அஷ்ட கர்மங்களில் முதலாவதாக கூறப்படும் வசியம்
எட்டு உட்பிரிவுகளை கொண்டது. அது
1) சர்வவசியம்
2)இராஜ வசியம்
3)புருஷவசியம்
4)ஸ்த்ரீ வசியம்
5)மிருகவசியம்
6)சர்ப்ப வசியம்
7) சத்துரு வசியம்
8) லோகவசியம் என்பனவாகும்.
இந்த எட்டுவகை வசியத்திற்குமான
மூலமந்திரத்தையும் அதனை செபிக்கும் முறையினையும்
அகத்தியர் தனது பரிபூரணம்1200 என்ற நூலில் கூறியுள்ளார்.
அதைப்பற்றி இன்றைய பதிவில் காண்போம்.
வசியம் எட்டுக்கும் மந்திரம்
கேளடா வசியமென்ற யெட்டுக்குந்தான்
கிருபையுள்ள மந்திரமிது சொல்லக்கேளு
வாளடா ஓம் பிறீங் அங்அங் டங் ஸ்ரீயும் கிலியும் சுவாகா வென்று
வளமையுடன் செபிக்கிறதோர் வரிசைகேளு
காலடா முக்கோணம் நடுவில்விந்து
கருவாக லங்கெனவே சந்திரபீஜம்
ஆளடா தானெழுதிப்பூசைபண்ணி
அன்புடன் மந்திரத்தை உருவேசெய்யே.
செய்யடா தினம்நூறு உருவேசெய்தால்
செம்மையுடன் வசியமெட்டுஞ் சித்தியாகும்
மெய்யடா வசியமது சித்தியானால்
மேன்மைபெற நினைத்ததெல்லாஞ் சித்தியாகும்
அய்யனே புலத்தியனே உனக்காய்ச்சொன்னேன்
கையடா அடக்கமது மெய்யாய்ச்சொன்ன
கருணைவளர் வசியமதை கனிவாய்ப்பாரே.
அகத்தியர் பரிபூரணம் 1200கிருபையுள்ள மந்திரமிது சொல்லக்கேளு
வாளடா ஓம் பிறீங் அங்அங் டங் ஸ்ரீயும் கிலியும் சுவாகா வென்று
வளமையுடன் செபிக்கிறதோர் வரிசைகேளு
காலடா முக்கோணம் நடுவில்விந்து
கருவாக லங்கெனவே சந்திரபீஜம்
ஆளடா தானெழுதிப்பூசைபண்ணி
அன்புடன் மந்திரத்தை உருவேசெய்யே.
செய்யடா தினம்நூறு உருவேசெய்தால்
செம்மையுடன் வசியமெட்டுஞ் சித்தியாகும்
மெய்யடா வசியமது சித்தியானால்
மேன்மைபெற நினைத்ததெல்லாஞ் சித்தியாகும்
அய்யனே புலத்தியனே உனக்காய்ச்சொன்னேன்
கையடா அடக்கமது மெய்யாய்ச்சொன்ன
கருணைவளர் வசியமதை கனிவாய்ப்பாரே.
பொருள்:
வசியம் எட்டுக்குமான மந்திரத்தைச் சொல்கிறேன் கேள்,
"ஓம் பிறீங் அங் அங் டங் ஸ்ரீயும் கிலியும் சுவாகா"
என்ற மந்திரத்தை செபிக்கும் முறை எப்படியெனில் முதலில்
ஒரு காரீயத்தகட்டில் முக்கோணம் போட்டு அதன் நடுவில்
ஒரு வட்டம் போட்டு அவ்வட்டத்தினுள் லங் என்று எழுதவும்.
பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் உடல் சுத்தியுடன் சிவப்பு நிற
ஆடை அணிந்து கிழக்கு முகமாய் அமர்ந்து கொண்டு முறையான
பூசை வைத்து அதன் நடுவில் இந்த யந்திரத்தை வைத்து முன் கூறிய
வசியமந்திரத்தை நாளொன்றுக்கு 108 உரு வீதம் 48 நாட்கள்
செபித்தால் வசியம் எட்டும் சித்தியாகும். அப்படி சித்தியானால் நீ நினைப்பதெல்லாம் சித்தியாகும்.
மாணவனே உனக்காக இதை சொல்கிறேன் கைஅடக்கமாக
இருந்து இதன் பலனைப்பார் என்கிறார் அகத்தியர்.
thanks for the interesting and valuable information pls brother post many like this
பதிலளிநீக்குகாரீயத்தகடு என்றால் என்ன?
பதிலளிநீக்குLead sheet.same like copper sheet
நீக்குCopper mainly
பதிலளிநீக்குA good information. The world turn again to the nature.
பதிலளிநீக்கு