செவ்வாய், 25 ஜூன், 2013

பேதனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்


அஷ்டகர்மங்களில் ஏழாவதாக சொல்லப்படுவது பேதனமாகும்.
பேதனத்தின் அதிதேவதை குபேரன் ஆவார். பேதனம் என்பது
ஒருவரை தான் என்னசெய்கிறோம் என்ற சிந்தனையே இல்லாமல்
அவரின் புத்தியை பேதலிக்கச்செய்வதாகும். உதாரணமாக
ஏழாம்அறிவு என்ற படத்தில் டாங்லி என்பவர் தனக்கு முன்னால்
நிற்பவரின் புத்தியை பேதலிக்கச்செய்து விடுவார். இதனால் எதிரில்
நிற்பவர் தன்னுடன் இருப்பவர்களையே கொன்று விடுவார்.
இதற்கு காரணம் நாம் அவரின் புத்தியை வேறு நிலைக்கு
மாற்றியதுதான் இதுவும் நோக்குவர்மத்தைப்போல் ஒருவகை
தாக்குதல்தான். ஒருவரை பார்த்து இவண் பேதலிக்க வேண்டுமென
எண்ணினால் அவன் பேதலித்துப்போய் விடுவான்.
இப்பேதனம் எட்டு வகைப்படும்.
அவை

1)சர்வ பேதனம்
2)இராஜ பேதனம்
3)புருஷ பேதனம்
4)ஸ்திரி பேதனம்
5)மிருக பேதனம்
6)தேவ பேதனம்
7)அக்கினி பேதனம்
8)லோக பேதனம் என்பனவாகும்.


பேதனத்தின் அதிதேவதை குபேரன்

பேதனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

பாரப்பா வித்துவே ஷணத்தைச் சொன்னேன்
  பத்தியுடன் பேதனத்தைப் பகரக்கேளு
மாரப்பா பேதனந்தானதீத வித்தை
 மக்களே ஓம்றீயுஞ்சவ்வும் ஸ்ரீயும் கிலியு
அங்அங் நசி நசி சுவாகாவென்று
 நிசமான யெண்கோணம் நன்றாய்க்கீறி
காரப்பா கோணம்நடு விந்துபோட்டு
 கமலநடு டங்கெனவே கனிவாய்ப்போடே.

போட்டெடுத்துச் சக்கரத்தை முன்னேவைத்து
 புத்தியுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
நாட்டமுடன் மந்திரத்தைத் தினம்நூறப்பா
 நன்மையுடனுருச் செபித்து நயனங்கண்டு
வாட்டமில்லா வாசியிலே நின்றாயானால்
 மகத்தான பேதனந்தான் மார்க்கமாக
காட்டும்முன்னே பேதலிக்குமந்திரசித்து
 கைகண்டவித்தையடா கனிந்துபாரே.

                      -அகத்தியர் பரிபூரணம்1200
பொருள்:

பேதனத்தைப் பற்றி செல்கிறேன் கேள், வித்தைகளில் பேதனம்தான்
அதிக வித்தைகளை உள்ளடக்கியது. பேதனத்தை சித்தி செய்யும்
முறை யாதெனில் ஒரு இரும்புத்தகட்டில் தாமரை இதழைப்போல
எண்கோணம் வரைந்துஅதன் நடுவில் ஒரு வட்டம் போட்டு
அவ்வட்டத்தினுல் "டங்" என்று எழுதவும்.


பின்னர் இச்சக்கரத்தை பன்னீரால் கழுவி இதன் நான்கு மூலையிலும்
சந்தனம் குங்குமம் தொட்டு வைக்கவும்.பின்னர் இதை பூசை
அறையில் வைத்து ஒரு வியாழக்கிழமை நாளில் உடல்மன சுத்தியுடன்
வெள்ளை நிற வஸ்திரம் அணிந்து வடக்கு நோக்கி மரத்தோலாடையில்
அமர்ந்து கொண்டு ஊமத்தம் பூவால் இச்சக்கரத்தை அலங்கரித்து
அதன் எதிரில் புன்னை எண்னெண்யை உற்றி விளக்கேற்றி வைத்து
மன ஓர் நிலையோடு
 'ஓம் றீயும் சவ்வும் ஸ்ரீயும் கிலியும் அங்அங் நசிநசி சுவாகா' என்று
நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் செபிக்க பேதனம்
சித்தியாகும்.

பேதனம் சித்தியான பின்பு உனக்கு தேவைப்படும் சமயத்தில் இதை
பிரயோகிக்க எண்ணினால் உன் மூச்சை நன்கு இழுத்தடக்கிக்கொண்டு இப்பேதனமந்திரத்தை 3 முறை மனதால் நினைத்தவாறு உன் எதிரில்
இருப்பவர்களைப் பார்க்க அவர்கள் உன்னை கண்ட மாத்திரத்தில்
பேதலித்து மிரண்டு ஓடிவிடுவார்கள் அல்லது அவர்களை நம்
எண்ணப்படி செயல்படச்செய்யலாம் என்கிறார் அகத்தியர்.

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

3 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நமது ஆற்றலை எதிரியிடம் எந்த அளவில் பிரயோகிக்கின்றோம் என்பது மிக முக்கியம்
      சாதாரமாக அவனை பார்த்து பேதனமாக வேண்டுமென்று எண்ணினால் அவன் நாம் எண்ணியதிலிருந்து 1மணி நேரம் முதல் 3 மணி நேரம்வரை அதே நிலையில் இருப்பான்.உங்களில் ஆற்றலை மிககடுமையான சினத்தோடு அவனை பார்த்தால் அது அவனை பைத்தியமாக்கிவிடும். அது சரியாக அப்பேதனமந்திரத்தையே விபூதியில் 108 உரு செபித்து அவனை பூசி வர சொல்ல 3 முதல் 7 நாட்களுக்குள் அது சரியாகிவிடும்.
      நன்றி.

      நீக்கு
  2. மரத்தோலாடை என்பது என்ன?

    பதிலளிநீக்கு