சனி, 2 ஆகஸ்ட், 2014

புடங்களுக்கு சாப நிவர்த்தி


இரசவாதம்,இரசமணி மருந்து என எதற்கு புடம் போட்டாலும் இம்மந்திரத்தை செபித்து பின்னர் புடமிட அப்புடத்தின் சாபம் 

நீங்கி புடம் கருகிவிடாமல் சரியான பக்குவத்தில் சித்தியடையும்.
ஓம் சொர்ணவைரவா சுகமுள்ள வைரவா
வாதபித்தத்திற்கு வசமுள்ள வைரவா
மூலிகை தனக்கு முன்னோடும் வைரவா
நான் வைத்த புடமானது நலங்காமல் நிற்க சுவாகா.

 

இம்மந்திரத்தை 108 உரு செபித்து தூபங்காட்டி புடமிட 
வைரவர் துணையிருப்பார்.

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 30 மே, 2014

பிரசவ வேதனை நீங்கி பிள்ளை பிறக்க மந்திரம்


தூய்மையான ஓரிடத்தில் உடல்மன சுத்தியுடன் அமர்ந்து 

பசுவின் வெண்ணெய் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு
''ஓம் டம் டம் கங் கணேசாய நமஹ" என்று 108 உரு செபித்து

பிரசவ வேதனைப்படும் பெண்ணின் தொப்புழில் பூச வேதனை 
நீங்கி உடனே பிரசவமாகும்,
 


பகிர்வில்
சு.கலைச்செல்வன் எம்.ஏ

சனி, 17 மே, 2014

மழையில் நனையாது சஞ்சரிக்கும் ஜாலம்


ஆந்தையின் கண்,
இந்திரகோபப்பூச்சி,
பாதரசம்
-இம்மூன்றையும் ஒரு ஆண் களர்ச்சிக்காயில் துவாரம் 

போட்டு அதில் இம்மூன்றையும் அதனுள் அடைத்து மெழுகினால் அத்துவாரத்தை மூடி அக்காயை வாயிலடக்கிக் கொண்டு மழை 
பெய்யும் போது நடந்து போனால் நனையாமல் போகலாம்.
பார்ப்பவர்கள் மகாசித்தரென வணங்குவார்கள்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 4 மே, 2014

பத்மாவதி எட்சணி மந்திரம்

"ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் பத்மாவதி 
சகலலோக திரிகால வர்த்தமானம் ஸதய ஸதய சுவாகா".
இம்மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 22 நாட்கள் செபிக்க சித்தியாகும்.


பூஜை முறை
பால்,பழ்ம்,தேங்காய்,சுண்டல்,வடை,செவ்வலரி புஷ்பம் 
இவைகளை வைத்து தீபதூபம் காட்டி செபம் 
செய்ய 22வது நாள் பத்மாவதி எட்சணி பிரசன்னமாகும்.
இது குறி சொல்லும் முக்கால நடப்பையும் இதன்மூலம் 
தெரிந்து கொள்ளலாம். மேலும் திருட்டு போன பொருள் 
அது இருக்குமிடம் அதை எடுத்தவன் யார் என்பதையும்
அறியலாம்.மூலிகை, ரசாயனம் இவற்றை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.


                                                               -இந்திர ஜாலம்
பகிர்வில்
சு.கலைச்செல்வன் M.A

சனி, 19 ஏப்ரல், 2014

உடும்பு இறைச்சியின் மருத்துவப்பயன்கள்


உடும்பு இறைச்சியினால் 

மூலம், காது நோய், தலைநோய்.வெள்ளை,வெட்டை,
வீக்கம், மேகம், வாத பித்தம்,தோல் வறட்சி, கிராணி, மூலவாயு,சூதகவாயு,பலவீனம்,குருதி பெருக்கு ஆகியன நீங்கும்.
இதனை உடல் வலுவிற்காக சமைத்துண்பதுண்டு.
பகிர்வில்
சு.கலைச்செல்வன்

வியாழன், 20 மார்ச், 2014

நெருப்பை கையில் அள்ளும் வித்தை

 

வசம்பை கற்றாழைச்சார் விட்டு நன்றாக அரைத்து அதை 
தனது இரு கைகளிலும் பூசிக்கொண்டு நெருப்பை வாரீனால் சுடாது.
இதை பார்ப்பவர்கள் உனக்கு அக்கினி தம்பனமாகி விட்டதாக எண்ணுவார்கள்.

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 16 மார்ச், 2014

பச்சை தவளை ஜாலம்



பச்சை தவளையின் கொழுப்பைக் கொண்டுவந்து அதில் ஒரு வெள்ளைத்துணியை போட்டு பிரட்டி
அதை நிழலிலுலர்த்தி திரியாக திரித்து அத்திரியை விளக்கில் போட்டு விளக்கெண்ணை ஊற்றி விளக்கேற்ற அவ்வொளி பட்ட இடமெல்லாம் தவளைகளாகவே தெரியும் விளக்கை அணைத்து விட்டால் ஒன்றுமிராது.
 
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A