ஞாயிறு, 29 டிசம்பர், 2013

நல்லபாம்பு ஜாலம்


நல்லபாம்பின் கொழுப்பை ஒரு வெள்ளைதுணியில் தடவி 

நிழலில் உலர்த்தி அதை திரித்து திரியாக்கி அத்திரியை 
விளக்கில் போட்டு அதில் ஆமணக்கெண்ணையை ஊற்றி 
தீபமேற்ற அவ்வெளிச்சம் பட்ட இடமெல்லாம் நல்ல பாம்புகள் ஊர்வதைப்போல் இருக்கும்.
பார்ப்பவர்கள் பயந்து ஆச்சரியப்படுவார்கள்.
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சத்துரு(எதிரி) துன்பமடையும் சித்து


எதிரியின் காலடிமண், நண்டுகுழி மண்,சுடுகாட்டு மண்,

பெருங்காயம்,21 மிளகு இவைகளை ஒரு மண்பாண்டத்தில் போட்டு புளியமரத்துவிறகால் தீயை எரித்துக்கொண்டே 'நசி மசி ' செபிக்
 

எதிரியின் உடம்பில் தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும் அவன் எலும்புகளெல்லாம் காந்தால் எடுக்கும். எரிப்பதை நிறுத்திவிட எரிச்சல் 
நிற்கும். அப்படியும் எரிச்சல் நிற்காமல் அவன் துன்பப்பட்டால் அதை நிவர்த்தி செய்ய 
முத்திய புளியம்பட்டையை நீரில் இடித்துப் போட்டு சர்க்கரை சேர்த்து கசாயமாக காய்ச்சி
 3 நாள் காலை-மாலை உட்கொள்ள நிவர்த்தியாகும்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 29 நவம்பர், 2013

பாதரச சிகிச்சை(mercury tharapy)


எந்த மருந்தினாலும் குணமாகாத நோய்களை குணமாக்க ஓரு 
சூட்சம முறை உண்டு.அது என்னவென்றால் சிறிதளவு பாதஇரசத்தை நோயாளியின் இடது உள்ளங்கையில் விட்டுஅதனுடன் கொஞ்சம் 
பாகை இலைச்சாறும்,முள்ளங்கி இலையின் சாற்றையும் கலந்து
வைத்தியர் தனது வலது கையின் பெருவிரலால் தேய்க்க அந்த இரசம் நோயாளியின் உள்ளங்கையில் இறங்கிவிடும். கொஞ்சம்கூட வெளியில் தங்காது, அப்பாதரசம் உள்ளுக்கிறங்கியதும் சரீரத்திலிருக்கும் நோய் 
உடனே நீங்கும்.மேலும் அந்த இரசம் சரீரத்தினுள்ளிருக்காது,
 
அதை உடனே வெளியிலகற்றி விடவேண்டும்.அதற்கு இரத்தை
உள்ளே இரக்கிய நோயாளியின் இரண்டு கால்களின் பெருவிரல்களில் எருமைச்சாணியை அப்பிவைத்து காலைத்தொங்க செய்து உயரத்தில் உட்காரவைக்க தேகத்திலோடிய இரசமெல்லாம் அந்த சாணியில்
 வந்து இறங்கிவிடும். அன்றுமுதல் நோயும் நீங்கிவிடும்.

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 24 நவம்பர், 2013

சாராயபாட்டில் வெடிக்கும் ஜாலம்


 

சாராயம் உள்ள ஒரு பாட்டிலில் கொஞ்சம் கடுகை 
அச்சாரயத்தில்போட்டு மூடிவைக்கசற்று நேரத்தில் 
அப்பாட்டில் சுக்கல் சுக்கலாய் வெடித்துவிடும்.
 

 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 10 நவம்பர், 2013

சகல விஷகடிகளுக்கு மந்திரம்


ஓம் ரீங் நசிநசி மசிமசி சகலவிசங்களும் இறங்கு இறங்கு 

மாறு மாறு படுபடு சுவாகா.
இம்மந்திரத்தை உடல் சுத்தியுடன் தூய்மையான இடத்தில் அமர்ந்து
1008 உரு செபிக்க சித்தியாகும்.




சித்தியான பின்னர் மூன்று புல்குச்சியினால்
சகலகடிகளுக்கும் மந்திரிக்க விஷம் இறங்கும் இதனால்
பூச்சிகடி,வண்டுகடி,பூராங்கடி,பாம்புகடி,நாய்கடி,பூனைகடி,எலிகடி
முதலானவைகளின் விஷம் இறங்கும்.இம்மந்திரத்தினால் மிளகும்
மந்திரித்து கொடுக்கவும்.

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

செவ்வாய், 5 நவம்பர், 2013

பாலை நீராக்கும் ஜாலம்

தாமரைமணியை(விதை) இடித்துப்பொடியாக்கி பாலில்போட 
 நீராகிவிடும். அதிகமாகப்போட்டால் வெருந்தண்ணீராகிவிடும்.

 பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 1 நவம்பர், 2013

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்புக்குரிய அனைவருக்கும் அன்பனின் தீபாவளி நல்வாழ்த்துக்களை
மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
சு.கலைச்செல்வன்

செவ்வாய், 15 அக்டோபர், 2013

பகவதி மந்திரம்-அகத்தியர்

கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ளது உலகப்புகழ் பெற்ற
பகவதியம்மன் கோவில். இக்கோவில் சுமார் 3000 ஆண்டுகள்
 பழைமை வாய்ந்தது. பரசுராமர் இக்கோவிலை நிர்மாணித்ததாக
 வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இங்கு நாள்தோறும் நாட்டின்
பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இச்சிறப்பு மிக்க கோயிலில் உறைந்துள்ள பகவதியம்மன் மந்திரத்தை இன்றைய பதிவில் காண்போம்.பல அன்பர்கள் கேட்டுக்கொண்டதற்க்கிணிங்கி அறிவு மையத்தால் இத்தகவல் வெளியிடப்படுகிறது.

