ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

மெய்ஞானம் - காகபுசுண்டர்


ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறல்ல. இரண்டும் ஒன்றேதான். இதை உணர்வதுதான் மெய்ஞானம். தன்னையும் பரமத்தையும் ஒன்றாக அறிந்து சமாதி நிட்டையில் இருப்பது தான் ஜீவன் முக்தி நிலை என்றும், இதுவே சிவோகம் பாவனை என்றும்,பரமான்மா என்பது சூட்சுமப் பொருள்; அதாவது கண்ணில் காண முடியாத சூட்சுமப் பொருள் என்றும் அதைக் கண்ணால் காண முடிகின்ற தூலப் பொருளில் தான் அறிய முடியும் என்றும் அதனால் நீ பரமான்மாவைக் காண வேண்டுமானால் உன் உடம்பிலேயே அதனை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றால், எள்ளுக்குள்
எண்ணெய் அடங்கியிருக்கும் தன்மையையும் ஒரு சிறிய விதையினுள் பெரிய
மரம் ஒன்று அடங்கியிருக்கும் சூட்சுமத்தையும் பசுவின் பாலிலே நெய்
கலந்திருக்கின்ற தன்மையையும் பூவினுள்வாசனை கலந்திருக்கின்ற நிறம்
கலந்திருக்கின்ற உத்தியையும், மயில் முட்டையில் அழகான பலவண்ண
தோகை ஒளிந்திருக்கின்ற ரகசியத்தையும் நீ உணர்ந்து கொள்வாயானால் உன்னுள் இறைவன் உறைந்து இருக்கும் இரகசியத்தை நீ அறிந்து கொள்வாய்.

அகங்காரம் காரணமாக இதை மறந்து இதைக் கண்டறிவதற்கான சாதனத்தையும் நீ மறந்து விடுவாயானால் உனக்கு அபரோட்சஞானம் கிட்டாது. பரமாத்மாவுடன் ஒன்று படும் முக்தி நிலையும் உனக்குக் கிட்டாது என்கிறார் காகபுசுண்டர்.

ராம நாமத்தின் பெருமை


“அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்தி தர்ப் பணங்களும் தபங்களும், செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
சிந்தை ராம ! ராம ! ராம ! ராம என்னும் நாமமே”

என்ற பாடலில் ராம நாமத்தின் பெருமையைச் சொல்லுகின்றார் சிவவாக்கியர்.

அந்தி, காலை, நடுப்பகல் ஆகிய மூன்று வேளைகளும் புண்ணிய தீர்த்தமாடுகின்ற பலன் இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும் என்கிறார் சிவவாக்கியர்.
சந்தியாவந்தனம், முன்னோரை நோக்கிச் செய்யும் தர்ப்பணம், தவங்கள், செபங்கள் இவற்றால் கிடைக்கும் பயனும், இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும். உள்ளத்தில் உருப்பெரும் அறிவும் இராம நாமத்தால் மிகுந்த வளர்ச்சியடையும். இவ்வாறு இராம நாமத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றார் சிவவாக்கியர்.

புதன், 26 செப்டம்பர், 2012

டெலிபதியை அறிந்து கொள்ளுங்கள் :


முதலில் உங்கள் எண்ண அலைகளுக்கு ஒத்த எண்ண அலைகள் உள்ள ஒரு நண்பரை இதில் உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள். என்றுமே இது போன்ற விஷயங்களில் ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லாத ஆள்களைத் தவிருங்கள். உங்கள் சோதனை சமயங்களில் பார்வையாளராகக் கூட அது போன்ற ஆட்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டாம். இது ஆரம்பக் கட்டங்களில் மிகவும் அவசியம். இதில் நல்ல தேர்ச்சி அடைந்த பின்னர், உங்கள் ஆழ்மன சக்திகள் வலிமை அடைந்த பின்னர் மற்றவர்களின் எப்படிப்பட்ட எதிர்மறை எண்ண அலைகளும் உங்களையும், உங்கள் சக்தியையும் பாதிக்காது. ஆனால் அந்த நிலையை அடையும் வரை ஒத்த எண்ண அலைகள் உள்ள மனிதர்கள், சூழ்நிலைகளே சோதனைக்கு உகந்தவை.

