திங்கள், 16 மார்ச், 2015

இஸ்லாமிய மந்திரம்


ஓம் அல்லா ஹல்லா அருளால் ஆதி வந்த பூதமுகமது
தன்னருளின் கல்லால் இரும்பால் கனலால் சட்டையிட்டேன்
வல்லவர் சுலைமான் வேதம்பர் தீயாலும் நீராலும் காற்றாலும்
படைக்கப்பெற்ற ஜின் சைத்தான்களும் எங்கள்மேல் வராமல்
காவல் செய்தேன்.அடர்ந்து வராமல் இரவும் பகலும் ஹாதாவில்
பள்ளி அகம் புகுந்து கொண்டேன் மக்காவினை ஈசு நபியாணை
தரைக்குரு நபியாணை சுலேமான் நபியாணை நால்வேதத்தினாணை
நாற்பத்தி யீராயிரம் நஸாபி ஆணை பம்புடு பற்வைகளும் பட்டுவிழ வேண்டும்.
கூடிய பேய்களெல்லாம் உச்சாட வேண்டும் பக்கப் பேய்களெல்லாம் பறந்தோட வேண்டும்
ஆடிய பேய்களெல்லாம் குலைய வேண்டும்.உச்ச பேய்களெல்லாம் நடுங்க வேண்டும் ஓம் மூன்று அல்லாயிடத்தும்
இறல்லாவத்தும் அமன அல்லா எட்டுதிக்கும் பதினாறு கோணமும் டும் டும் ரீம் ரீம் மங் மங் சங் அக்னாலா குலா
இல்லல்லாஹி சுலேய்மான் சொல்.

 

இம்மந்திரத்தை ஒரு சுத்தமான இடத்திலிருந்து கை,கால்,
முகம் சுத்தி செய்து வெற்றிலைபாக்கு,தேய்காய்,பழம் சந்தனம் குங்குமம் பூ சூடம் சாம்பிராணி முதலியன வைத்து தீபம் காட்டி 
மேற் சொல்லிய மந்திரத்தை நாள் ஒன்றுக்கு 108 உரு வீதம் 
மூன்று நாள் செபிக்க சித்தியாகும்.
 

இதனால் பேய் பித்தவர்கள் துஷ்ட தேவதைகளின் இன்னல்களுக்கு ஆளானவர்கள் ஏவல் பில்லி சூனியதால் பாதிக்க பட்டவர்கள்
முதலானோரை எதிரில் அமரவைத்து அவர் தலை முடியை ஒரு ஆணியில் சுற்ரி சாம்பிராணி காட்டி 9முறை இம்மந்திரத்தை ஓதி மந்திரிக்க சகல பாதிப்பிகளும் நீங்கும்.


குழந்தைகள் மற்றும் பயந்த பிள்ளைகளுக்கு இம்மந்திரத்தை ஓதி கயிறு மந்திரித்து குடுக்கலாம். துண்டை வைத்தும் மந்திரிக்காலாம் இதனால் சகல தீய சத்திகளின் இன்னல்களும் தீர்ந்து நலம் 
உண்டாகும்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A