பகவதியம்மன்

பகவதி மந்திரம்
பாரப்பா இன்னமொரு தீச்சைமார்க்கம்
பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
நேரப்பா பகவதியாள் தியானந்தன்னை
நேர்மையுடன் சொல்லுகிறே நிசமதாக
சாரப்பா தன்சார்பு நிலையில்நின்று
சங்கையுடன் ஓம் றீங் அங்கென்றேதான்
காரப்பா புருவ நடுக்கமலத்தேகி
கருணையுடணாயிரத்தெட்டுருவே செய்யே.

செய்யடா மானதமாயுருவே செய்யத்
திருயுருவாய் நின்றபகவதியாள்தானும்
மெய்யடா உனதிடமாய் நிருத்தஞ்செய்வாள்
பண்ணப்பா இதுசமயமென்று நீயும்
பகவதியாள் விபூதியை நீதரித்துக்கொள்ளே.

கொள்ளடா விபூதியை நீதரித்துக்கொண்டு
குணமாகப் பகவதியைத்தியானம் பண்ணி
நில்லடா உன்முகங்கண்டோருக்கெல்லாம்
நீங்காத பாவமெல்லாம் நீங்கிப்போகும்
சொல்லடா உன்வசனம் நன்மையாகும்
சோதிதிருப்பகவதியாள் சுருக்கினாலே
அல்லடா உன்மனதை நோகப்பண்ணும்
அவர்கள்குடி செந்தீயிலழுந்துப்பாரே.
                           -அகத்தியர் பரிபூரணம்1200

பொருள்:
பகவதியின் தியானத்தை சொல்கிறேன் கேள்,
மனஓர்நிலையோடு புருவமையத்தில் மனதை குவித்து'ஓம் ரீங் அங்" என்று
1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.இம்மந்திரதை சித்தி செய்தவரின் உள்ளத்தில் பகவதி இருந்து இவர்கள் செய்யும் 
சகல காரியங்களும் இவர்களுக்கு சித்தியாகும்படிசெய்வாள். விபூதியை பூசிகொண்டு இம்மந்திரத்தை தியானம் பண்ணி 
 செல்ல உன் முகம் பார்க்கும் யாவரின் பாவங்களும் விலகிவிடும்.  நீ சொல்வதெல்லாம் பலிக்கும். உனது சகலபாவங்களும் விலகிவிடும். 
உன் மனதை எவனாவது நோகடித்தால் அவன் குடும்பம் அழிந்துபோய்விடும் என்கிறார் அகத்தியர்.
 

மேலும் அகத்தியர் தனது வாதசௌமியம் என்னும் நூலிலும் 
இம்மந்திரத்தை பற்றி சொல்லிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இம்மந்திரத்தினால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை.
சகலமும் சித்தியாகும்.செல்வம் பொழியும்.

எடுத்த காரியமெல்லாம் ஜெயமாகும். நினைத்தபடி முடியும்.
ஆபத்து வராது, வல்வினைகள் அகன்றுவிடும். இம்மந்திரம்
கோடானகோடி பூசைசெய்ததற்கு ஒப்பாகும் என்று 

வாதசௌமியத்தில் கூறியுள்ளார் அகத்தியர்.
                                                          -அகத்தியர் வாதசௌமியம்

 பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

சர்வ வியாதிகள் நீங்க மந்திரம்


ஓம் அங் நங் கிலிகிலி என்று 1008 உரு செபிக்க மந்திரம் 
சித்தியாகும். பின்னர் வலது கையில் விபூதி பரப்பி

 
அதில் 'ஓம்' என எழுதி இம்மந்திரத்தை 108 உரு செபித்து 
அந்த விபூதியை  நோய்வாய்ப்பட்டவர்க்கு கொடுத்து 
அதை பூசியும் உண்டும் வர சொல்ல உடலில் உள்ள 
சகல நோய்களும் நீங்கி விடும். மற்றவர்கள் இவ்விபூதியை
பூசி வர சகலதோசங்களும் நீங்கி நன்மை உண்டாகும்.
 
பகிர்வில் சு.கலைச்செல்வன் எம்.ஏ

செவ்வாய், 1 அக்டோபர், 2013

கார்த்தியாயணி எட்சிணி


"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் நமோ பகவதி
கார்த்தியாயணி எட்ச எட்ச மமகார்யம் ஸாதய ஸாதய
சுவாகா."

       இம்மந்திரத்தை நாளொன்றுக்கு1008 உருவீதம் 40 நாட்கள் 

செபித்தால் சித்தியாகும். இதை வனத்தில் தனியாக இருக்கும் அரசமரத்தின் அடியில் அமர்ந்து செபிக்கவேண்டும்
நிவேதனம்:
மல்லிகை பூ,தாமரை பூ, தேன்,பால்,திராட்சை,கற்கண்டு,

பழம்,தேங்காய் முதலியன வைத்து தூபதீபம் காட்டி வணங்கி 
செபிக்க எட்சிணி ஓர் அழகான மின்னல் கொடிபோல் எதிரில் 
வந்து நிற்கும். உடனே தீபதூபம் காட்டி தாயே நான் 
நினைத்தபோது தரிசனம் தந்து என் வேலைகளை முடித்துத்தர
வேண்டும் என்று வேண்டினால் அப்படியே செய்து முடிக்கும்.
ஒரு சீட்டில் நினைத்த பெண்ணின் பெயரை எழுதி 

அதைப்பூசையில் வைத்து மந்திரத்தை 1008உரு செபித்தால் 
அந்த இடத்திற்கு அப்பெண் மறுஇரவில் வந்து சேருவாள்.
ஆனால் கற்பழித்தால் மகா பாதகம் ஏற்படும்.