பரபரப்பில்லாத அமைதியான மனநிலையே ஆழ்மன சக்திகள் வெளிப்படப் பொருத்தமான மனநிலை. சரியாகச் சொல்ல முடிய வேண்டுமே என்ற பரபரப்போ, முடியுமா என்ற சந்தேகமோ மனதில் வேண்டாம். முதலில் எளிமையான சோதனையில் இருந்து ஆரம்பியுங்கள். நண்பரிடம் ஒன்றில் இருந்து பத்திற்குள்ளாக ஒரு எண்ணை நினைக்கச் சொல்லுங்கள். அவரை அந்த எண்ணை அவருடைய மனத்திரையில் பெரியதாக உருவாக்கி ஒளிரச்செய்து காணச் சொல்லுங்கள். பின் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனத்திரையில் அவர் கண்டு கொண்டு இருக்கும் எண்ணைக் காண முயற்சி செய்யுங்கள். அந்த எண் உங்கள் மனத்திரையில் ஒளிர வேண்டும் என்று எதிர்பாருங்கள்

இந்த முயற்சியில் நீங்கள் உங்களை அறியாமலேயே யூகம் செய்ய முயற்சிக்கக் கூடும். நண்பருக்குப் பிடித்த எண் எது, அவரது அதிர்ஷ்ட எண் எது என்று யூகிக்கத் தோன்றலாம். அதைத் தவிருங்கள். யூகத்தின் மூலம் சரியான எண்ணைச் சொன்னாலும் நம் நோக்கத்திற்கு அது தோல்வியே. ஓரிரு நிமிடங்கள் கழித்து உங்கள் மனத்திரையில் பெரிதாக ஒளிர ஆரம்பிக்கும் எண்ணை, அல்லது உறுதியாக மேலோங்கி நிற்கிற எண்ணை வாய் விட்டு அவரிடம் சொல்லுங்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள். 90 சதவீதம் ஆரம்பத்தில் தப்பாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால்

அந்த எண் ஆழ்மனதின் முயற்சியின் மூலம் தானாக வரும் முன், பொறுமையில்லாமல் நம் ஆர்வக் கோளாறு ஒரு கற்பனை எண்ணை நாம் வரவழைக்கச் செய்திருக்கலாம்.

முதல் முயற்சியிலேயே குழந்தை நடக்க ஆரம்பித்து விடுவதில்லை. எனவே தளராமல் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். எண்கள் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், பொருள்கள், உங்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்த மனிதர்களின் முகங்கள், ஏதாவது ஒரு துறையின் பிரபலங்கள் என்று மாற்றிக் கொண்டு முயற்சியுங்கள். யூகம், அவசரம், சரியாகச் சொல்ல வேண்டும் என்கிற படபடப்பு போன்றவை இல்லா விட்டால் விரைவிலேயே உங்களால் சரியாகச் சொல்ல முடியும்.

தோல்வியைப் போலவே வெற்றியும் நம் மனநிலையைப் பாதிக்கக் கூடும். அப்படி வெற்றி தோல்விகள் ஏற்படுத்துகிற மாறுதல் மனநிலைகளைத் துடைத்து விட்டு மறுபடியும் புதிதாக ஆரம்பியுங்கள். களைப்பான சமயங்களும் இந்த சோதனைக்கு உகந்ததல்ல. அந்த நேரங்களிலும் சோதனை செய்வதைத் தவிருங்கள்.

அது போல உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஏதாவது சிந்தனையில் இருக்கையில் அவர்களிடம் கேட்காமலேயே அதை உங்களால் உணர முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். முன்பு சொன்னது போல யூகம், கற்பனை இரண்டின் வழியாக அல்லாமல் தானாக மனதில் வந்து சேரும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். தானாக விடை ஏதும் வரா விட்டால் விட்டு விடுங்கள். கட்டாயப்படுத்தி வரவழைக்க நினைக்கும் விடைகள் சரியாக இருப்பதில்லை. ஒரு விடை மனதில் உறுதியாகத் தோன்றினால் விடை சரி தானா என்று அவர்களிடம் கேட்டு சரிபாருங்கள். தவறாக இருந்தால் அதைப் பொருட்படுத்தாதீர்கள். இது ஒன்றும் உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் பரீட்சை அல்ல. அடிக்கடி முயற்சி செய்யுங்கள். போகப் போக நீங்கள் அந்த உணரும் சக்திக்கு 'ட்யூன் ஆக' ஆரம்பிப்பீர்கள். பின் நீங்கள் இந்தத் திறனில் வெற்றி பெறுவது அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அடுத்ததாக நீங்கள் உங்கள் எண்ணத்தை அடுத்தவருக்கு அனுப்புவது பற்றிய சோதனையை ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் எளிய சோதனைகளையே ஆரம்பியுங்கள்.

உதாரணத்திற்கு தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது முன்னால் போகும் நபர் திடீரென்று உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று உறுதியாக எண்ணுங்கள். அவரது பின் கழுத்தில் உங்கள் பார்வையைப் பதித்து ஆழமாக எண்ணுங்கள். அவர் திரும்பிப் பார்க்கிறாரா என்று பாருங்கள். உங்களிடம் பேச வரும் நபர் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சொல்லை அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி கண்டிப்பாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்று உறுதியாக, ஆழமாக எண்ணுங்கள். நீங்கள் நினைக்கிறபடி அந்த நபர் நடந்து கொள்கிறாரா, சொல்கிறாரா என்று பாருங்கள்.

