திங்கள், 18 பிப்ரவரி, 2013

குட்டி சாத்தான் வசிய மந்திரம்

மலையாள மாந்திரீகத்தில் அதிகமாக கையாளப்படுவதும்,
மிக மிக இரகசியமாக வெளிடாமலும் பாதுகாக்கப்பட்டும் வரும்
அரிய மந்திரமான குட்டி சாத்தான் வசிய மந்திரத்தை
இன்றைய பதிவில் பலரும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற
நல்லெண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன்.
வழிமுறைகள்:

வெள்ளிக்கிழமை இராத்திரி மூன்று மணிக்கு எழுந்து குளம் அல்லது
நதியில் ஸ்நானஞ்செய்து அனுஷ்டானம் முடித்து இடுப்பளவு
தண்ணீரில் நின்று கொண்டு நாற்பத்தெட்டு நாள் கீழ்சொல்லும்
மந்திரத்தை செபிக்கவும்.

செபிப்பவர் தானே சமையல் செய்து ஒரு வேளை மட்டும் சாப்பிட
வேண்டும். தென்னை ஓலையில் பச்சையாய்க் கிடுகு முடைந்து
அதில் படுத்துக்கொள்ள வேண்டும்.
                 
                           குட்டிசாத்தான் வசிய மூலமந்திரம்    

'ஓம் குட்டிச்சாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி
சாத்தா வாவா, உன் ஆணை, என்னாணை, உன்னையும்
என்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை,
சக்தி ஆணை, சங்கரன் ஆணை வா உம் படு சுவாஹா
  '.


என்று நாளென்றுக்கு108 உரு வீதம் நாற்பது நாள் செபிக்க
சித்தியாகும். இப்படி செய்து வர நாற்பதாம் நாள் மேற்படி
தேவதை ஒரு சிறிய மனித ரூபத்துடன் விபூதி பையும்,
பிரம்பும் கொண்டு வரும் வந்து பூசை செய்யும் குளத்தின்
ஓரமாய் வைத்து விட்டு முழங்கால் ஆழ ஜலத்தில் இறங்கி
ஸ்நானஞ்செய்வது போல் இறங்கும். அந்த சமயத்தில்
பயப்படாமல் சீக்கிரம் மேற்படி பையும், பிரம்பும்
எடுத்துக்கொண்டு இடுப்பளவு தண்ணீரில் போய் நின்று
கொண்டால் இக்குட்டி சாத்தான் அவ்வளவு சலத்திலிறங்காமல்

விபூதி பையையும்,பிரம்பையும் கொடுவென்று கேட்கும்.
அப்போது நீ என்னிடம் நான் நினைக்கும் போதெல்லாம் வந்து

நான் வேண்டுங்காரியங்களைத் தடையின்றி செய்வதாகச்
சிவன்மீதுஆணையிட்டுக் கொடு என்று சொல்ல வேண்டும்.
அது ஆணையிட்டு கொடுத்த பின் விபூதி பையையும்,
பிரம்பையும் கொடுத்து விடவும்.பின்னர் இது நம்முடனே
இருக்கும். இக்குட்டி சாத்தான் மந்திரசித்தி பெற்றவரின்
கண்ணுக்கு மட்டுமே தெரியும், மற்றவர்க்கு தெரியாது.
 நாம் எதை சாப்பிட்டாலும் தனக்கு பின்புரம் உள்ள
சாத்தானுக்கு காட்டி விட்டு சாப்பிடவும்.அப்படி செய்யாதவரை
குட்டி சாத்தான் கெடுதல் செய்யும்.                                                     
                                                             இதன் நன்மை

எந்த தேசத்திலிருந்து என்ன வேண்டுமென்று கேட்டாலும்
கொண்டு வந்து கொடுக்கும் அதை பிறர்க்கு கொடுக்கலாம்
நாம் அனுபவிக்ககூடாது.
நாம் சொல்லும் சகல வேலைகளையும் செய்யும்.நம்மை எங்கு
செல்ல வேண்டுமென்றாலும் நொடிப்பொழுதில் நம்மை தூக்கி
செல்லும். ஆனால் எதேனும் வேளையை கொடுத்துக்கொண்டே
இருக்க வேண்டும் என்று மலையாள மாந்திரீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

           பகிர்வில் S.கலைச்செல்வன் M.A