பேய் பிடித்தவர் நமது பெயரை சொன்ன மாத்திரத்தில் அதன் 

பேர் சொல்லிமுடி எடுத்து கொடுத்து விட்டு சத்தியம் செய்து விலகிவிடும். எல்லாவிதசுரம்,தலைவலி,பல்வலி,கண்டமாலை,காமாலை இவைகளுக்கு தண்ணிர் மந்திரித்துக்கொடுத்தால் குணமாகும். 
வைப்பு, ஏவல், காட்டேரி, சூனியம், பில்லி  இவைகளுக்கு 
விபூதி மந்திரித்து கொடுத்தால் போதும் குணமாகும்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மீன்பிடி வித்தை


மீன்பிடி வித்தை
விஷ்ணுகரந்தை,குங்கிலியம்,சாம்பிராணி இம்மூன்றையும் 
பசும்பால் விட்டரைத்து மீனவர் வலையில் தெளித்து அவ்வலையில் 
மீன் பிடிக்கஅதிக மீன்கள் அகப்படும்.


மீன்பிடிபடா வித்தை
அண்டங்காக்கையைக் கொன்று அதை எரித்து எரித்தசாம்பலை 

ஓர் வாழையிலையில் பரப்பி அதில் "நசிநசி" என்று எழுதி அதற்கு
சாம்பிராணிகாட்டி "நசிநசி" என்று 1008 உரு செபிக்க மந்திரம்
சித்தியாகும். 


அண்டங்காக்கை
 பின்னர் அச்சாம்பலை எடுத்து பத்திரப்படுத்தி
வைத்துக்கொண்டு தேவையானபோது அச்சாம்பலில் ஓர் 

சிட்டிகைஎடுத்து மீனவர் வலையில் தூவிவிட 
அவ்வலையில் மீன்கள் அகப்படாது.
அம்மீனவன் என்னபாடுபட்டாலும் மீன் மாட்டாது.

ஆனால் இது பாவமான செயலாகும்.

பகிர்வில்
சு.கலைச்செல்வன்

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

விஜய பைரவ மந்திரம்



ஓம் நமசிவாய பைரவாய உக்ர உக்ர
ஜெய ஜெய ஸ்தம்பய ஸ்தம்பய
ஜம் ஹ்ரீம் ஸ்ரீம் துஷ்ட சேதனவீரா
மாய மந்திர ஜடதரா ஹராய் ஹீம்பட் ஸ்வாஹா.


இம்மந்திரத்தை அமாவாசை நாளில் பூர நட்சத்திரத்தில் வில்வமரத்தடியில்அமர்ந்து கொண்டு 1008 உரு செபிக்க
சித்தியாகும்.
 

 

பின்னர் விபூதியை கையில் வைத்துக்கொண்டு 108 
உருவேற்றி அவ்விபூதியை காடுகளில் தூவிவிட 
அக்காட்டிலுள்ள மிருகங்கள் ஓடாமல் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும்.இது மிருக தம்பனமாகும்.

அக்காலத்தில் வேட்டைக்கு செல்லும் மன்னர்களும், காடுகளில் 
வாழும் மலைவாழ் மக்களும் இது போன்ற மந்திரங்களை 
பயன்படுத்தி வேட்டை ஆடுவார்கள்.
 பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

குழந்தைகளுக்கு நோய்வராத வித்தை


பிள்ளைபெற்ற தாய்மார்கள் நாய் மண்டையோட்டை 
தண்ணீரிலிழைத்து மார்பில் தடவினபடியே குழந்தைகளுக்கு 
பால் கொடுக்க அக்குழந்தைக்கு எக்காலத்திலும் நோய்வராது. 
அப்படி மீறி வந்தாலும் சீக்கிரத்தில் தீர்ந்துவிடும்.
 
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

சித்தர் தரிசன மார்க்கம்


நம்மில் பலரும் சித்தர்களின் மந்திரங்களையும், 
ஜாலவித்தைகளையும், வைத்தியங்களை அவர்களின் 
நூல்களின் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது.
அவற்றுள் பலவும் பரிபாசைகளாகவே இருப்பதால் அவற்றை 
பொருள் கொள்ளுதல் இயலாத காரியமாகிறது.
அப்படி சித்தர்களின் வழியை தேடி செல்வோர்க்காக 
சித்தர் தரிசன மார்க்கம் என்ற இவ்விடுக்கையில்
 உங்களுக்கு சித்தர்களின் தரிசனத்தை காட்டும் 
மந்திரத்தை வெளியிடுகின்றோம்.


 சித்தர் தரிசன மந்திரம்


இம்மந்திரத்தில் நீங்கள் எந்த சித்தரை தரிசிக்க 
எண்ணுகிறீகளோ அவரின் பெயரை இடைவெளி 
விட்ட இடத்தில் நிப்பி செபிக்கவும்.
இம்மந்திரத்தை உடல்,மனசுத்தியுடன் அதிகாலை 
நேரத்தில் 108-உரு விதம் 48 நாட்கள் செபித்து வர 
சித்தர்கள் உனக்கு காட்சி தந்து தீட்சையை தந்து மெய்ஞான 
வழியை காட்டுவார்கள். முழுநம்பிக்கையுடன் 
செபிப்பவர்களுக்கு 48 நாட்களுக்குள்ளாகவே பலன் கிடைக்கும்.
 