அப்படி நடக்கா விட்டால் அது உங்களின் சக்தியின் குறைபாடாக இருக்க வேண்டியதில்லை. வேறு காரணங்கள் கூட இருக்கலாம். உங்கள் முன்னால் போய்க் கொண்டிருக்கும் நபர் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போயிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போய் இருக்கிற நபரை அந்த சிந்தனையில் இருந்து வெளியே வர வைத்துப் பின் திரும்ப வைப்பது மிகவும் சக்தி படைத்த ஒருசிலரால் மட்டுமே முடியும். ஓரளவு சக்தி பெற்றவர்களாலும் கூட அது முடியாது. அது போல ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போய் அதைப் பற்றி உங்களிடம் பேச வரும் ஒரு நபரை சம்பந்தமில்லாத விஷயத்தையோ, அதற்குப் பொருத்தமில்லாத வார்த்தையையோ சொல்ல வைப்பதும் கடினமே. ஆகவே இது போன்ற சமயங்களில் முன்பே ஏதோ சிந்தனையிலோ, கவலையிலோ, வேலைப்பளுவிலோ மூழ்கி இருப்பவர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப் பொருத்தமானவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.

இது போல பல சோதனைகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உருவாக்கிக் கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்களைக் கூட வாய் விட்டுச் சொல்லாமல் உங்கள் எண்ணங்கள் மூலம் இயக்க முடிகிறதா என்று பாருங்கள். இதிலும் அது அந்த நபருக்கு இசைவில்லாத செயல்களைச் செய்ய வைக்கும் முயற்சியாக இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த சோதனைகள் சுவாரசியமானவை. இதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்குப் பெரிய முக்கியத்துவத்தைத் தராதீர்கள். சற்று முன் விளக்கியபடி தோல்விகளுக்கு உங்கள் ஆழ்மனசக்திக்கு சம்பந்தமில்லாத வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அதையும் அலசுங்கள்.

போகப் போக உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் அதிகரித்துக் கொண்டே போவதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இந்த சோதனைகள் குறித்தும், நீங்கள் அடைந்த வெற்றிகள் குறித்தும் மற்றவர்களிடம் சொல்வதையோ, அலசுவதையோ தவிர்ப்பது நல்லது.

                                                                                                                                    
                                                                                                                                   பகிர்வில் சு.கலைச்செல்வன்
                                                                                         -அறிவுமையம்-

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

உரோம விருட்சம்

உரோம விருட்சம் என்று ஒருவகை மரம் உண்டு.  இம்மரம் சதுரகிரியில் உள்ள இராமதேவரின் ஆசிரத்தின் கிழக்கு திசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சாம்பல் நிறத்தில் மருதமரம் போல் உயர்ந்து விசாலமாய் வளர்ந்து இருக்கும், இதன் இலை தாமரை இலைபோல் வட்டமாய் ஒருவகை சுளை உள்ளதாய் இருக்கும். அடிமரத்தின் தூறிலிருந்து மேல் நுனிவரை பட்டையின் மேல் ரோமம் நிறைந்து மஞ்சள் வர்ணமான பூ பூக்கும். இதைக்கண்டு பிடித்து முறைப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்தி செய்து அடிமரத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு பலம்(35-கிராம்) பாதரசத்தை விட்டு அதன் குச்சியால் ஆப்பு அடித்து இரண்டு மாதம் சென்று அதை எடுத்தால் ரசம் கட்டி மணியாக இருக்கும்.அதை எடுத்து அதன் பட்டையை அரைத்து அதற்கு கவசமிடு10 எருவில் புடம்போட்டு பத்திரம் செய்யவும். இதை வாயில் போட்டுக்கொண்டு வெட்டினால் உடலில் வெட்டு ஏறாது. குண்டு பாயாது. புலி, யானை போன்ற மிருகங்களாலும் பாம்பு, தேள் போன்றவைகளாலும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. இது ஒரு கற்பம் இதனால் நரை,திரை,முப்பு,பிணி நிங்கி காயசித்தி உண்டாகும். இதை இடையில் கட்டிக்கொண்டு நூறு பெண்களை புண்ர்ந்தாலும் விந்துவிழாது. இதை துடையில் கிழித்து வைத்து தைத்துவிட்டால் பத்துயானை பலமுண்டாகும். சரீரம் வஜ்ஜிர சரீரமாகும்.ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாவு கிடையாது. சரீரம் ஜோதி மயமாய் பிரகாசிக்கும் இம்முறையால்தான் கருவூரார், காலங்கிநாதர் சித்தி அடைந்ததாக சித்தர் நூல்கள் சொல்லுகின்றன. மேலும் இதன் பட்டையை இரும்பு படாமல் எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி வீதம் தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்டாலும் காயசித்தி உண்டாகும். தேகத்தில் காந்தி (தேஜஸ்) கூடும் என்று சித்தர்களின் நூல்கள் குறிப்பிடுகின்றன.
                                                                                                                                     பகிர்வில் சு.கலைச்செல்வன் 
                                                                   - அறிவுமையம் -

