ஞாயிறு, 13 அக்டோபர், 2013

சர்வ வியாதிகள் நீங்க மந்திரம்


ஓம் அங் நங் கிலிகிலி என்று 1008 உரு செபிக்க மந்திரம் 
சித்தியாகும். பின்னர் வலது கையில் விபூதி பரப்பி

 
அதில் 'ஓம்' என எழுதி இம்மந்திரத்தை 108 உரு செபித்து 
அந்த விபூதியை  நோய்வாய்ப்பட்டவர்க்கு கொடுத்து 
அதை பூசியும் உண்டும் வர சொல்ல உடலில் உள்ள 
சகல நோய்களும் நீங்கி விடும். மற்றவர்கள் இவ்விபூதியை
பூசி வர சகலதோசங்களும் நீங்கி நன்மை உண்டாகும்.
 
பகிர்வில் சு.கலைச்செல்வன் எம்.ஏ

செவ்வாய், 1 அக்டோபர், 2013

கார்த்தியாயணி எட்சிணி


"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் நமோ பகவதி
கார்த்தியாயணி எட்ச எட்ச மமகார்யம் ஸாதய ஸாதய
சுவாகா."

       இம்மந்திரத்தை நாளொன்றுக்கு1008 உருவீதம் 40 நாட்கள் 

செபித்தால் சித்தியாகும். இதை வனத்தில் தனியாக இருக்கும் அரசமரத்தின் அடியில் அமர்ந்து செபிக்கவேண்டும்
நிவேதனம்:
மல்லிகை பூ,தாமரை பூ, தேன்,பால்,திராட்சை,கற்கண்டு,

பழம்,தேங்காய் முதலியன வைத்து தூபதீபம் காட்டி வணங்கி 
செபிக்க எட்சிணி ஓர் அழகான மின்னல் கொடிபோல் எதிரில் 
வந்து நிற்கும். உடனே தீபதூபம் காட்டி தாயே நான் 
நினைத்தபோது தரிசனம் தந்து என் வேலைகளை முடித்துத்தர
வேண்டும் என்று வேண்டினால் அப்படியே செய்து முடிக்கும்.
ஒரு சீட்டில் நினைத்த பெண்ணின் பெயரை எழுதி 

அதைப்பூசையில் வைத்து மந்திரத்தை 1008உரு செபித்தால் 
அந்த இடத்திற்கு அப்பெண் மறுஇரவில் வந்து சேருவாள்.
ஆனால் கற்பழித்தால் மகா பாதகம் ஏற்படும்.

பேய் பிடித்தவர் நமது பெயரை சொன்ன மாத்திரத்தில் அதன் 

பேர் சொல்லிமுடி எடுத்து கொடுத்து விட்டு சத்தியம் செய்து விலகிவிடும். எல்லாவிதசுரம்,தலைவலி,பல்வலி,கண்டமாலை,காமாலை இவைகளுக்கு தண்ணிர் மந்திரித்துக்கொடுத்தால் குணமாகும். 
வைப்பு, ஏவல், காட்டேரி, சூனியம், பில்லி  இவைகளுக்கு 
விபூதி மந்திரித்து கொடுத்தால் போதும் குணமாகும்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மீன்பிடி வித்தை


மீன்பிடி வித்தை
விஷ்ணுகரந்தை,குங்கிலியம்,சாம்பிராணி இம்மூன்றையும் 
பசும்பால் விட்டரைத்து மீனவர் வலையில் தெளித்து அவ்வலையில் 
மீன் பிடிக்கஅதிக மீன்கள் அகப்படும்.


மீன்பிடிபடா வித்தை
அண்டங்காக்கையைக் கொன்று அதை எரித்து எரித்தசாம்பலை 

ஓர் வாழையிலையில் பரப்பி அதில் "நசிநசி" என்று எழுதி அதற்கு
சாம்பிராணிகாட்டி "நசிநசி" என்று 1008 உரு செபிக்க மந்திரம்
சித்தியாகும். 


அண்டங்காக்கை
 பின்னர் அச்சாம்பலை எடுத்து பத்திரப்படுத்தி
வைத்துக்கொண்டு தேவையானபோது அச்சாம்பலில் ஓர் 

சிட்டிகைஎடுத்து மீனவர் வலையில் தூவிவிட 
அவ்வலையில் மீன்கள் அகப்படாது.
அம்மீனவன் என்னபாடுபட்டாலும் மீன் மாட்டாது.