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

பூனையை எலிவெல்லும் ஜாலம்

எருக்கம்செடி
குப்பைமேனி
எருக்கம்பாலும்,குப்பைமேனிச்சாறும் கலந்து 
ஓர் எலிக்கு உடல்முழுவதும் பூசி பூனையின் எதிரில் 
விட்டால் பூனையானது வெறி பிடித்ததைப்போல 
அவ்வெலியை சுற்றி வருமேயன்றி அதை ஒன்றும் செய்யாது.
எலியை எடுத்துப் போட்டுவிட்டால் தான் அவ்விடத்தை விட்டு பூனை விலகும். 

 

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நவக்கிரக பாராயணம்



 
"ஓம் ஹரீம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராஹவே கேதவே நமஹா. -மாணிக்கம் போன்ற இவ்வரிய நவகிரக மகாமந்திரத்தை தினம் 16 முறை செபித்துவர வறுமை,பிணி,பகை நீங்கி வாழ்வில் மேன்மை அடையலாம் என்கிறது சோதிட அரிச்சுவடி. பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 7 ஜூலை, 2013

மாரணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்


அஷ்ட கர்மங்களில் எட்டாவதாக சொல்லப்படுவது மாரணமாகும்.
இது தனக்கும் தன்னைச்சார்ந்தவர்க்கும் வேண்டாத அல்லது கேடு
விளைவிப்பவைகளை மாரணிக்க(அழிக்க)செய்வதாகும்.
மாரணத்தின் அதிதேவதை எமன் ஆவார்.
மாரணம் எட்டுவகைப்படும். அவை
மாரணத்தின் அதிதேவதை எமன்

1)சர்வ மாரணம்
2)அரச மாரணம்
3)சத்துரு மாரணம்
4)சர்வபூத மாரணம்
5)சர்வஜீவஜெந்து மாரணம்
6)சர்வவிஷ மாரணம்
7)சர்வதேவ மாரணம்
8)சர்வரிஷி மாரணம் என்பதாகும்.

மாரணம் எட்டுக்கும் மந்திரம்

ஆமப்பா பேதனத்தை நன்றாய்ச் சொன்னேன்
 அரகரா மாரணத்தினருமை கேளு
தாமப்பா சொல்கிறே மந்திரசித்து
 தனதாக ஓம் ஆம்றீங்றீங் சிம்றீங் கிலிறீங்
பிறீங் பிறீங் பிறீங் சுவாகாவென்று
 ஓமப்பா ஒருமனதாய்ச் செபிக்கக்கேளு
உறுதியுடன் சூலமிட்டு அடியிலேதான்
 நாமப்பா சொல்லுகிறோங் கம்மென்றேதான்
நாட்டமுடன் தானெழுதி நயனம்பாரே.

பாரப்பா நயனமென்ற சூலந்தன்னை
 பத்தியுடன் மானதமாய் பூசைபண்ணி
காரப்பா மந்திரத்தைத் தினம் நூறாக
 கண்ணார உருச்செபித்து கருணையானால்
நேரப்பா மாரணந்தா னிமிஷத்துள்ளே
 நினைத்தபடி நின்றுவிளையாடும் பாரே
தேரப்பா மனந்தேறி யறிவில்நின்று
 சிவசிவா மாரணத்தைத் தீர்க்கம் பண்ணே.

தீர்க்கமுடன் மாரணந்தான் சித்தியானால்
 தெளிந்துகொண்டு தன்னுயிர்போல் செகத்தைப்பார்த்து
மார்க்கமுடன் சிவயோக வாழ்வில்நின்று
 மைந்தனே பூரணத்தை தினமும்நோக்கி
ஏர்க்கையுடன் தானிருக்க வேண்டுமானால்
 இடும்பாக மாரணத்தைச் செய்ய வேண்டாம்
ஆர்க்கும்வெகு கொடுமைகளைச் செய்தபேரை
 அப்போதே மாரணிக்க அந்தந்தானே.
                   -அகத்தியர் பரிபூரணம்1200

பொருள்:
முன்பு பேதனத்தைப்பற்றி சொன்னேன், அதற்கடுத்ததாக
மாரணத்தைப் பற்றி சொல்கிறேன் கேள்,
ஒரு வெள்ளித்தகட்டில் சூலம் வரைத்து அச்சூலத்தின்
அடிமுனையில் கம் என்று எழுதவும்.


பின்னர் ஒரு சனிக்கிழமை நாளில் உடல்மன சுத்தியுடன்
தூய்மையானஇடத்தில் கருமைநிற ஆடை அணிந்து தெற்கு
நோக்கி அத்திப்பலகையில்அமர்ந்து கொண்டு உன் எதிரில்
மேற்கூறியமாரண எந்திரத்தை வைத்து அதனைச்சுற்றி
கடலை மலர்களை வைத்து அதன் எதிரில் வேப்பெண்ணெய்
ஊற்றி விளக்கேற்றி வைத்து இதர பூசை பொருட்களையும்
வைத்துக்கொண்டு மன ஓர்நிலையோடு
"ஓம் ஆம்றீங்றீங் சிம்றீங் கிலிறீங் பிறீங் பிறீங் பிறீங் சுவாகா"
வென்று நாளொன்றுக்கு 108 உரு வீதம் 48 நாட்கள் செபிக்க
மாரணம் சித்தியாகும்.

மாரணம் சித்தியானால் தனக்கு வேண்டாத மனிதர், துன்பம்
செய்யும் விலங்கு, தீராத நோய்,தீங்கிலைக்கும் துஷ்ட தேவதைகள்,
அரச பதவியில் இருந்து கேடு செய்யும் பாவிகள் என யாவரையும்
அழித்து விடலாம்.
மாரணத்தை சித்தி செய்து விட்டோம் என்பதற்க்காக நல்லவர்க்கு
அதை தவறான வழியில் பயன்படுத்தினால் பெரும் பாவத்திற்க்கும்
 சாபத்திற்க்கும் ஆளாக வேண்டிவரும்.ஆதலால் இம்மாரணத்தை
யாரிடம் பிரயோகிக்க வேண்டுமென்றால் யாவர்க்கும் அதிக கெடுதல்
செய்யும் பாவிகளிடமும், கொடுர விலங்குகளிடமும் பயன்படுத்தி
அவற்றை அழித்து உலக உயிர்களை தன்னுயிர் போல் எண்ணி
அவர்களுக்கு நன்மை செய்வதற்க்காக இதை பயன்படுத்த வேண்டும்.