காரியசித்தி கைகூட


செம்போத்து
  செம்போத்து கூடு கண்டுபிடித்து எடுத்து வந்து தீயில் போட்டு எரித்தால் ஒரு வேர் மட்டும் வேகாது. அதைப்பார்த்து எடுத்து பதனம் பண்ணவும்.இதை ஒருதாயத்தினுள் வைத்து அடைத்து இடுப்பு அல்லது புஜத்தில்(கை) ½¢ந்து கொண்டு சென்றால் எல்லா காரியமும் வெற்றியாகும். மேலும் சீட்டு ஆட்டம், சேவல் பந்தயம், குஸ்தி, மல்யுத்தம் என எதுவானாலும் ஜெயமாகும்.
பகிர்வில் S.கலைச்செல்வன்.B.Litt,M.A

வியாழன், 20 செப்டம்பர், 2012

மருந்து கொடுக்கத்தகாதவர்கள் -யூகி முனிவர்

 வெறி பிடித்தவன், மது குடிப்பவன்,விசுவாசம் இல்லாத பாவி, கெட்ட எண்ணம் உள்ளவன், மானம் இல்லாதவன்,பிறர் மனைவியுடன் உறவு கொள்பவன்,மூடன், செவிடன், ஊமையன்,மூக்கு அறுந்தவன்,பிறர் குடியைக் கெடுப்பவன்,கஞ்சன் - இப்படிப்பட்டவர்களுக்கு மருந்து கொடுக்கவோ, அவர்களை தீண்டவோ கூடாது என யூகிமுனிவரின் சிகிச்சா சாரத்தில் கூறப்பட்டுள்ளது.

மருந்து செய்ய உண்ண நாளறிதல்- யூகி முனிவர்




சனி, புதன், திங்கள், வெள்ளி - ஆகிய நாட்களில் மருந்துண்டால் நோய் தீராது தீமையாகும்.

செவ்வாய், வியாழன் - ஆகிய நாட்களில் மருந்துண்டால் பிணி தீரும்.

ஞாயிற்றுக்கிழமையில் மருந்து செய்து நோயாளிக்கு கொடுக்க வேண்டும் என்கிறார் யூகிமுனி.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

மருத்துவரை அழைக்கும் திசைகளின் குணம் - யூகிமுனிவர்

மருத்துவரை ஒருவன் அழைக்கும்போது

கிழக்கில் இருந்து அழைத்தால்                                         - நன்று
தென் கிழக்கு, தென் மேற்க்கு ஆகிய
திசைகளில் நின்று அழைத்தால்                                     - நோயாளி இறக்கும் குறிப்பை உணர்த்தும்
மேற்க்கு நின்று அழைத்தால்                                            - நன்று
வடமேற்க்கு                                                                                  - மத்திமம்
வடகிழக்கு                                                                                      - நற்குணம் தரும்  என்கிறார் யூகிமுனிவர்

                                                                                                                                                பகிர்வில் சு.கலைச்செல்வன்
                                                                                       -அறிவுமையம்-

மருத்துவர் அணியவேண்டிய ஆடை- யூகிமுனிவர்


          தூய்மையான வெண்மை நிற ஆடை உடுத்தி வினைதீர வேண்டுமென நினைத்து மருந்து செய்பவரே மேன்மைமிக்க மருத்துவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்,
இவர்கள் பல நூல்களை கற்றுத்தேர்ந்தவர் என்பதை கண்டுகொள்ளலாம் என்கிறார் யூகிமுனிவர்.
                                                                                                                            பகிர்வில் சு.கலைச்செல்வன்
                                                              -அறிவுமையம்-

சனி, 15 செப்டம்பர், 2012

கல்வத்தின் அளவும் அமைப்பும்-அகத்தியர்


சித்த மருத்துவத்தில் மருந்துகளை அரைக்க பயன்படும் கல்வம் மிக முக்கியமானது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கல்வத்தை எந்த அளவில் அமைக்கவேண்டும் என அகத்தியர் தனது பெருநூல் காவியத்தில் கூறியுள்ளார். அதைப்பற்றி இப்பக்கத்தில் விரிவாகப் பார்ப்போம்.

