ஞாயிறு, 29 டிசம்பர், 2013

நல்லபாம்பு ஜாலம்


நல்லபாம்பின் கொழுப்பை ஒரு வெள்ளைதுணியில் தடவி 

நிழலில் உலர்த்தி அதை திரித்து திரியாக்கி அத்திரியை 
விளக்கில் போட்டு அதில் ஆமணக்கெண்ணையை ஊற்றி 
தீபமேற்ற அவ்வெளிச்சம் பட்ட இடமெல்லாம் நல்ல பாம்புகள் ஊர்வதைப்போல் இருக்கும்.
பார்ப்பவர்கள் பயந்து ஆச்சரியப்படுவார்கள்.
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சத்துரு(எதிரி) துன்பமடையும் சித்து


எதிரியின் காலடிமண், நண்டுகுழி மண்,சுடுகாட்டு மண்,

பெருங்காயம்,21 மிளகு இவைகளை ஒரு மண்பாண்டத்தில் போட்டு புளியமரத்துவிறகால் தீயை எரித்துக்கொண்டே 'நசி மசி ' செபிக்
 

எதிரியின் உடம்பில் தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும் அவன் எலும்புகளெல்லாம் காந்தால் எடுக்கும். எரிப்பதை நிறுத்திவிட எரிச்சல் 
நிற்கும். அப்படியும் எரிச்சல் நிற்காமல் அவன் துன்பப்பட்டால் அதை நிவர்த்தி செய்ய 
முத்திய புளியம்பட்டையை நீரில் இடித்துப் போட்டு சர்க்கரை சேர்த்து கசாயமாக காய்ச்சி
 3 நாள் காலை-மாலை உட்கொள்ள நிவர்த்தியாகும்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A