மேலும் இதை பயன்படுத்து முறைகளை சொல்கிறேன் கேளுங்கள்,
மாரண சித்தி செய்த பின்னர் இந்த எந்திரத்தை வரைந்து 108 உரு
கொடுத்து விலங்குகள், துஷ்டதேவதைகள் நடமாடும் வீடு,
தோட்டங்களில் ஸ்தாபித்து விட்டால் அவ்விடத்தை அவைகள்
 நெருங்காது. அப்படி நெருங்கினாலும் சுருண்டு விழுந்து விடும்,
தீராத நோய்வாய்ப்பட்டவர்க்கு மேற்க்கூறிய யந்திரத்தை

விபூதியில் வரைந்து 108 உருக்கொடுத்து அவ்விபூதியை அவர்கள்
பூசியும் சிறிது உண்டும் வர சொல்லினால் அவர்களின் உடலில்
உள்ள நோய்கள் நீங்கி விடும்.
உடலில் உள்ள விஷத்தன்மைகள் நீங்கவும் இம்மந்திரம் ஓதிய

விபூதியை கொடுக்க சரியாகி விடும்.
உலக உயிர்களுக்கு கேடு செய்யும் பாவிகளை அவர்கள் அழிந்து

போக வேண்டுமென எண்ணி இம்மாரண யந்திரத்தில் அவர்களின்
பெயரை தலைமாற்றி எழுதி அதல் அவர்களின் காலடி மண் அல்லது
முடி ஏதாவதொன்றை வைத்து சுருட்டி அவர்கள் நடமாடும் பகுதி
அல்லது சுடுகட்டிலோ அதை புதைக்க அவர்களுக்கு மூச்சடைக்கும்
உடலெல்லாம் எரியும் நிமிசத்தில் உயிர் பிறிந்து போகும்.
மேலும் சித்தகள் ரிஷிகள் தாங்கள் மறைந்து வைத்துள்ள புதையல் போன்றவற்றிக்கு மந்திரக்கட்டு
போட்டு இருப்பார்கள் அவர்களின் மந்திரக்கட்டை மாரணிக்க செய்து
அவைகளை நாம் அடைந்து விடலாம் இது ரிஷி மாரணமாகும் .
தீமை செய்யும் யாவரையும் அழிக்க வேண்டுமென்றால் உன் மூச்சை இழுத்தடக்கிக்கொண்டு இம்மந்திரத்தை மனதால் 3 முறை
செபித்தவாறு அவனை உற்று நோக்கினால் மதிமயக்கம் ஏற்ப்பட்டு
கிழே விழுந்து விடுவான் பின்னர் விழுந்தவன் எழவே மாட்டான்.
இவையெல்லாம் மாரணத்தின் ஆற்றலாகும் இதை நல்ல வழிக்கு
மட்டுமே பயன்படுத்த வேண்டும் இல்லாவிடில் கொடிய துன்பத்திற்க்கு ஆளாக நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்,

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

செவ்வாய், 25 ஜூன், 2013

பேதனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்


அஷ்டகர்மங்களில் ஏழாவதாக சொல்லப்படுவது பேதனமாகும்.
பேதனத்தின் அதிதேவதை குபேரன் ஆவார். பேதனம் என்பது
ஒருவரை தான் என்னசெய்கிறோம் என்ற சிந்தனையே இல்லாமல்
அவரின் புத்தியை பேதலிக்கச்செய்வதாகும். உதாரணமாக
ஏழாம்அறிவு என்ற படத்தில் டாங்லி என்பவர் தனக்கு முன்னால்
நிற்பவரின் புத்தியை பேதலிக்கச்செய்து விடுவார். இதனால் எதிரில்
நிற்பவர் தன்னுடன் இருப்பவர்களையே கொன்று விடுவார்.
இதற்கு காரணம் நாம் அவரின் புத்தியை வேறு நிலைக்கு
மாற்றியதுதான் இதுவும் நோக்குவர்மத்தைப்போல் ஒருவகை
தாக்குதல்தான். ஒருவரை பார்த்து இவண் பேதலிக்க வேண்டுமென
எண்ணினால் அவன் பேதலித்துப்போய் விடுவான்.
இப்பேதனம் எட்டு வகைப்படும்.
அவை

1)சர்வ பேதனம்
2)இராஜ பேதனம்
3)புருஷ பேதனம்
4)ஸ்திரி பேதனம்
5)மிருக பேதனம்
6)தேவ பேதனம்
7)அக்கினி பேதனம்
8)லோக பேதனம் என்பனவாகும்.


பேதனத்தின் அதிதேவதை குபேரன்

பேதனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

பாரப்பா வித்துவே ஷணத்தைச் சொன்னேன்
  பத்தியுடன் பேதனத்தைப் பகரக்கேளு
மாரப்பா பேதனந்தானதீத வித்தை
 மக்களே ஓம்றீயுஞ்சவ்வும் ஸ்ரீயும் கிலியு
அங்அங் நசி நசி சுவாகாவென்று
 நிசமான யெண்கோணம் நன்றாய்க்கீறி
காரப்பா கோணம்நடு விந்துபோட்டு
 கமலநடு டங்கெனவே கனிவாய்ப்போடே.