ஆமேதான் பண்டிதற்குக் கல்வம் சொல்வேன்
அப்பனே புலஸ்தியனே புத்திவானே
தாமேதான் நீளமது சொல்லக்கேளு
சாற்றுகிறேன் அங்குலந்தான் பதினாறாகும்
நாமேதான் அகலமது வாறதாகும்
வலமான குழியாமது வாழஞ்சொல்வேன்
போமேதான் வங்குல மிரண்டதாகும்
பொலிவான நன்னியென்ற கல்லுமாமே


கல்லான கல்லதுதான் சொல்லக்கேளு
கருக்குருந்தை செங்குருந்தை நன்னியாகும்
சொல்லுவேன் சாற்றோரம் வரம்புகம்பி
திரண்ட வங்குலமதுதான் வொன்றேயாகும்
வல்லசித்தர் சொற்படியே புலிமுகமும் வைத்து
வளமையுடன் சித்தரித்து வண்மையாக
புல்லறிவால் கல்லமைத்துச் செய்யும் யோகங்
பூதலத்தில் தேவவயித்தியானான் பாரே.
                          

                                          -அகத்தியர் பெருநூல் காவியம்
பொருள்:
சித்த மருத்துவர்க்கு பயன்படும் கல்வத்தை பற்றி சொல்கிறேன் புலத்தியனே கேளு,
கல்வத்திற்க்கு நீளமானது - 16 அங்குலம்
அகலம்                                              - 6 அங்குலம்
குழி ஆழத்தின் அளவு            - 2 அங்குலம்
விளிம்பின் அளவு                    - 1 அங்குலம்
                    -என்ற அளவில் நல்ல பொலிவான நன்னியென்ற திடமான கல் வகையில் கருங்கல் அல்லது சிவப்பு கல்லை தேர்ந்தெடுத்து கல்வம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் கல்வத்தின் முகப்பில் வல்லமையுடய சித்தர்கள் சொன்னபடி புலிமுகம் சித்தரித்து கல்வத்தை அமைக்கவேண்டும். மேற்சொல்லிய அளவு முறைப்படி நுண்ணிய அறிவோடு கல்வம் அமைத்து வைத்தியம் செய்பவன் உலகத்தில் தேவ வைத்தியனாவான் என்கிறார் அகத்தியர்.
                                                                                                                 பகிர்வில் சு.கலைச்செல்வன்
                                                        -அறிவு மையம்-

வியாழன், 13 செப்டம்பர், 2012

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற

முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

திங்கள், 10 செப்டம்பர், 2012

முல்லைப் பூவின் மருத்துவ குணம்


*முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும்.

*முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.
...

*முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.

*ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.

*உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.

தேள் விஷம் நீங்க


இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

கட்டிகள்,சிரங்குக்கு மந்திரம்

கட்டிகள் பழுத்தபின் உடைக்கும் மந்திரம்:
நஞ்சு, பிஞ்சு, நாசமதாகிப் பிஞ்சு நஞ்சு போக ஸ்வாஹா! (108உரு)
 
சிரங்கு கண்டவுடன் செய்கிற மந்திரம்:


மசிமா மசி; நசி மா நசி! (108உரு)

சிரங்கு நைய மந்திரம்

கசி; நசி! (108உரு)

வயிற்று வலி தீர



*பதினைந்து மிளகு எடுத்து நன்றாக அறைத்துப் பசு வெண்ணெய்யுடன் கலந்து காலை வேளையில் 3-நாட்கள் சாப்பிட வயிற்று வலி தீரும்,

*வெங்காயச் சாறு எடுத்து அத்துடன் போதிய உப்பு கலந்து உட்கொண்டால் வயிற்று வலி நீங்கிவிடும்.

*பழுத்த பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கிவிடும்.

*கறிவேப்பிலையை அப்படியே பச்சையாகத் துவையல் செய்து சாப்பிட வயிற்றுவலி இருக்காது.

சீனாவில் காளிதாசர் சிலை


சீனாவின் ஷங்காய் நகரில் இந்திய கவிஞர் காளிதாசருக்கு சிலை உள்ளது.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

குறி சொல்லும் கர்ண எட்சிணி

யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போம்.

கர்ண எட்சிணி மந்திரம்

'ஓம் ஹ்ரிம் ஸ்ரீம் க்லிம் நமோ பகவதே அரவிந்தே மமவசம் குருகுரு சுவாஹா"

- இம்மந்திரத்தை தினம் 1008-உருவீதம் 10 நாட்கள் செபிக்க கர்ண எட்சிணி பிரசன்னமாகும். இந்த தேவதை மூன்றுகால நடப்பையும் சொல்லும்.
பூஜை முறை:

நிவேதனம், அதிரசம், சுண்டல், அப்பம்,தேன், வாசனை திரவியம் - முதலியன வைத்து வணங்கி தூபதீபம் காட்டி செபம் செய்ய வேண்டும்.இதை சித்திசெய்தால் தினம் பத்துபேர் நம்மை சூழ்ந்து கொண்டு இருப்பார்கள்.சர்வ சௌக்கியமுண்டாகும் என்கிறது மலையாள மாந்திரீகம்.

