ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

குறி சொல்லும் கர்ண எட்சிணி

யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போம்.

கர்ண எட்சிணி மந்திரம்

'ஓம் ஹ்ரிம் ஸ்ரீம் க்லிம் நமோ பகவதே அரவிந்தே மமவசம் குருகுரு சுவாஹா"

- இம்மந்திரத்தை தினம் 1008-உருவீதம் 10 நாட்கள் செபிக்க கர்ண எட்சிணி பிரசன்னமாகும். இந்த தேவதை மூன்றுகால நடப்பையும் சொல்லும்.
பூஜை முறை:

நிவேதனம், அதிரசம், சுண்டல், அப்பம்,தேன், வாசனை திரவியம் - முதலியன வைத்து வணங்கி தூபதீபம் காட்டி செபம் செய்ய வேண்டும்.இதை சித்திசெய்தால் தினம் பத்துபேர் நம்மை சூழ்ந்து கொண்டு இருப்பார்கள்.சர்வ சௌக்கியமுண்டாகும் என்கிறது மலையாள மாந்திரீகம்.

விந்திறங்கா வசியம்-கோரக்கர்



மெல்லியரை உம்-யம் மென்றுறைத்துச் சேர
மேவிய விந்திறங்கா வசியமாமே.
                                              

                                                                     -சந்திர ரேகை                       

பொருள்:
                    பெண்களை சேரும் முன் உம்-யம் என்று 108 முறை
எண்ணியவாறு முச்சை இழுத்தடக்கி செபித்திவிட்டு பின்பு
புணர்தால் விந்து இறங்காது.இதனால் ஆனந்தம் அடைந்த
பெண்கள் உன்னிடம் வசியமாவார்கள்.

மாரண சூட்சமம்- கோரக்கர்

சொல்லிடுவேன் மாரணத்தின் சூட்சம் தன்னைச்
சுருக்காகப் பூரணமாய் வாசிகூட்டி
நல்லதொரு உம் நம் மென்றிழுத்த டக்கி
நாட்டிலுன்னை எதிர்த்தோர்க்கு சாபம் ஈந்தால்
தொல்லைமிக வடைந்திடுவார் துலங்க மாட்டார்
துரிதமுடன் வல்லரக்கர் எதிர்நில்லார்கள்
                                                         

                                                                              -சந்திரரேகை(117)
பொருள்:
                
முச்சை இழுத்தடக்கி உம்-நம் என்று 16 உரு  மனதினில் செபித்து
நாட்டில் உன்னை எதிர்வர்களுக்கு சாபம் கொடுத்தால் அது
பலித்துவிடும். மந்திரம் சித்தியடைய வேண்டுமானால் முதலில்
ஓம் உம் நம் என்ற இம்மந்திரத்தை 1008 உரு செபிக்க
சித்தியாகும். பின்னர் பிரயோகம் செய்ய சித்தியாகும்

இதனால் உன் எதிரிகள் பல தொல்லைகளுக்கு ஆளவார்கள்.
அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் விலங்காமல்
போய்விடும்.  இதனால் எப்படிபட்ட கொடியவர்களும் உன் எதிரில்
நிற்க அஞ்சுவார்கள் என்கிறார் கோரக்கர்.

புதன், 5 செப்டம்பர், 2012

பேய் பில்லி சூனியம் நீங்க


மருதோன்றி(மருதாணி) விதைகளை இடித்து கரி நெருப்பின் மேல்
போட்டால் புகை வரும். அந்தப் புகையைப் பிடித்து வந்தால்
மனிதர்களுக்கு ஏற்படும் பில்லி, சூனியம், பேய், பூதம் நீங்கும் என்பர்.



இன்றும் கேரளாவிலும், நம் நாட்டின் சில இடங்களிலும் பேய், பிசாசு,
 பில்லி, சூனியம் விரட்டுபவர்கள் இந்தப் புகையை உண்டாக்கி விரட்டி வருகின்றனர்.

அகத்தியர் அருளிய காட்டேரி வசிய மந்திரம்


'' அன்று காட்டேரி தேவதை தன்னை
அன்புடனே வசப்படுத்த மந்திரபீஜம்
இன்றுநீ ஓம் சிங் வங் டங் என்று லட்சம்
இசை பெறவே செபித்திட நற்சித்தியாமே
.

-12வது மந்திர காண்டம்(அகத்தியர் பன்னிருகாண்டம்)

விளக்கம்: அன்புடனே காட்டேரி தேவதையை வசியம் செய்ய மந்திரம்,

' ஓம் சிங் வங் டங் " என்று ஒரு லட்சம் முறை வடக்கு திசை அமர்ந்து செபிக்க மந்திரம் சித்தியாகும்.

எளிய மருத்துவ குறிப்புகள்

 1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்

9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வர குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

ஜல தம்பனம் - நீர் மேல் நடக்கும் சித்து


சூரியனை அரவுதொடும் செவ்வாய் வாரம்
 தீண்டயிலே கொடுவேலி நத்தைச் சூரி

வீரியமாய் காப்புக் கட்டி பிடுங்கி வந்து
வித்துவேசணி நமச்சிவாய வென்று

காரியமாய்க் குளிசமிட்டுச் சூரி வேரைக்
கட்டியே வாரி தனில் நடந்து பாரே
வீரியமும் வீழாது சலம் தம்பிக்கும்
விள்ளாதே கொடிவேலி விளம்புவேனே
                                                 
                                         -மச்சமுனி பெருநூல் காவியம் -800

பொருள் :
சூரிய கிரகணம்,செவ்வாய்க் கிழமை வரும் நாளன்று கிரகணம்
பிடிக்கும் போது "கொடிவேலி" "நத்தைச் சூரி" இரண்டு மூலிகை
களை காப்புக் கட்டி,"ஓம் வித்து வேசணி நமச்சிவாய" என்று 108உரு
செபித்து இரண்டு மூலிகைகளின் வேர்களையும் சேர்த்துக்கட்டி ஒரு
செப்பு தாயத்தினில் அடைத்து இடுப்பில் கட்டிக் கொண்டு ஏரி, குளம், கடல் போன்றவைகளில் உள்ள தண்ணீரின் மேல் நடக்கலாம் என்றும் அந்த நீர்
உறைந்து ஸ்தம்பித்து விடும் என்றும்  மச்சமுனி பெருநூல் காவியம் 800ல்
மச்ச முனிவர் குறிப்பிடுகின்றார்.

                                     பகிர்வில் S.கலைச்செல்வன் M.A