போட்டெடுத்துச் சக்கரத்தை முன்னேவைத்து
 புத்தியுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
நாட்டமுடன் மந்திரத்தைத் தினம்நூறப்பா
 நன்மையுடனுருச் செபித்து நயனங்கண்டு
வாட்டமில்லா வாசியிலே நின்றாயானால்
 மகத்தான பேதனந்தான் மார்க்கமாக
காட்டும்முன்னே பேதலிக்குமந்திரசித்து
 கைகண்டவித்தையடா கனிந்துபாரே.

                      -அகத்தியர் பரிபூரணம்1200
பொருள்:

பேதனத்தைப் பற்றி செல்கிறேன் கேள், வித்தைகளில் பேதனம்தான்
அதிக வித்தைகளை உள்ளடக்கியது. பேதனத்தை சித்தி செய்யும்
முறை யாதெனில் ஒரு இரும்புத்தகட்டில் தாமரை இதழைப்போல
எண்கோணம் வரைந்துஅதன் நடுவில் ஒரு வட்டம் போட்டு
அவ்வட்டத்தினுல் "டங்" என்று எழுதவும்.


பின்னர் இச்சக்கரத்தை பன்னீரால் கழுவி இதன் நான்கு மூலையிலும்
சந்தனம் குங்குமம் தொட்டு வைக்கவும்.பின்னர் இதை பூசை
அறையில் வைத்து ஒரு வியாழக்கிழமை நாளில் உடல்மன சுத்தியுடன்
வெள்ளை நிற வஸ்திரம் அணிந்து வடக்கு நோக்கி மரத்தோலாடையில்
அமர்ந்து கொண்டு ஊமத்தம் பூவால் இச்சக்கரத்தை அலங்கரித்து
அதன் எதிரில் புன்னை எண்னெண்யை உற்றி விளக்கேற்றி வைத்து
மன ஓர் நிலையோடு
 'ஓம் றீயும் சவ்வும் ஸ்ரீயும் கிலியும் அங்அங் நசிநசி சுவாகா' என்று
நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் செபிக்க பேதனம்
சித்தியாகும்.

பேதனம் சித்தியான பின்பு உனக்கு தேவைப்படும் சமயத்தில் இதை
பிரயோகிக்க எண்ணினால் உன் மூச்சை நன்கு இழுத்தடக்கிக்கொண்டு இப்பேதனமந்திரத்தை 3 முறை மனதால் நினைத்தவாறு உன் எதிரில்
இருப்பவர்களைப் பார்க்க அவர்கள் உன்னை கண்ட மாத்திரத்தில்
பேதலித்து மிரண்டு ஓடிவிடுவார்கள் அல்லது அவர்களை நம்
எண்ணப்படி செயல்படச்செய்யலாம் என்கிறார் அகத்தியர்.

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

செவ்வாய், 4 ஜூன், 2013

வித்துவேஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்


அஷ்ட கர்மங்களில் ஆறாவது கர்மமாக சொல்லப்படுவது
வித்துவேஷணமாகும். வித்துவேஷணம் என்பது ஒருவருக்கொருவர்
பகையை உண்டாக்கி பிரிப்பது இதனால் எப்படிப்பட்டவரையும்
பிரித்து விடலாம். எது தனக்கு வேண்டாததோ அது தானாகத்தன்மேல்
வெறுப்புற்று தன்னைவிட்டு ஓடிவிடும்படி செய்வதே
வித்துவேஷணமாகும். அதைப்பற்றி இன்றைய பதிவில் காண்போம்.
வித்துவேஷணம் எட்டு உட்பிரிவுகளைக்கொண்டதாகும், அவை

1)சர்வ வித்துவேஷணம்
2)இராஜ வித்துவேஷணம்
3)புருச வித்துவேஷணம்
4)ஸ்திரி வித்துவேஷணம்
5)மிருக வித்துவேஷணம்
6)தேவ வித்துவேஷணம்
7) லோக வித்துவேஷணம் என்பனவாகும்.

வித்துவேஷணத்தின் அதிதேவதை வாயு தேவன் ஆவார்.

வித்துவேஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

பாசமுடன் வித்துவேஷணத்தைக்கேளு
பதிவான மந்திரமிது சுத்தவித்தை
வாசமுள்ள வித்தையடா நேசமான மந்திரமிது
ஓம் ஸ்ரீயும் ரீயும் கிலியும் சர்வயிந்திராணிபகவதே சுவாகாவென்னே
எண்ணமுடன் மந்திரத்தை செபிக்குமார்க்கம்
இன்பமுடன் விபூதியிலே முக்கோணமிட்டு
கண்ணிறைந்த முக்கோண நடுவே விந்து
கருணைவளர் விந்துநடு ஓங்காரஞ்சாத்தி
முன்னிறைந்த ஓங்கார நடுவிலேதான்
முத்தியுடன் சுத்தமதாய் சிங்கென்றிட்டு
சன்னதியை நோக்கிமனத் தன்மையாலே
சங்கையுடன் மானதமாய்ப் பூசைசெய்யே.