விந்திறங்கா வசியம்-கோரக்கர்



மெல்லியரை உம்-யம் மென்றுறைத்துச் சேர
மேவிய விந்திறங்கா வசியமாமே.
                                              

                                                                     -சந்திர ரேகை                       

பொருள்:
                    பெண்களை சேரும் முன் உம்-யம் என்று 108 முறை
எண்ணியவாறு முச்சை இழுத்தடக்கி செபித்திவிட்டு பின்பு
புணர்தால் விந்து இறங்காது.இதனால் ஆனந்தம் அடைந்த
பெண்கள் உன்னிடம் வசியமாவார்கள்.

மாரண சூட்சமம்- கோரக்கர்

சொல்லிடுவேன் மாரணத்தின் சூட்சம் தன்னைச்
சுருக்காகப் பூரணமாய் வாசிகூட்டி
நல்லதொரு உம் நம் மென்றிழுத்த டக்கி
நாட்டிலுன்னை எதிர்த்தோர்க்கு சாபம் ஈந்தால்
தொல்லைமிக வடைந்திடுவார் துலங்க மாட்டார்
துரிதமுடன் வல்லரக்கர் எதிர்நில்லார்கள்
                                                         

                                                                              -சந்திரரேகை(117)
பொருள்:
                
முச்சை இழுத்தடக்கி உம்-நம் என்று 16 உரு  மனதினில் செபித்து
நாட்டில் உன்னை எதிர்வர்களுக்கு சாபம் கொடுத்தால் அது
பலித்துவிடும். மந்திரம் சித்தியடைய வேண்டுமானால் முதலில்
ஓம் உம் நம் என்ற இம்மந்திரத்தை 1008 உரு செபிக்க
சித்தியாகும். பின்னர் பிரயோகம் செய்ய சித்தியாகும்

இதனால் உன் எதிரிகள் பல தொல்லைகளுக்கு ஆளவார்கள்.
அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் விலங்காமல்
போய்விடும்.  இதனால் எப்படிபட்ட கொடியவர்களும் உன் எதிரில்
நிற்க அஞ்சுவார்கள் என்கிறார் கோரக்கர்.

புதன், 5 செப்டம்பர், 2012

பேய் பில்லி சூனியம் நீங்க


மருதோன்றி(மருதாணி) விதைகளை இடித்து கரி நெருப்பின் மேல்
போட்டால் புகை வரும். அந்தப் புகையைப் பிடித்து வந்தால்
மனிதர்களுக்கு ஏற்படும் பில்லி, சூனியம், பேய், பூதம் நீங்கும் என்பர்.



இன்றும் கேரளாவிலும், நம் நாட்டின் சில இடங்களிலும் பேய், பிசாசு,
 பில்லி, சூனியம் விரட்டுபவர்கள் இந்தப் புகையை உண்டாக்கி விரட்டி வருகின்றனர்.

அகத்தியர் அருளிய காட்டேரி வசிய மந்திரம்


'' அன்று காட்டேரி தேவதை தன்னை
அன்புடனே வசப்படுத்த மந்திரபீஜம்
இன்றுநீ ஓம் சிங் வங் டங் என்று லட்சம்
இசை பெறவே செபித்திட நற்சித்தியாமே
.

-12வது மந்திர காண்டம்(அகத்தியர் பன்னிருகாண்டம்)

விளக்கம்: அன்புடனே காட்டேரி தேவதையை வசியம் செய்ய மந்திரம்,

' ஓம் சிங் வங் டங் " என்று ஒரு லட்சம் முறை வடக்கு திசை அமர்ந்து செபிக்க மந்திரம் சித்தியாகும்.

எளிய மருத்துவ குறிப்புகள்

 1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்

9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வர குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

ஜல தம்பனம் - நீர் மேல் நடக்கும் சித்து


சூரியனை அரவுதொடும் செவ்வாய் வாரம்
 தீண்டயிலே கொடுவேலி நத்தைச் சூரி

வீரியமாய் காப்புக் கட்டி பிடுங்கி வந்து
வித்துவேசணி நமச்சிவாய வென்று

காரியமாய்க் குளிசமிட்டுச் சூரி வேரைக்
கட்டியே வாரி தனில் நடந்து பாரே
வீரியமும் வீழாது சலம் தம்பிக்கும்
விள்ளாதே கொடிவேலி விளம்புவேனே
                                                 
                                         -மச்சமுனி பெருநூல் காவியம் -800

பொருள் :
சூரிய கிரகணம்,செவ்வாய்க் கிழமை வரும் நாளன்று கிரகணம்
பிடிக்கும் போது "கொடிவேலி" "நத்தைச் சூரி" இரண்டு மூலிகை
களை காப்புக் கட்டி,"ஓம் வித்து வேசணி நமச்சிவாய" என்று 108உரு
செபித்து இரண்டு மூலிகைகளின் வேர்களையும் சேர்த்துக்கட்டி ஒரு
செப்பு தாயத்தினில் அடைத்து இடுப்பில் கட்டிக் கொண்டு ஏரி, குளம், கடல் போன்றவைகளில் உள்ள தண்ணீரின் மேல் நடக்கலாம் என்றும் அந்த நீர்
உறைந்து ஸ்தம்பித்து விடும் என்றும்  மச்சமுனி பெருநூல் காவியம் 800ல்
மச்ச முனிவர் குறிப்பிடுகின்றார்.

