உண்டாக்கி பிரிப்பது இதனால் எப்படிப்பட்டவரையும்
பிரித்து விடலாம். எது தனக்கு வேண்டாததோ அது தானாகத்தன்மேல்
வெறுப்புற்று தன்னைவிட்டு ஓடிவிடும்படி செய்வதே
வித்துவேஷணமாகும். அதைப்பற்றி இன்றைய பதிவில் காண்போம்.
வித்துவேஷணம் எட்டு உட்பிரிவுகளைக்கொண்டதாகும், அவை

1)சர்வ வித்துவேஷணம்
2)இராஜ வித்துவேஷணம்
3)புருச வித்துவேஷணம்
4)ஸ்திரி வித்துவேஷணம்
5)மிருக வித்துவேஷணம்
6)தேவ வித்துவேஷணம்
7) லோக வித்துவேஷணம் என்பனவாகும்.

வித்துவேஷணத்தின் அதிதேவதை வாயு தேவன் ஆவார்.

வித்துவேஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

பாசமுடன் வித்துவேஷணத்தைக்கேளு
பதிவான மந்திரமிது சுத்தவித்தை
வாசமுள்ள வித்தையடா நேசமான மந்திரமிது
ஓம் ஸ்ரீயும் ரீயும் கிலியும் சர்வயிந்திராணிபகவதே சுவாகாவென்னே
எண்ணமுடன் மந்திரத்தை செபிக்குமார்க்கம்
இன்பமுடன் விபூதியிலே முக்கோணமிட்டு
கண்ணிறைந்த முக்கோண நடுவே விந்து
கருணைவளர் விந்துநடு ஓங்காரஞ்சாத்தி
முன்னிறைந்த ஓங்கார நடுவிலேதான்
முத்தியுடன் சுத்தமதாய் சிங்கென்றிட்டு
சன்னதியை நோக்கிமனத் தன்மையாலே
சங்கையுடன் மானதமாய்ப் பூசைசெய்யே.

செய்யடா மானதமாய்ப் பூசைபண்ண
சிந்தைமன தொன்றாக சிவனைநோக்கி
மெய்யடா மந்திரமிது தினம்நூறப்பா
விரும்பிமன மொன்றாக உருவேசெய்தால்
அய்யனே வித்துவேஷணந்தானெட்டும்
அரகரா தன்வசமா யடங்கியாடும்
மய்யமென்ற சுழிமுனையிலே அடங்கியாட
வரிசையிடனினைத்தபடி வாய்க்குந்தானே.
                                 -அகத்தியர் பரிபூரணம்1200

பொருள்:
ஒரு செய்வாய் கிழமை நாளில் உடல்மனசுத்தியுடன் சாம்பல்நிற
பட்டாடை உடுத்தி எட்டிபலகையில் வடமேற்கு திசை நோக்கி
அமர்ந்துகொண்டு உன் எதிரில் ஒரு எட்டிப்பலகையை வைத்து அதில்
விபூதியை பரப்பி அவ்விபூதியில் முக்கோணம் போட்டு
அம்முக்கோணத்தின் நடுவில் ஓம் என்று எழுதி அதனுள் சிங் என்று
எழுதவும். பின்னர் பன்றி நெய் ஊற்றி விளக்கேற்றி வைத்து
அதைச்சுற்றிலும் காக்கணம் மலர்களையும் ஏனைய
பூசைப்பொருட்களையும் வைத்துக்கொண்டு மனஓர்நிலைப்பாட்டோடு
"ஓம் ஸ்ரீயும் ரீயும் கிலியும் சர்வயிந்திராணிபகவதே சுவாகா" என்ற

மந்திரத்தை நாளொன்றுக்கு 100 உரு வீதம் 48 நாட்கள் செபித்தால்
வித்துவேஷணம் எட்டுக்கும் சித்தியாகும்.
 

பின்னர் இதை பயன்படுத்தவேண்டுமென்றால் உன் மூச்சை
உள்நிறுத்தி இம்மந்திரத்தை 3 முறைசெபித்தால் உன் வழியில்
குறுகிடும் அதிகார பலமுள்ளவர்கள், எதிரிகள், மிருகங்கள்,ஆண்கள்,
பெண்கள், பேய் பிசாசு, துஷ்ட தேவதைகள், ஜீவஜந்துக்கள் என
அனைத்தும் உன்னை கண்ட மாத்திரத்தில்  மிரண்டு ஓடிவிடும்.
அது மதம் பிடித்த யானையாக இருந்தாலும்,
முரட்டு காளையாக இருந்தாலும் ஓடுவிடும்.
பிறர்க்கு இது பயன்படுவதற்கு முன்சொன்ன முறையில் மந்திரத்தை
கையில் விபூதியை வைத்து செபித்து அவர்களுக்கு அவ்விபூதியை
பூசிக்கொள்ளும்படி கொடுக்கலாம். அவர்கள் அதை வயல்வெளியில்
போட்டால் அங்கு எலிகள் வாராது. பிணியாளர்க்கு பூசினால் பிணி
தீர்ந்துவிடும். இன்னும் பல பயன்கள் இதில் அடங்கியுள்ளன.

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A