செய்யடா மானதமாய்ப் பூசைபண்ண
சிந்தைமன தொன்றாக சிவனைநோக்கி
மெய்யடா மந்திரமிது தினம்நூறப்பா
விரும்பிமன மொன்றாக உருவேசெய்தால்
அய்யனே வித்துவேஷணந்தானெட்டும்
அரகரா தன்வசமா யடங்கியாடும்
மய்யமென்ற சுழிமுனையிலே அடங்கியாட
வரிசையிடனினைத்தபடி வாய்க்குந்தானே.
                                 -அகத்தியர் பரிபூரணம்1200

பொருள்:
ஒரு செய்வாய் கிழமை நாளில் உடல்மனசுத்தியுடன் சாம்பல்நிற
பட்டாடை உடுத்தி எட்டிபலகையில் வடமேற்கு திசை நோக்கி
அமர்ந்துகொண்டு உன் எதிரில் ஒரு எட்டிப்பலகையை வைத்து அதில்
விபூதியை பரப்பி அவ்விபூதியில் முக்கோணம் போட்டு
அம்முக்கோணத்தின் நடுவில் ஓம் என்று எழுதி அதனுள் சிங் என்று
எழுதவும். பின்னர் பன்றி நெய் ஊற்றி விளக்கேற்றி வைத்து
அதைச்சுற்றிலும் காக்கணம் மலர்களையும் ஏனைய
பூசைப்பொருட்களையும் வைத்துக்கொண்டு மனஓர்நிலைப்பாட்டோடு
"ஓம் ஸ்ரீயும் ரீயும் கிலியும் சர்வயிந்திராணிபகவதே சுவாகா" என்ற

மந்திரத்தை நாளொன்றுக்கு 100 உரு வீதம் 48 நாட்கள் செபித்தால்
வித்துவேஷணம் எட்டுக்கும் சித்தியாகும்.
 

பின்னர் இதை பயன்படுத்தவேண்டுமென்றால் உன் மூச்சை
உள்நிறுத்தி இம்மந்திரத்தை 3 முறைசெபித்தால் உன் வழியில்
குறுகிடும் அதிகார பலமுள்ளவர்கள், எதிரிகள், மிருகங்கள்,ஆண்கள்,
பெண்கள், பேய் பிசாசு, துஷ்ட தேவதைகள், ஜீவஜந்துக்கள் என
அனைத்தும் உன்னை கண்ட மாத்திரத்தில்  மிரண்டு ஓடிவிடும்.
அது மதம் பிடித்த யானையாக இருந்தாலும்,
முரட்டு காளையாக இருந்தாலும் ஓடுவிடும்.
பிறர்க்கு இது பயன்படுவதற்கு முன்சொன்ன முறையில் மந்திரத்தை
கையில் விபூதியை வைத்து செபித்து அவர்களுக்கு அவ்விபூதியை
பூசிக்கொள்ளும்படி கொடுக்கலாம். அவர்கள் அதை வயல்வெளியில்
போட்டால் அங்கு எலிகள் வாராது. பிணியாளர்க்கு பூசினால் பிணி
தீர்ந்துவிடும். இன்னும் பல பயன்கள் இதில் அடங்கியுள்ளன.

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

செவ்வாய், 14 மே, 2013

ஆக்ருஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

அஷ்டகர்மங்களில் ஐந்தாவதாக சொல்லப்படுவது ஆக்ருஷணமாகும்,
ஆக்ருஷணம் என்றால் தன்னை நோக்கி இழுத்துக்கொள்ளுதல்
என்று பொருள். எந்த ஒரு பொருளையும் சத்தியையும்
ஆகர்க்ஷிக்கலாம்.  அதாவது மிருகம்,மனிதர்,தெய்வம் முதல்
எதையும் நம்மை நோக்கி வரவழைப்பதே ஆக்ருஷணமாகும்.
ஆக்ருஷணம் எட்டு உட்பிரிவுகளைக் கொண்டது. அவை

1)சர்வ ஆக்ருஷணம்
2)பூத ஆக்ருஷணம்
3)இராஜ ஆக்ருஷணம்
4)புருஷ ஆக்ருஷணம்
5)ஸ்திரி ஆக்ருஷணம்
6)மிருக ஆக்ருஷணம்
7)தெய்வ ஆக்ருஷணம்
8)லோக ஆக்ருஷணம் என்பனவாகும்.
ஆக்ருஷணத்தின் தேவதை வருணன் ஆவார்.

ஆக்ருஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

நோக்கமுடன் உச்சாடனத்தைச் சொன்னேன்மைந்தா
நுண்மையுடன் ஆக்ருஷணத்தி னுண்மைகேளு
பார்க்கமனக் கண்ணாலே நோக்கமாகி
பதிவாக ஓம்கிலியும் சவ்வும் றீயும் ஐயும்
நமோபகவதிதேவி டங்டங் சுவாகாவென்று
தீர்க்கமுடனுருவேறக் கருவைக்கேளு
சிவசிவா நவகோணநடுவில்விந்து
மகத்தான விந்துநடு ஓமென்றூணே

உண்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
பேணியந்த மந்திரத்தைத் தினம்நூறப்பா
பிரியமுடன் தினம் நூறுருவேசெய்தால்
காணுமந்த ஆக்கிருஷ்ணந்தான் சித்தியாகும்
கருணையுட னினைத்ததெல்லாங் காணுங்காணும்
வேணுமிந்த ஆக்கிருஷ்ணந்தான் உலகத்தோர்க்கு
வேண்டிமிகச் சொன்னதிந்த விவரம்பாரே.
                       -அகத்தியர் பரிபூரணம் 1200


பொருள்:
நீ தெரிந்து கொள்வதற்க்கா உச்சாடத்தை பற்றி சொன்னேன்,
அதற்கடுத்ததாக ஆக்கிருஷ்ணத்தை சொல்கிறேன் கேள்,
ஒரு வெள்ளிக்கிழமை நாளில் ஒரு தங்க தகட்டில் நவகோணம்

போட்டு அதன் நடுவில்ஒரு வட்டம் போடவும் பின்னர்
அவ்வட்ட்த்தினுள் ஓம் என்று எழுதவும். எழுதிய அந்த யந்திரத்தை
பூசையில் வைத்து அதை சுற்றி அரளி மலர்களால் அலங்கரிக்கவும்.