                                     பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

லாடன் வசிய மந்திரம்:


உடல் சுத்தியுடன் தூய்மையான இடத்தில் கிழக்கு திசை நோக்கி
அமர்ந்து கொண்டு தேங்காய், பழம், பத்தி, சூடம், சர்க்கரை பொங்கல்
முதலிய பூசை பொருட்களை வைத்து மனதை ஓர் நிலைப்படுத்திக்
கொண்டு

 
லாடன் வசிய மந்திரம்


                                                               "ஓம் ரீரீரீரீ ராராரா டிங்டிங்டிங்டிங்" 

என்ற மந்திரத்தை 1000-உரு செபிக்க லாடமுனி வசியமாகும்.

லாடன் வசியத்தால் அறுபத்து நான்கு சித்துக்களையும் நம்மால்

செய்ய முடியும். உலகிலுள்ள பேய், பூதங்கள் எல்லாம் லாடமுனியை

வசியம் செய்தவரைக்கண்டால் அடங்கிப்போய்விடும் என அகத்தியர்

தனது மாந்திரீக காவியத்தில் கூறியுள்ளார்.

அஷ்டமாசித்துக்கள்


* அணிமா:

பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.
பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

* மஹிமா:

சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.
வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருஷ்ண பரமாத்மா அர்ஜூனனுக்கு விஸ்வ ரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

* லஹிமா:

கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.
திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.

*கரிமா:

இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.
அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.

*பிராத்தி:

எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.
திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

*பிரகாமியம்:

வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.
அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.

*ஈசத்துவம்:

ஐந்து தொழில்களை நடத்துதல்.
திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

*வசித்துவம்:

ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.

திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.

கருவூரார் அருளிய மந்திரங்கள்:கருவூரார் பலதிரட்டு


முதலில் குருவினை மனதால் துதித்து பின்பு மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும். முதலில் குறைந்தது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.
எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உபயோகிக்கலாம். இவ்வாறு தொடர்ந்து உச்சரிக்கும் போது அந்த மந்திரங்கள்  சித்தி
யாகும் . பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 108 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்கும். இம்மந்திரங்கள் அனைத்தும் கருவூரார் பலதிரட்டு என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.


தத்புருஷமுகம்-மந்திரங்கள்:

'நமசிவாய' என உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும்.

"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.

"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகும்.

"அங் சிவாய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகும்.

"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க மோட்சம் கிட்டும்.

"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.

அகோரமுகம்-மந்திரங்கள்:

"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்க ஜீவனில் சிவத்தைக் காணலாம்.

"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.

"வசால வசால சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.

"சரனையச் சிவாய நம" என உச்சரிக்க வானில் பறக்கலாமாம்.

"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.

"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்

வாமதேவமுகம்-மந்திரங்கள்

"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டும்.

"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியும்.

"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.

"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.

சத்யோசாத மந்திரங்கள்

"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.

"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.

"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்

ஈசானமுகம்-மந்திரங்கள்

"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க
சிவதத்துவத்தை காணலாம்.

"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.

"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.

"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.

"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.

தீய சத்திகள்,கண் திருஷ்டி விலக,வியாபாரம் செழிக்க:


முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, ஆகியவைகளைக் கூட்டி அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ, தெளிக்க தீய சத்திகள்,கண் திருஷ்டி,நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.

இராஜ வசிய மந்திரம்

இராஜ வசிய மந்திரம்
வசீகரா, வசீகரா, ராஜ வசீகரா, அச்சிட்ட பங்காளா, தக்ஷிணாமூர்த்தி,
துர்க்கா தேவதாயை நம என்று 1008 உரு செபிக்க ராஜவசியம் உண்டாகும்.
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அரசு சார்ந்தவர்களிடம்
வசியத்தை உண்டாக்குவதே ராஜவசியமாகும்.

சகல வியாதிகளுக்கும் மந்திரம்


ஓம், ரீங், அங், - இந்தப்படிக்கு விபூதியில் எழுதி ஆயிரத்தெட்டு
உரு ஜபித்து சூடன் கட்டியை அதன் மேலே வைத்துக் கொடுக்க
வியாதி தீரும். இது கை கண்டது. இதை நேயாளிகள் சிறிது
உள்ளுக்கு விழுங்கவும், பிறகு நெற்றியில் இட்டு கொள்ளச்செய்ய வேண்டும்

கணபதி மந்திரம்

ஓம் கணபதி ஐயும் கணபதி கிளியும் கணபதி ஸவ்வும் கணபதி வா, வா;                     சகல ஜனங்களும் போகங்களும் சகல லோக சித்தியும், உமக்கு வசியமானது போல் எனக்கு வசியமாக சுவாஹா. என்று 1008 உரு செபிக்க சகல லோக வசியம் உண்டாகும்.

