செவ்வாய், 12 மார்ச், 2013

அஷ்டகர்ம சித்தி - தேரையர்


தேரையர் தனது சிவபூசாவிதியில் அஷ்டகர்மம் சித்தியாக
அதற்குரிய மந்திரங்களை அருளியுள்ளார்.

தன்மையுடன் நமசிவய தம்பனந்தான்
 தானான யவசிமந வசியமாகும்
மின்னின்ற சிவயநம உச்சாடந்தான்
 முயங்கி நீ வசியநம அழைப்பதாகும்
ஒன்றான நயவசிம மோகனந்தான்
 உருவுவய நமசியும் வித்துவேடமாமே

வேடமெனும் மநயவசி பேதனந்தான்
 வினையமுடன் மசிவயந மாரணந்தான்
நாடவே அட்டகர்மம் ஆடுதற்கு
 நலமாக இவ்வெழுத்தைத் தியானஞ்செய்யத்
தேடவே மூன்றெழுத்தைக்கூட்டி ஓதத்
 திடமாக எட்டெட்டும் சித்தியாகும்
சூடவே கருமம் ஓன்றுக் கொருலட்சந்தான்
 தீரமுடன் செய்திடவே சித்தியுண்டே.
                  

                             தேரையர் சிவபூசாவிதி
பொருள்:
நமசிவய -  தம்பனம்
யவசிமந -  வசியம்
சிவயநம -  உச்சாடணம்
வசியநம -  ஆக்ருஷ்ணம்
நயவசிம -  மோகனம்
வயநமசி -  வித்துவேஷ்ணம்
மநயவசி -  பேதனம்
மசிவயந -  மாரணம்


அஷ்ட கர்மங்கள் சித்தியாக வேண்டுமென்றால் ஒவ்வொரு
கர்மத்திற்கும் கூறிய மந்திரத்தையும் ஐயும் கிலியும் சவ்வும்
என்ற மந்திரத்தோடு சேர்த்து ஒரு கர்மத்திற்கு ஒரு லட்சம்
 உரு வீதம் தியானிக்க அக்கர்மங்கள் சித்தியாகும் என்கிறார்
தேரையர்.
                            பகிர்வில் S.கலைச்செல்வன் M.A