பின்னர் உடல்மனசுத்தியுடன் செம்பட்டு ஆடை உடுத்தி வெள்ளாட்டு

தோலை விரித்து அதன்மீது வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து
கொண்டு மன ஓர்நிலையுடன்
"ஓம்கிலியும் சவ்வும் றீயும் ஐயும் நமோபகவதிதேவி டங்டங் சுவாகா"
என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள்

செபித்தால் ஆக்ருஷணம் சித்தியாகும்.
ஆக்ருஷணம் சித்தினால் நாம் நினைத்த எதையும் நம்மை
நோக்கி வரவழைக்கலாம். உலக மக்கள் தனக்கு வேண்டியதை
அடைந்து கொள்வதற்க்கா இதைப்பற்றி விவரமாக சொன்னேன்
என்கிறார் அகத்தியர்.
பகிர்வில் சு.கலைச்செல்வன் எம்,ஏ

ஞாயிறு, 5 மே, 2013

உச்சாடனம் எட்டுக்கும் மந்திரம்

அஷ்ட கர்மங்களில் நான்காவதாக கூறப்படுவது உச்சாடனம் ஆகும்.
உச்சாடனம் என்பது தீயசக்தி முதல் எந்தவொரு சத்தியின்னையும்
அது இருக்கும் இடத்திலிருந்து விரட்டுவது ஆகும்.
உச்சாடனத்தின் அதிதேவதை நிருதி ஆவார்.
அதைப் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

உச்சாடனம் எட்டுவகை உட்பிரிவுகளை கொண்டத்தாகும்.
அது யாதெனில்
1)சர்வ உச்சாடனம்
2)மிருக உச்சாடனம்
3)சத்துரு உச்சாடனம்
4)தேவ உச்சாடனம்
5)விஷ உச்சாடனம்
6)ஸ்திரி உச்சாடனம்
7)வியாதி உச்சாடனம் என்பதுவாகும்.

உச்சாடனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

காணவே தம்பனத்தைச் சொன்னேன்மைந்தா
கண்காண உச்சாடத்தைக் கருதிக்கேளு
பூணவே உச்சாடனந்தா னெட்டுங்கேளு
பூரணமாய் ஓம் சங்வுங்கிலியும் தாக்கு தாக்கு
தூக்கு தூக்கு டங் டங் சுவாகாவென்று
தோணவே செபிக்கிறதோர் வகையைக்கேளு
துருவமுள்ள அறுகோணம் நடுவேவிந்து
பேணவே விந்தெழுதி விந்துக்குள்ளே
பிலமாக டங்கென்று பிலமாய் நாட்டே.

நாட்டமுடன் சக்கரத்தை முன்னேவைத்து
நன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
தேட்டமுள்ள மந்திரத்தைத் தினம்நூறப்பா
சிந்தைமனங் கோணாமலுருவே செய்தால்
வாட்டமென்ன உச்சாடனந்தான் சித்தியாகும்
மகத்தான புருவமதில் மனதைநாட்டி
பூட்டறிந்து வாசியினாற் திறந்துமைந்தா
பொன்னுலகில் நின்று விளையாடுவாயே.
                     -அகத்தியர் பரிபூரணம்1200

பொருள்:

நீ அறிந்து கொள்வதற்காக தம்பனத்தைப்பற்றி சொன்னேன்,
அதற்கு அடுத்ததாக உச்சடனத்தைப் பற்றி சொல்கிறேன் கேள்.
இப்போது உச்சாடனம் எட்டுக்குமான மந்திரத்தை
சொல்கிறேன் கேள்,

"ஓம் சங்வுங்கிலியும் தாக்கு தாக்கு தூக்கு தூக்கு டங் டங் சுவாகா"
இம்மந்திரத்தை செபிக்கும் முறையை சொல்கிறேன் கேள்,
உச்சாடன மந்திரத்தை ஒரு வியாழக்கிழமை நாளில் உடல்
மனசுத்தியுடன் பச்சைப்பட்டு உடுத்தி நீலக்கம்பளம் விரித்து
அதன்மேல் மேற்கு நோக்கி அமர்ந்து கொண்டுஒரு வெள்ளீயதகட்டில்
அறுகோணம் வரைந்து அதன் நடுவில் ஒரு வட்டம்போட்டு
அவ்வட்டத்தினுள் "டங்" என்று எழுதவும்.


உச்சாடன சக்கரம்
 பின்னர் நீ வரைந்த சக்கரத்தை உனக்கு முன்பாக வைத்து அதனை சுற்றி தும்பை பூவை வைத்து புங்க எண்ணெயால் விளக்கேற்றவும்.
பிறகு தேங்காய்,பழம்,பத்தி,சூடம்,சந்தனம் உள்ளிட்ட பூசை
பொருட்களை வைத்து மன ஓர்நிலையுடன் வேறு சிந்தைகள்
இல்லாமல்மேற்சொல்லிய மந்திரத்தை நாளொன்றுக்கு
100 உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் உச்சாடனம் சித்தியாகும்.

உச்சாடனம் சித்தியான பின்னர் மனதை புருவ நடுமையத்தில்
நிறுத்தி பேய்,மிருகம்.அகாத மனிதர் முதல் எந்தவொரு தீயசக்தியும்
ஓரிடத்திலிருந்து விலக வேண்டுமென எண்ணினாலே அது
அவ்விடத்தை விட்டு விலகி ஓடிவிடும். உச்சான சக்கரத்தை
விட்டில் வைத்தால் அங்குள்ள தீய சக்திகள் ஓடி விடும்.
நோய் உள்ளவர்களுக்கு கட்டினால் அந்நோய் நீங்கி விடும்.
இது இருக்கும் இடத்தில் உள்ள சகல தீயசத்திகளும் விலகி விடும்
என்கிறார் அகத்தியர்.

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A