ஆனால் இது பாவமான செயலாகும்.

பகிர்வில்
சு.கலைச்செல்வன்

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

விஜய பைரவ மந்திரம்



ஓம் நமசிவாய பைரவாய உக்ர உக்ர
ஜெய ஜெய ஸ்தம்பய ஸ்தம்பய
ஜம் ஹ்ரீம் ஸ்ரீம் துஷ்ட சேதனவீரா
மாய மந்திர ஜடதரா ஹராய் ஹீம்பட் ஸ்வாஹா.


இம்மந்திரத்தை அமாவாசை நாளில் பூர நட்சத்திரத்தில் வில்வமரத்தடியில்அமர்ந்து கொண்டு 1008 உரு செபிக்க
சித்தியாகும்.
 

 

பின்னர் விபூதியை கையில் வைத்துக்கொண்டு 108 
உருவேற்றி அவ்விபூதியை காடுகளில் தூவிவிட 
அக்காட்டிலுள்ள மிருகங்கள் ஓடாமல் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும்.இது மிருக தம்பனமாகும்.

அக்காலத்தில் வேட்டைக்கு செல்லும் மன்னர்களும், காடுகளில் 
வாழும் மலைவாழ் மக்களும் இது போன்ற மந்திரங்களை 
பயன்படுத்தி வேட்டை ஆடுவார்கள்.
 பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

குழந்தைகளுக்கு நோய்வராத வித்தை


பிள்ளைபெற்ற தாய்மார்கள் நாய் மண்டையோட்டை 
தண்ணீரிலிழைத்து மார்பில் தடவினபடியே குழந்தைகளுக்கு 
பால் கொடுக்க அக்குழந்தைக்கு எக்காலத்திலும் நோய்வராது. 
அப்படி மீறி வந்தாலும் சீக்கிரத்தில் தீர்ந்துவிடும்.
 
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

சித்தர் தரிசன மார்க்கம்


நம்மில் பலரும் சித்தர்களின் மந்திரங்களையும், 
ஜாலவித்தைகளையும், வைத்தியங்களை அவர்களின் 
நூல்களின் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது.
அவற்றுள் பலவும் பரிபாசைகளாகவே இருப்பதால் அவற்றை 
பொருள் கொள்ளுதல் இயலாத காரியமாகிறது.
அப்படி சித்தர்களின் வழியை தேடி செல்வோர்க்காக 
சித்தர் தரிசன மார்க்கம் என்ற இவ்விடுக்கையில்
 உங்களுக்கு சித்தர்களின் தரிசனத்தை காட்டும் 
மந்திரத்தை வெளியிடுகின்றோம்.


 சித்தர் தரிசன மந்திரம்


இம்மந்திரத்தில் நீங்கள் எந்த சித்தரை தரிசிக்க 
எண்ணுகிறீகளோ அவரின் பெயரை இடைவெளி 
விட்ட இடத்தில் நிப்பி செபிக்கவும்.
இம்மந்திரத்தை உடல்,மனசுத்தியுடன் அதிகாலை 
நேரத்தில் 108-உரு விதம் 48 நாட்கள் செபித்து வர 
சித்தர்கள் உனக்கு காட்சி தந்து தீட்சையை தந்து மெய்ஞான 
வழியை காட்டுவார்கள். முழுநம்பிக்கையுடன் 
செபிப்பவர்களுக்கு 48 நாட்களுக்குள்ளாகவே பலன் கிடைக்கும்.
 
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

பூனையை எலிவெல்லும் ஜாலம்

எருக்கம்செடி
குப்பைமேனி
எருக்கம்பாலும்,குப்பைமேனிச்சாறும் கலந்து 
ஓர் எலிக்கு உடல்முழுவதும் பூசி பூனையின் எதிரில் 
விட்டால் பூனையானது வெறி பிடித்ததைப்போல 
அவ்வெலியை சுற்றி வருமேயன்றி அதை ஒன்றும் செய்யாது.
எலியை எடுத்துப் போட்டுவிட்டால் தான் அவ்விடத்தை விட்டு பூனை விலகும். 

 

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A