தாய்ப்பால் பெருக....


போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒருகிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச்சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்



* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.
* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.


* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.


* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும்.  உணவு உட்கொள்வதற்கு முன்பாக,  இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

ஒற்றைத் தலைவலி நீங்க


முருங்கை இலையும், பூண்டும் சமஅளவு எடுத்து சிதைத்து அதிலிருந்து சாறெடுத்து அச்சாற்றை 5-6 துளிகள்வரை வலபக்கதலைவலிக்கு இடது முக்கிலும், இடபக்கதலைவலிக்கு வலது முக்கிலும் விட ஒற்றைத் தலைவலி நீங்கும்.

உடல் இளைத்தவருக்கு


பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

இருமல் தீர



*இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

*கண்டங்கத்திரி, சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றை அரைத்து உண்டு வர இருமல் குறையும்.

*திருநீற்றுபச்சிலை சாற்றில் மிளகு சேர்த்து ஊற வைத்து பொடி செய்து மூக்கில் உறிஞ்ச இருமல் குறையும்

*ஆடாதோடை இலை, சித்தரத்தை,காய்ந்த திராட்சை ஆகியவற்றை காய்ச்சி குடிக்க  இறைப்பு இருமல் குறையும்.

* துளசி, திப்பிலி இவற்றை காய்ச்சி குடிக்க இருமல் குறையும்.

* கருந்துளசி, மிளகு, அதிமதுரம், இவற்றை சாப்பிட சளி கட்டு நீங்கும்.

தலைவலி தீர



1) அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்
2) இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்து காய்ச்சி சீசாவில் பத்திரப்படுத்தவும். இந்த தைலத்தை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பயத்தமாவு, அரப்புத்தேய்த்து வெந்நீரில் குளிக்கவும். இதனால் தலைவலியும்,பிரசவித்த பெண்களின் ஒற்றைத்தலைவலியும் தீரும்.
 3) வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

உடல் வலி தீர

1) வில்வ இலையும், அருகம் புல்லும் இடித்து சாறு எடுத்து காலை-மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.

2) மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம்,நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டு வர உடல்வலி, அலுப்பு நீங்கும்.

3) முருங்கை ஈர்க்கு கஷாயம் சாப்பிட உடல்வலி, அசதி தீரும்.

4) வேலிப்பருத்தி இலைச்சாறு எடுத்து அதில் கால்படி சுண்ணாம்பு நீற்றினது 12 கிராம் போட்டு நன்றாய் கறைத்து ஒருமணி நேரம் வெயிலில் வைத்துக் குடைசல், வலி உள்ள பாகங்களில் நன்றாய்த் தேய்க்க வேண்டும் ஓருமணி நேரத்தில் வலி, குடைச்சல், மூட்டுகளில் வரும் வீக்கம், வலி நீங்கும்.

5) வேலிப்பருத்தி இலையை அறைத்துச் சிறு அடையாக செய்து நல்லெண்ணெயில் போட்டு அடை பொரிந்து மிதக்கும் வரை காய்ச்ச வேண்டும். பிறகு ஆறினதும் தலையில் தேய்த்து விட வேண்டும்.இதனால் மண்டை வலி, கபால குத்தல், மண்டை இடி இவைகள் ஒருமணி நேரத்தில் குணமாகும்.  

 6)துளசி இலை, மிளகுப் பொடி, சுக்குப் பொடி-இவைகளைத் தண்ணிரில் போட்டு காஷயமாக்கி பாலும் சர்க்கரையும் சேர்த்து பருக உடல் வலி உடனே நீங்கும்.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

நாள் விழிப்பு


1) புதன்-வியாழன்-வெள்ளி = இரு கண்ணுள்ள நாட்கள்

2) ஞாயிறு- திங்கள் = ஒரு கண்ணுள்ள நாட்கள்
...
3) செவ்வாய் - சனி = குருட்டு நாட்கள் 

மேற்குரிய நாட்களில் 

இருகண்ணுள்ள நாட்களில் காரியங்கள் செய்யின் நன்மையாகும்,

ஒரு கண்ணுள்ள நாட்களில் காரியங்கள் செய்யின் மத்திம பலன் உண்டாகும்.

 குருட்டு நாட்களில் காரியங்கள் செய்யின் துன்பம் உண்டகும்,எடுத்த காரியம் தோல்வியில் முடியும்.