வியாழன், 28 மார்ச், 2013

பேய் பூத வசிய அஞ்சனம்(மை)


பேய்மிரட்டி வேர்,     பேய்தேத்தான் வேர்
பேயத்தி வேர்,             பேய் தும்பைவேர்
பேய்பீர்க்கு வேர்,       பேய்முருங்கை வேர்
பேய்பீர்க்கு வேர்,       பேய் துமட்டி வேர்

                     பேய்புடலம் வேர்.
 

இவைகளை முறைப்படி காப்புகட்டி சாப நிவர்த்தி
செய்து ஆணிவேர் அறாமல் தோண்டி எடுத்து உலர்த்தி
தீயில் கறுக்கி கல்வத்திலிட்டு ஓரளிஞ்சி தைலம்
விட்டு இரண்டு சாமம்(6- மணி) நேரம் அரைத்து புனுகு,
கோரோசனம், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கஸ்தூரி
இவைகளை ஒரு குன்றிமணி எடைவீதம் சேர்த்து ஒரு
சாமம்(3-மணி நேரம்) அரைத்து எடுத்து கொம்பு டப்பியில்
பத்திரம் செய்யவும்.



                   இதற்கு பூசை மந்திரம்


ஓம் மகா மாரி பகவதி உத்தண்ட காளி
ஐம் கிலிம் சவ்வும் ஸ்ரீம் சர்வ சங்கார ரூபி
பூத வேதாள ரூபினி மமவசம் குருகுரு சுவாகா.

இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் நான்கு
நாட்கள் செபம் செய்ய வேண்டும். நிவேதனம் பால், பழம்,
பாயாசம், அதிரசம், தேங்காய், சூடம், பத்தி இவைகளை
வைத்து தீபதூபம் காட்டி வணங்கி செபம் செய்ய
சித்தியாகும். இதனால் சகல பேய் பூத, வேதாளங்களும்
இவைகள் வசியம் ஆகும்.
நல்ல வேடிக்கை காட்டி விளையாடலாம்.
எல்லா வேலையும் செய்யும்.
              

 பகிர்வில் S.கலைச்செல்வன் M.A